Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரித்தன ஹர்த்தாலுக்கு அழைப்பும், முறியடிக்க வேண்டிய முஸ்லிம்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
-எம்.ரீ. ஹைதர் அலி-
 
வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். என்ற உண்மை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும்.
 
வட மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் முகமாக தமிழர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட முஸ்லிம் மக்களை கௌரவிக்கும் முகமாக முஸ்லிம் ஒருவரும் ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.
 
மதத்தினால் இருவரும் வேறுபட்டாலும், மொழியினால் இவர்கள் இருவரும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த ஆளுநர்கள் என்ற வரலாற்றினை அரியாத சிலர் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தங்களது இனவாத குரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
கிழக்கு மாகாண ஆளுநராக. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை சில குறிப்பிட்டு சொல்லக்கூடிய தமிழ் தலைமைகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளுபவர்களால், ஊடகங்களிலும், முகநூல்களிலும் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும்.
 
கிழக்கு மாகாண ஆளுநராக கடமையேற்றுள்ள கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் தனது மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் தனது சேவையினை வழங்குவதற்கு முன்னரே நீங்கள் உங்களின் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்பெற போகின்றன என்பதைகூட அவதானித்து செயற்பட உங்கள் மனங்களில் இடமில்லாமல் இப்போதே இனவாத கருத்துக்கள் பதிந்து விட்டன.   
 
தான் ஒரு சமூகத்திற்கான ஆளுநராக செயற்படப் போவதில்லை எனவும், இன ஐக்கியத்துடன், ஒற்றுமைப்பட்டு கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுமாறும் தனது ஆளுநருக்கான கடமையினை பொறுப்பேற்ற பின்னர் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. இதிலிருந்தாவது அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்றதைகூட அறிய முற்படாத சுய புத்தியற்ற இனவாதக் கொள்கையினை மாத்திரம் கொண்டு செயற்படும் நபர்களா நீங்கள்.
 
தமிழ் இனத்தினை அழித்தவர்கள் தமிழினத்தின் உரிமையினை பற்றி ஊடகங்களில் பேசுவதுதான் வேடிக்கையாவுள்ளது. உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்தவர்கள் நீங்கள். நீங்கள் உயிருடன் இருப்பதற்காக உங்களின் போராட்டம் என்ற வார்த்தையினை நம்பி வந்த மக்களை காட்டிக் கொடுத்து அழித்தவர்கள் நீங்கள். இன்று நீங்கள் சுகபோக வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இன்றும் உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் சமூகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
 
உங்களுக்கு இப்போது தேவைப்படுவது, தமிழ், முஸ்லிம் பிரிவினைவாதமே அவ்வாறு பிரிந்து செயற்பட்டால்த்தான் நீங்கள் சாகும்வரை சுகபோகத்தினை அனுபவிக்க முடியும். தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டால் உங்களின் சுகபோக வாழ்க்கைகளும், பதவிகளும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இன்று இனவாதத்தினை தூண்டிவிட்டு அதில் குளிர்காய பார்க்கின்றீர்கள்.
 
ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமனத்திற்கே கொக்கறிக்கும் நீங்களா வட, கிழக்கை இணைத்து முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை தரப்போகின்றீர்கள். இணைப்புக்கு முன்பே உங்களின் செயற்பாடுகள் இவ்வாறு இருந்தால் இணைத்தால் எவ்வாறு அடிமைப்படுத்தி ஆழ நினைப்பீர்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
 
11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். வெள்ளிக்கிழமை நாட்களில் முஸ்லிம்களின் விஷேட தினம் என அறிந்து அன்றைய நாட்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடுவார்கள் என்று நன்றாக தெரிந்துகொண்டு நரித்தனத்துடன் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்.
 
அன்றைய நாளில் உங்களின் ஹர்த்தாலை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் காண்பித்து கிழக்கு மாகாணம் பூராக முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு அனைத்து இன மக்களும் தங்களது எதிர்ப்பினை காண்பித்துள்ளார்கள் என்று பொய்ச்செய்தியினை வடிவமைப்பதற்கு திட்டமிடப்பட்ட நாள்தான் வெள்ளிக்கிழமை.
 
எனவே, இரு இனங்களுக்கும் இடையில் குழப்பத்தை உண்டு பன்ன நினைக்கும் இவ்வாறான தீய சக்திகளின் விசமிகளின் ஹர்த்தாலினை தோல்வியுறச் செய்வதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்களது வர்த்தக நிலையங்களை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து இவர்களின் இனவாத ஹர்த்தால் செயற்பாட்டினை முறியடிக்க முன்வரவேண்டும்.

 

http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_171.html

 
 
 
ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவிக்கு சவால் விடுபவர்கள் யார்..? அதன் பின்னணி என்ன...??
 
 
0
 

 

Hisbullah-065.jpg
தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
 
இவ்வாறு தமிழ் மக்களை தூண்டுபவர்கள் யார் ? தமிழ் மக்களால் அங்கீகரிக்கப் பட்டவர்களா ? அல்லது நிராகரிக்க பட்டவர்களா ?
 
விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகளும் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமே தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்.
 
இவ்வாறான தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஹிஸ்புல்லாஹ் அவர்களை பதவி விலக்குமாறு கோரினால் அது தமிழ் மக்களின் கருத்து என்று ஏற்றுக்கொள்ள முடியும்.
 
ஆனால் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது எதிர்கால அரசியலுக்காக விளம்பரம் தேடுபவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால் அதன் பின்னணி என்ன என்று சிந்திக்க வேண்டும்.
 
2௦12 இல் கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவடைந்ததுடன், தாங்கள் நிபந்தனையின்றி ஆதரவு வழங்குகிறோம், நீங்களே முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்று முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேசக்கரம் நீட்டியது. அதனை மு.கா மறுத்திருந்தது.
 
சில தமிழ் உறுப்பினர்களின் ஆதரவில் நஜீப் ஏ மஜீத் அவர்களும் பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் நசீர் அஹமட்டும் முதலமைச்சர்களாக பதவி வகித்தார்கள்.
 
அப்போது எந்தவொரு தமிழ் தரப்பினர்களும் இவர்களை இனவாதக் கன்னோட்டத்துடன் பார்க்கவில்லை. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமாகும்.  
 
அப்படியிருக்கும்போது இன்று ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கியதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
 
இது ஹிஸ்புல்லாஹ் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவா ? அல்லது அவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காகவா ?
 
அல்லது முஸ்லிம் மக்களின் அதிகமான அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் இது வழிநடத்தப்படுகிறதா ?
 
அல்லது ஹிஸ்புல்லாவுக்கு தெரியாமல் தங்களது கட்சியை கிழக்கில் வளர்ப்பதற்கு சுதந்திர கட்சியினர் செயல்படுகின்றார்களா ?
 
அல்லது மஹிந்த தரப்பாரின் குழப்புகின்ற நடவடிக்கையா ? என்று பல்வேறு கோணத்தில் ஆராயப்பட்டது.
 
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விடுதலை புலிகளை பகைத்துக்கொள்ளவில்லை. மாறாக பலவித உதவிகளை புலிகளுக்கு செய்திருந்தார்.
 
அப்போது ஒரு தொகை இருசக்கர மோட்டார் வண்டிகளை ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புலிகளுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது அன்றைய பத்திரிகையிலும் வெளிவந்த செய்தியாகும்.
 
தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக கிழக்கில் அரசியல் செய்கின்ற சிலர்தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
 
கிழக்கில் இன முரண்பாடுகளை தோற்றுவித்து, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வன்முறைகளை தூண்டுவதன் மூலம், தங்களது எதிர்கால அரசியலை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கைதான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான கோசம் என்பது புலனாகின்றது.
 
எனவே இந்த விடயத்தில் இரு சமூகங்களின் அரசியல் தலைவர்களும், சிவில் சமூகத்தினர்களும் மிகவும் விழிப்பாக செயல்படுவதுதான் ஆரோக்கியமான விடயமாகும்.
 
முகம்மத் இக்பால் 

ஹிஸ்புல்லாவை பதவி நீக்கு - இனவாத ஹர்த்தாலுக்கு அழைப்பு

 
Wednesday, January 09, 2019  Jaffna Muslim  11
 

 

index.jpg
கிழக்கு மாகாண ஆளுனராக கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழ் இனவாத நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
index.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா ரொம்ப நல்லவர் என்று இந்தக் கட்டுரை புகழ்கின்றது. ஆனால் அவர் வடக்கு-கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று சொன்னதை ஏன் கட்டுரை கவனமாகத் தவிர்த்துள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும்.

கொழும்பான் யாழில் கருத்து எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் இரத்தக்கொதிப்பு  வரவேண்டுமென்றா இப்படியான கட்டுரைகளை இணைக்கின்றீர்கள்?

இந்தக் கட்டுரைகளும் மிகவும் ஒருபக்கச் சார்பானவை என்பது கட்டுரையில் உள்ள சொற்களை வைத்தே அடையாளம் காணமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.