Jump to content

லசந்த: உறங்காத விழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த: உறங்காத விழிகள்

on January 8, 2019

IMG_0085.jpg?zoom=2&resize=1200,550&ssl=

பட மூலம், Selvaraja Rajasegar

2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான் விடயம் எம் காதுகளுக்கு எட்டியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புக்காக நாம் தயாராக இருந்தோம். அவ்வேளையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர யாப்பா திணைக்களத்தின் கீழ் தளத்தில் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பத்து முப்பது மணிக்கு கேட்போர் கூடத்துக்கு வருகை தரும் அமைச்சர் அன்றைய தினம் அமைச்சரவை ஊடக சந்திப்பிற்காக ஒரு தளத்தை ஏறி வருவதற்கு சுமார் 1 1/2 மணித்தியாளத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டார். அவர் வருகை தந்த உடனே எவரும் எதையும் கேட்பதற்கு முன்னதாகவே, எதையுமே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

லசந்தவின் கொலையானது அரசாங்கத்தால் முகம் கொடுக்க முடியாத அளவிற்கு பாரதூரமான ஒரு சம்பவமாகியது. அனைவரும் திகைத்து நின்றனர். அனைவரது முகங்களிலும் பெரும் கவலையும் கோபமும் வெளியாகியது. ராஜபக்‌ஷ அரசாங்கமானது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாததொரு இருண்ட யுகத்திற்கு நாட்டை தள்ளிவிடப்போகிறது என அனைவரினது முகங்களிலும் சொல்லாமல் சொன்ன கதையாக இருந்தது. பிரச்சினை என்னவெனில் லசந்த படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கழிந்தபோதும் அத்தீய உருவத்தின் இருள் சூழ்ந்த நிழல் இன்றும் சமூகத்தைச் சூழ்ந்து இருப்பதேயாகும். அந்த இழிநிலையில் இன்றும் சமூகம் தங்கியிருப்பதே. நாம் எவ்வளவு தூரம் ஆற்றலற்றவர்களாக, துஷ்டர்களாக, பின்தங்கியவர்களாக இருக்கின்றோம் என்றால் இன்றைய ஜனவரி 08ஆம் திகதியிலும் கூட நாம் இருப்பது லசந்த கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகிருந்த அதே காலகட்டத்தை ஒத்த இடத்திலாகும். 10 வருடங்கள் கழிந்துள்ள போதும் அந்தக் கொடூரமான கொலையின் உண்மையை வெளிக்கொண்டுவர முடியாத நிலை இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையாக அத்தீய செயலுக்கு எமது மனச்சாட்சியிடமிருந்து கூட மன்னிப்பு கிடைக்கமாட்டாது.

2009 ஜனவரி 08 காலை லசந்தவுடன் தொடர்பு கொண்டிருந்த ஐந்து தொலைபேசி இலக்கங்களை அடையாளம் காண்பதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த போதும், ஜேசுதாசன் என்பவருடைய அடையாள அட்டை இலக்கத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பற்றிய விபரங்களை மட்டுமே அவர்களால் கண்டறிய முடிந்தது. அதுவும் ஜேசுதாசனை விசாரணை செய்த போதுதான். இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பியவன்ச என்பவர் தமது அடையாள அட்டை இலக்கத்தில் தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ததாக யேசுதாசன் அதன் போது தெரிவித்திருந்தார். பியவன்ஸ பற்றிய விசாரணையின் போது மருதானையின் திரிபொலிமார்கட் கட்டடத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விசேட புலனாய்வு செயற்பாட்டு பிரிவு தொடர்பான தகவல்கள் அறியக்கிடைத்துள்ளன. பியவன்ச என்ற நபர் அவ்விடத்தில் கடமை புரிந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜேசுதாசன் 2012இல் மரணமடைகின்றார். அதுவரையிலும் பியவன்சவிடம் வாக்குமூலமொன்றினைப் பெறுவதற்கு லசந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குழுவானது நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமையிலேயே நீதிமன்றமானது இவ் விசாரணை நடவடிக்கைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கட்டளை இட்டிருந்தது. அதுவும் 2016 ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறைவேறியது.

பியவன்சவிடம் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கான தேவைப்பாடு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இருப்பதாக தெரிவித்தாலும் இராணுவம் அதற்கு இசைவான ஒத்துழைப்பினை வழங்கவில்லை. நீதிமன்றமானது மீண்டும் மீண்டும் கட்டளையிட்டதன் அடிப்படையில் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் இராணுவத்தினரால் பியவன்ச குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவர் மட்டுமல்லாது, உயர் அதிகாரிகள் இருவருடனேயே நிறுத்தப்பட்டார்.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தின் கிழக்கு பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய இராணுவ பிரதானி ஒருவரால் அது தொடர்பிலான தகவலொன்று வழங்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவலொன்று தமக்குக் கிடைத்துள்ளதாக இராணுவத்தின் உயர் அதிகாரியால் வினவப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததாக செய்திகள் இருந்தன. இராணுவ அதிகாரி இந்தத் தகவலை காலை 9.00 மணியளவில் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது. லசந்த படுகொலை செய்யப்பட்டது அன்று காலை 10.30 மணிக்கேயாகும். ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தில் இந்தத் தகவலைப் பெற்றுக் கொண்ட அதிகாரியால் லசந்த கொலை விசாரணை இடம்பெற்ற போது மேற்படி தகவல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் தெளிவுபடுத்தியதாகவும் அறியக் கிடைத்துள்ளது. ஆயினும், இந்த எந்தவொரு விடயத்தின் பின்னாலும் செல்லாத அல்லது சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை தவறவிட்டிருக்கும் ஒரு விசாரணையாகவே லசந்த படுகொலை விசாரணையானது இன்று காணப்படுகின்றது.

2016 செப். 27ஆம் திகதி லசந்தவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. முறையானதொரு நீதிமன்ற செயற்பாட்டுக்காகவே அது இடம்பெற்றது. லசந்தவின் உடலை விசாரணை செய்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கையும், விக்ரமதுங்கவின் மரண விசாரணைக்குரிய அறிக்கையும், அரச பகுப்பாய்வு அறிக்கையும் ஒன்றுக்கொன்று முரணான விடயங்களையே சுட்டிக் காட்டின. இவ்வாறு சுட்டிக் காட்டிய வேறுபாடுகள் காரணமாகவே உடல் மீண்டும் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மரண விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றின் முன்னிலையில் விடயங்களை தெரிவித்திருந்தனர். லசந்தவை கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதமானது வெளிநாடுகளில் பன்றிகளையும் ஆடுகளையும் அறுப்பதற்காக பயன்படுத்தும் ஆயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. லசந்தவின் கழுத்துப் பகுதியில் கூரிய வெட்டுக் காயம் ஒன்று காணக்கூடியதாக இருந்தமை அவ் விசேட ஆயுதத்தால் தாக்கியமையினால் ஆகும்.

ஆயினும், இவ் அனைத்தினதும் இறுதியில் லசந்தவின் படுகொலையானது கொலையாளி இல்லாத ஒரு கொலையாகவே காணப்படுகின்றது. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதியினது இராணுவப் போற்றல் கூட அதற்கு காரணமாக அமைந்தது. லசந்தவின் படுகொலையானது தற்போது பத்திரிகையில் மாத்திரம் எழுதப்படுகின்ற, எப்போதாவது அரசியல்வாதிகள் ஓரிருவரால் மீண்டும் உச்சரிக்கப்படுகின்ற வசனம் மாத்திரமேயாகும். இக்கொலை இடம்பெறுகின்ற போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டபாய ராஜபக்‌ஷவாகும். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவிருந்தார். இவ்விருவரிடமும் இன்றுவரையில் லசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. நல்லாட்சி அரசானது லசந்தவின் உயிரில்லா உடலின் மீதேறியே உருவாக்கம் பெற்றது. லசந்தவின் எழும்புக் கூட்டைக் கூட சிறிது காலம் அரசியல் தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், தற்போது மைத்ரிபால சிறிசேன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரையிலான எவரும் லசந்த பற்றி வாய் திறப்பதே இல்லை.

ஜனவரி 08ஆம் திகதி காலை பொரளை மயானத்திற்கு லசந்தவை நினைவுகூருவதற்காக வருகைதரும் பிரபல்யமான சிலர் உள்ளனர். ரவி கருணாநாயக்க அவர்களுள் ஒருவர். லசந்தவின் படுகொலை தொடர்பில் துளியளவேணும் ரவி இதுவரையில் செய்யவில்லை. ரவி கருணாநாயக்க ஒன்றை மட்டும் செய்தார். 2015 ஜனவரி 08இற்கு பிறகு லசந்தவின் தலைமையில் செயற்பட்ட பத்திரிகை இரண்டையும் லாவகமாக தம்வசப்படுத்திக் கொண்டதை மட்டுமே செய்தார். அவர் இரு பத்திரிகைகளினதும் சட்டரீதியற்ற உரித்துடையோன் ஆனார். நல்லாட்சி அரசும் லசந்த படுகொலை விசாரணையை தளர்த்தி விடுகின்றபோது லசந்தவைப் பற்றியதொரு செய்தியை வெளியிடுவதற்கு ரவி தரப்பைச் சார்ந்த இரு பத்திரிகைகளினதும் முகாமையாளர்கள் இடமளிக்கவில்லை. மிகக் கடினமான சூழலில் இந்தச் செய்தியினை பிரசுரித்தது ஆசிரிய குழுவின் பெரும் தேவையின் அடிப்படையிலாகும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 08ஆம் திகதி லசந்தவை நினைவு கூறுவதற்கு பொரளை மயானத்திற்கு வருகைதரும் நண்பர் ரவி கருணாநாயக்க லசந்தவிற்காக அர்ப்பணித்தது இவ்வாறுதான்.

லசந்த ஓர் ஊடகவியலாளராக மிகவும் கடினமான செயற்பாட்டினை மேற்கொண்ட முழுமையான ஒரு தொழில்வாதியாவார். அவருக்குச் செய்திகளை தேடிச் செல்வதில் நித்திரையின்றிய, களைப்பின்றிய கண்களும் தேகமும் பலமாக அமைந்தன. லசந்தவிற்கு என்னவகையிலான அநீதிகள் இடம்பெற்றாலும் அவர் ஊடகத்துறைக்காக அர்ப்பணிப்பு செய்த பணி என்றென்றும் முன்மாதியான ஒரு விடயமாக சதாகாலம் நிலைத்திருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 “දස වසරකට පෙර උදුරා දැමුණු නිදි නැති ඇස ලසන්ත” என்ற தலைப்பில் விமலநாத் வீர ரத்ன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 

https://maatram.org/?p=7463

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
    • 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.  இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.