Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் பித்தலாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் பித்தலாட்டம் `

அரசியல்வாதிகள் என்றால் எதையும் எப்படியும் சொல்லலாம். அவரவர் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்புடையதாகக் கூறலாம். தாம் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்மாறாகக் கருத்துக் கூறலாம். மக்கள் மறந்து விடுவார்கள்; அவர்கள் ஏமாளிகள்; அரசியல் மடையர்கள் என்று கருதியே எண்ணியே அரசியல்வாதிகள் இவ்வாறு நடக்கின்றார்கள். பெரும் சந்தர்ப்பவாதிகளாகத் திகழ்கின்றார்கள்.

அரசியல் என்பது வெறும் ஏமாற்றும், போக்கிரித்தனம் நிறைந்ததும் என்று அந்தச் சகதிக்குள் கால் வைப்பவர்களில் பலரும் நினைக்கின்றார்கள். தாங்கள் சொல்வதை எல்லாம், கேட்டுக் கேள்வி இல்லாமல், ஆய்வு ஆராய்ச்சி இல்லாமல், தேவாமிர்தம் என நினைத்து மக்கள் விழுங்கி விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை அவர்களுக்கு. அதுவே அவர்களது "மூன்றாம் தர' உழைப்பாகியும்விட்டது.

ஆயின், அவர்கள் கணிப்பது போன்று, மக்கள் மடையர்களும் அல்லர்; ஏமாளிகளும் அல்லர்; இத்தனை பீடிகைகளும் ஏன் என்று நினைக்கிறீர்களா? என்ன செய்வது...? ஜனதா விமுக்தி பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க கூறியதாக வெளிவந்த விடயம் ஒன்றைப் படித்த போது மக்களை வாக்காளர்களை அரசியல்வாதிகள் மேற்சொன்ன வகையிலேயே எடைபோடுகிறார்கள் என்று நொந்துகொள்ள வைத்துள்ளது. அவ்வளவுதான்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்திருப்பது இதுதான்.

தற்போதைய நிலையில் அரசாங்கம் எந்த வகையிலும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது. ஆயினும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்கக்கூடாது.

எதனைக் கருதி, அல்லது என்ன அர்த்தத்துடன் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்? தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்பது அவரது கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு எந்தளவுக்குச் சாத்தியமானது அல்லது சாத்தியமற்றது என்பது தனியாக, விரிவாக ஆராயப்படவேண்டியது.

தமிழ் மக்களின் எந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவரது கட்சி ஜே.வி.பி. விரும்புகிறது? தமிழர்களின் வாழ்வுரிமை உள்ளடங்கலான அரசியல் உரிமைகளையா? அல்லது அவர்கள் இந்த நாட்டின் இரண்டாந்தரப் பிரசைகள் என்ற நிலைப் பட்ட உரிமைகளையா?

தமிழர்கள் அவாவுகின்ற, அவர்களின் பறித்தெடுக்கமுடியாத, அரசியல் உரிமைகளுக்காகவே அவர்கள் கடந்த அறுபது வருடங்களாகப் போராடி வருகிறார்கள். தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் காலத்துக்குக் காலம் வடிவங்களில் மாறியிருக்கலாம். ஆனால், இலக்கு ஒன்றுதான் என்பதை ஜே.வி.பியினர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் புரிந்து கொள்ளாத கற்றுக்குட்டிகளாகவே இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது!

இந்த நாட்டின் இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ்வதற்கான உரிமைகள் வேண்டும் என்று தமிழ் மக்களோ, அவர்களது தலைவர்களோ எப்போதும் கேட்டதுமில்லை; அவற்றுக்காகப் போராடியதுமில்லை. சிங்கள மக்களுக்குச் சரிசமமாக, அவர்களுக்குள்ள சகல உரிமைகளுடனும் இங்கு வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என்பதே தமிழர்களின் பலசகாப்த காலப் போராட்டமாக இருந்தது. இப்போதும் அடிநாதமான கோரிக்கை அதுவே.

தமிழர்களை இரண்டாந்தரப் பிரசைகளாக்கும் அநியாயச் சட்டங்கள் இலங்கையில் கொண்டுவரப்பட்ட போதெல்லாம், அவற்றுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து ஆக்ரோஷமாகப் போராடியவர்கள் தமிழர்கள், அவர்களின் மூத்த தலைவர்கள் என்பதனை அனுர திஸநாயக்க வரலாற்றுப் புத்தகத்தில் படிக்கவில்லைப் போலும்!

சமஷ்டி முறையில் அமைந்த தீர்வு யோசனை நகல் ஒன்று, வழமையான தெற்கின் அரசியல் ""புலுமாசு'' காட்டும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில், வெறுமனே சமர்ப்பிக்கப்பட்டாயிற்று என்பதற்காக, அதிலிருந்து வெளியேறியவர்கள் தான் இந்த ஜே.வி.பியினர்! அது தீர்மானமாக எடுக்கப்படும் என்று சிறு இணக்கங்கள் கூடத் தென்படாதவேளையிலேயே, அந்த மாநாட்டில் இருந்து வெளியேறி, தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர் ஜே.வி.பியினர்.

தமிழர்களின் ஆகக்குறைந்த அரசியல் அபிலாசை, தன்னாட்சி உரிமையை உள்ளடக்கிய சமஷ்டி முறையே என்பது வெளிப்படை. அது கருவுறுவதற்கான சூழல் எதுவும் இல்லாத போதே அதனை ""வீறாப்புடன்'' எதிர்க்கும் ஜே.வி.பி., தமிழர்களின் எந்த உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்று விரும்புகிறது?

மகிந்த சிந்தனையில் எழுந்த அடிமட்ட அரசியல் முறையான ""பஞ்சாயத்து'' வடிவத்திலான அதிகாரப் பகிர்வையே ஜே.வி.பி. நூற்றுக்கு நூறு வீதம் ஆதரிக்கிறது. அதனையே தமிழர்களுக்குரிய தீர்வாக வழங்கவேண்டும் என்று அரசை உள்ளூரவும், பின்னுக்கு மறைந்திருந்தும் நின்று வலியுறுத்தியும் வருகிறது.

அத்தகைய உரிமையையே பாதுகாக்க வேண்டும் என்று ஜே.வி.பி வேறு வரிகளில் கூறும் பித்தலாட்டத்தை என்னவென்று செல்வது...!

காலத்துக்குக் காலம் தெற்கில்

மேடையேறிய இத்தகைய அரசியல் பித்தலாட்டங்களின் தொடராக, இப்போது ஜே.வி.பி. என்ற வடிவத்தில் முளைத்திருக்கிறது. அதனைத் தமிழ் மக்கள் பொருட்படுத்தவேமாட்டார்கள். கொள்ளிக்கண்ணன் ஊரைக் கெடுத்தான் என்றவாறாக முந்தைய சிங்களத் தலைவர்கள் கற்றுக் கொடுத்த அரசியல் தகிடுதத்தத்தை மீண்டும் அரங்கேற்றுகிறார்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பியினர் அவ்வளவு தான். பெட்டைக் கோழி கூவி பொழுது விடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

மூலம் - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.