Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைவாகும் தமிழர்கள்…!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொலைவாகும் தமிழர்கள்…!!

பதிவேற்றிய காலம்: Feb 3, 2019

யாழ்ப்­பா­ணத் தமி­ழர் மத்­தி­யில் நில­வி­வ­ரும் அபிப்­பி­ரா­யங்­க­ளில் ஒன்று யாழ்ப்­பா­ணம் இலங்­கைத் தீவின் தலை என்­பது. தலைப் பகு­தி­யில் வாழ்­ப­வர்­கள் நாட்­டின் போக்­கைத் தீர்­மா­னிப்­பர் என்று தமி­ழர்­கள் நினைக்­கின்­ற­னர். இது சற்று அப­ரி­மி­த­மான கற்­பனை என்­ப­தைத்­தான் கடந்த 70ஆண்­டு­கள் நிரூ­பித்­துள்­ளன.

யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் 100வீதத் திற­மை­யை­யும் கொழும்­பு­டன் ஒப்­பி­டும்­போது 15வீத அடை­வு­கூட இல்லை. தென் னிந்­தி­யா­வில் இருந்து ஆரம்­பக் குடி­யி­ருப்­பு­கள் நிகழ்ந்­த­போது பூந­கரி, மன்­னார்ப் பகு­தி­க­ளுக்கு ஊடா­கவே மக்­கள் இலங்­கைத் தீவுக்­குள் நுழைந்­த­ தற்­கான ஆதா­ரங்­கள் உண்டு.
ஆதி மக்­கள் நீர் நிலை­களை அண்­மித்தே தமது குடி­யி­ருப்­பு­களை அமைத்­த­னர். அவ்­வாறு பார்க்­கும்­போது ஆறு­களோ, நீர்த் தேக்­கங்­களோ, குளங்­களோ இல்­லாத யாழ்ப்­பா­ணத்­தில் ஆதி மக்­கள் குடி­யே­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தின் அமை­வி­டத்தை நோக்­கும்­போது அது ஒரு வகை­ யில் கொழும்­பின் கொல்­லைப் புறமே.

 

ஏனைய மக்­கள் இல­கு­வாக வந்­து­போ­கும் இட­மும் அல்ல(திரு­கோ­ண­மலை போல இல்லை). இந்­தக் கொல்­லைப்­புற வாழ்க்­கை­தான் யாழ்ப்­பா­ணத் தமி­ழரை ஓரம் கட்­டிய முக்­கிய கார­ணி­யா­கும்.

தமி­ழர்­க­ளுக்­குள் பிரி­வினை
யாழ்ப்­பா­ணத் தமிழ் மக்­கள் தமது உறக்­கா­ர­ரு­டன் பழ­கிக் கொள்­வது என்பது குறித்­துப் பல தீர்க்­கங்­க­ ளைக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ‘ஓடும் புளி­யம் பழ­மும்­போல’ எனும் பழ­மொ­ழி­யை­யும் அதன் ஓர் அங்­க­ மா­கக் குறிப்­பி­ட­லாம்.

புளி­யம்­ப­ழத்­தில், ஓடும் உள்­ளி­ருக்­கும் புளி­யும் ஒன்­றாக இருப்­ப­து­போல தெரிந்­தா­லும் அவை இரண்­டுக்­கும் ஒட்­டு­றவு இல்­லை­யென்­பதே அதன் அர்த்­தம். தமது சொந்­தக்­கா­ரர்­க­ளு­டன் ஓடும் புளி­யம் பழ­மும்­போல இருக்க நினைக்­கும் ஓர் இனம் ஏனைய மதத்­த­வர்­க­ளு­ட­னும், இனத்­த­வர்­க­ளு­ட­னும், வேறு மொழி­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும், வேறு பிர­தே­சத் தைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும் நல்­லு­ற­வைப்­பேணி வாழ்­வார்­கள் என்­பதை முழு­வ­து­மாக எதிர்­பார்க்க முடி­யாது. இதுவே யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­டது. இதன் மறு­த­லை­யான ஒரு யதார்த்­தத்­தைக் கேரள மக்­க­ளி­டம் காண முடி­யும்.

 

சிங்­க­ளத்தை எதிர்த்­த­வர்­கள் 
ஏன் ஆங்­கி­லம் கற்­க­வில்லை?
1956ஆம் ஆண்­டில் பண்­டா­ர­நா­யக்­கா­வால் தனிச் சிங்­க­ளச் சட்­டம் கொண்டு வரப்­பட்­டது. அதை எதிர்த்த தமி­ழர்­கள் சிங்­க­ளம் படிப்­ப­தில்லை என்று கூறி­யது நியா­ய­மா­னது. ஆனால், தமி­ழர்­கள் ஏன் ஆங்­கி­லத்­தைக் கற்­க­வில்லை? 2009 ஆம் ஆண்­டுக்­குப் பின்­பான வட மாகாண அலு­வ­ல­கங்­க­ளில் ஆங்­கில, சிங்­கள அறிவு இல்­லா­த­தன் கார­ண­த்தால் கொழும்பு நிர்­வா­கத்­துக்­குச் சம­தை­யா­கச் செயற்­பட முடி­ய­வில்லை.

வலி­கா­மம் கல்வி வல­யத்­தில் கட­மை­யாற்­றிய ஓர் ஆசி­ரியை 2016ஆம் ஆண்­டில் உரிய முறை­யில், உரிய வரை­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு ஓய்­வூ­தி­யத்­துக்­கான தகு­தி­யைப் பெற்­ற­போ­தி­லும் 2018ஆம் ஆண்­டில்­தான் (ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்பு) அவ­ரால் தனக்­கான ஓய்­வூ­தி­யத்­தைப் பெற முடிந்­தது. இதற்­குக் கார­ணம் கல்வி வலய நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ருக்­குத் தமி­ழைத் தவிர வேறு மொழி­கள் தெரி­யா­த­மை­யும், கொழும்­பி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்­குத் தமிழ் தெரி­யா­மல் ஆங்­கி­ல­மும், சிங்­க­ள­மும் தெரிந்­தி­ருக்­கின்­ற­ மையுமே. குறிப்­பிட்ட ஆசி­ரி­யை­யின் ஆவ­ணங்­கள் கொழும்பு ஓய்­வூ­தி­யத் திணைக்­க­ளத்­தி­ட­ மி­ருந்து 4 தட­வை­கள் திருப்பி அனுப்­பப்­பட்டு இழு­ப­றி­நி­லைக்­குட்­பட்­டுள்­ளது. இந்த ஆசி­ரி­ய­ரைப்­போ­லத்­தான் இங்­குள்ள ஓய்­வூ­தி­யர்­கள் பல­ரின் ஓய்­வூ­தி­யங்­க­ளின் நிலை­யும் இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. ஓய்­வூ­திய விட­யம் மாத்­தி­ர­மன்றி இன்­னும் பல விட­யங்­கள் இத­னால் இழு­ப­றிக்­குட்­ப­டு­வது நிகழ்ந்தே வரு­கி­றது.

 

சிங்­க­ள­வர்­கள் இறக்­கு­மதி 
செய்­யப்­ப­ட­லாம்…!
வடக்­குக்­கான புதிய ஆளு­ந­ரின் மும்­மொ­ழிக் கொள்­கையை நடை­றைப்­ப­டுத்­தும்­போது மேற்­கூ­றிய சிக்­கல்­க­ளைத் தவிர்க்க முடி­யும். ஆனால், இத்­த­கைய மும்­மொழி ஊழி­யர்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு வெளி­யில் இருந்தே இறக்­கு­மதி செய்­ய­வேண்­டி­யி­ருக்கும். தற்­போ­துள்ள தமிழ் உத்­தி­யோ­கத்­தர்­கள் ஆங்­கி­லமோ, சிங்­க­ளமோ கற்­றுத்­தே­றிப் பணி­யாற்­று­வார்­கள் என்று எதிர்பார்ப்பது முயற்­கொம்பு. இந்த நிலை­யில் சிங்­கள மொழி­யில் பணி­யாற்­றக்­கூ­டிய ஒரு­வர் தமிழ்ப் பகு­தி­க­ளின் சகல அலு­வ­லகங்க­ளுக்­கும் நிய­மிக்­கப்­பட வாய்ப்­புண்டு.

இதன் மூலம் ஒய்­வூ­தி­யம் பெறு­வ­தில் ஒன்­றரை வரு­ட­கால தாம­தங்­கள் தவிர்க்­கப்­பட்டு ஒரு மாதத்­துக்­குள் அவற்­றைப் பெறும் வாய்ப்பு மக்­க­ளுக்கு ஏற்­ப­டும். இது விட­யத்­தில் தமி­ழர் ஆங்­கி­லம் கற்­கா­தது தமது தலை­யில் தாமே மண் அள்­ளிக் கொட்­டி­ய­தா­கவே இருக்­கும். தமி­ழ­ருக்கு உரி­மை­களை வழங்­கி­னால் அர­சு­டன் இணைந்து செயற்­ப­ட­லாம் என வடக்­கின் முன்­னாள் முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் அண்­மை­யில் கூறி­னார். அவ­ரது கையில் ஐந்து வரு­டங்­க­ளாக அதி­கா­ரங்­கள் இருந்­த­போது மாகாண சபை ஓர் ஆடு­க­ள­மாக இருந்­ததே தவிர, மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றும் மைய­மாக இருக்­க­வில்லை என்­பதை அவர் சடு­தி­யில் மறந்து பேசிய பேச்சு அது.

இலஞ்­சம், ஊழ­லில் 
தமி­ழர் கெட்­டிக்­கா­ரர்
வட பகு­தித் தமி­ழர்­கள் மிக நீண்ட கால­மா­கவே தேசிய அர­சி­ய­லிலோ, தேசி­யப் பொரு­ளா­தா­ரத்­திலோ பங்­கெ­டுக்­காது ஒதுங்­கிக் கொண்­ட­னர். இத­னாலோ என்­னவோ தேசிய ரீதி­யில் போட்­டி­யி­டக்­கூ­டிய வல்­ல­மை­யை­யும், அனு­ப­வத்­தை­யும் அவர்­கள் இழந்­துள்­ள­னர். ஆனால் இலஞ்­சம், ஊழல் ஆகிய விட­யங்­க­ளில் மிக­வும் வினைத்­தி­றன் மிக்­க­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

இது தமிழ்ச் சமூ­கத்­துக்­குப் பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­விட்­டது. அண்­மை­யில் சுன்­னா­கம் பகு­தி­யில் கைப்­பற்­றப்­பட்ட எத­னோல் என்­கிற சாராய ஸ்பிறிட் மூலம் பல கோடி ரூபாய்­களை ஒரு சிலர் உழைத்­தார்­களே தவிர யாழ்ப்­பா­ணத்து மக்­க­ளின் உடல் நிலை பாதிக்­கப்­ப­டும் என அவர்­கள் எண்­ண­வில்லை. ‘‘தம்பி முந்­நூறு ரூபா­யான் ஒண்டு தா’’ என்று கேட்டு வாங்கி இத்­த­கைய தரம் குறைந்த சாரா­யங்­க­ளைச் சாதா­ரண கூலித் தொழி­லா­ளர்­கள் குடிப்­பார்­களே தவிர, அது என்ன சாரா­யம் என்று அறி­யவோ, கேட்­கவோ போவ­தில்லை. குடித்­த­வு­டன் வெறிக்க வேண்­டும் என்­பது அவர்­க­ளின் இலக்கு.

 

ஆரம்­பத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள திரை­ய­ரங்­கு­க­ளில் ‘என்ர ரைமன் பார்’ என்ற பகுதி அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. பொழு­து­போக்கு என்ற ரீதி­யில் குறிப்­பிட்­ட­ளவு போதைக்­குட்­ப­டும்­ப­டி­யாக, நின்ற நிலை­யில் வாங்­கிக் குடிக்­கும் அனு­மதி மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த அனு­ம­தியை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்தி மேசை, கதிரை போட்டு ஆற அமர்ந்து ஆறு­த­லாகப் போதையை அளவு கணக்­கற்று ஏற்­றிக் கொள்­ளும் வச­தி­க­ளைத் திரை­ய­ரங்­கு­கள் தற்­போது ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­ன. மது வரித் திணைக்­க­ளத்­தி­னர் அதைக் கண்டு கொள்­ளாது இருக்­கின்­ற­னர். தமி­ழ­ரின் கையி­லி­ருந்த அதி­கா­ரங்­கள் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டுவ­தால் தமிழ் மக்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். வய­தான தாயோ இளம் பெண்ணோ தங்­கச் சங்­கிலி போட்­டுக் கொண்டு வீதி­யில் நட­மாட முடி­யாத சூழலே இன்­றைய யாழ்ப்­பா­ணத்­தின் கந்த புரா­ணக் கலா­சா­ரம்.

சிங்­க­ள­வ­ரின் நகர்வு
தமி­ழ­ரின் நிலை இவ்­வா­றி­ருக்­கும்­போது 2009ஆம் ஆண்டு வரை அநு­ரா­த­பு­ரம் மகா­போ­தி­யு­டன் தமது வடக்கு நோக்­கிய பய­ணத்தை முடக்­கி­யி­ருந்த சிங்­கள மக்­கள் தமது புனித யாத்­தி­ரையை ஜம்­பு­கோ­ளம், கந்­த­ரோடை, நயி­னா­தீவு நாக­வி­காரை என நீட்­டி­யுள்­ள­னர். அண்­மை­யில் கிளி­நொச்சி ரயில் நிலை­யத்­துக்கு அரு­கில் அறி­வி­யல் நகரை மையப்­ப­டுத்­திப் புதிய ரயில் நிலை­யம் ஒன்று திறக்­கப்­பட்­டது. இது தற்­பொ­துள்ள கிளி­நொச்சி நக­ரின் முக்­கி­யத்­து­வத்­தைப் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கும். பல்­க­லைக் கழ­கம், வர்த்­தக முத­லீ­டு­கள், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி எனப் பல விட­யங்­கள் அறி­வி­யல் நக­ரு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தால், அறி­வி­யல் நகர் கிளி­நொச்சி வாசி­கள் அல்­லாத

மக்­க­ளால், நிரப்­பப்­ப­ட­வுள்­ளது. இங்­குள்ள பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்­குத் தமிழ் மாண­வர்­கள் மிக­வும் குறை­வா­கவே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். தமி­ழ­ரின் சனத் தொகைப் பெருக்­கத்­தி­லும் கல்­வி­யி­லும் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி கார­ண­மாக மிகக் குறைந்த வீதத்­தையே நிரப்ப முடி­யும். அத்­தோடு இந்­தப்­பெரு நக­ரத்­துக்­குத் தேவை­யான குடி­நீரை இர­ணை­ம­டுக்­கு­ளமே வழங்­க­ வேண்­டி­யி­ருக்­கும். வறட்­சி­யான பின் அரை­யாண்டு காலத்­துக்கு நீர் பற்­றாக்­குறை கிளி­நொச்சி எங்­கும் காணப்­ப­டு­வ­தால், இர­ணை­ம­டுக்­கு­ளத்­துக்கு மகா­வலி நீரைப் பாய்ச்ச வேண்­டிய யதார்த்­தம் உள்­ளது. இவை அனைத்­தும் கொழும்பு அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்ள விட­யங்­கள் என்­ப­தால் அரசு மிக இல­கு­வா­கவே அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தும்.

அநு­ரா­த­பு­ரம் பழைய நக­ரம் தமி­ழ­ருக்­குச் சொந்­த­மா­ன­தாக இருந்­தது. அதை முறி­ய­டிக்க 1977ஆம் ஆண்­டில் ஜே.ஆர் அரசு செய்த யுக்­தி­யின் கார­ண­மாக அநு­ரா­த­பு­ரம் புதி­ய­ந­க­ரம் உரு­வாக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து தமி­ழ­ரின் முக்­கி­யத்­து­ வம் அநு­ரா­த­பு­ரத்­தில் குறைந்து போயிற்று. இது­போன்­ற­தொரு நகர்வே தற்­போது கிளி­நொச்சி நக­ரத்­துக்­கும் ஏற்­ப­ட­வி­ருக்­கி­றது. வட மாகாண சபை­யின் தலை­மைச் செய­ல­கத்தை மாங்­கு­ளத்­தில் அமைத்­தி­ருந்­தால், இத்­த­கை­ய­தொரு நக­ரத்­தைத் தமி­ழர்­க­ளால் உரு­வாக்­கி­யி­ருக்க முடி­யும். இர­ணை­ம­டுக்­குள விவ­கா­ரம், திணைக்­க­ளங்­க­ளின் செயற்­பா டின்மை, எத­னோல் சாராய விவ­கா­ரம், தமிழ் அர­சி­யல் வாதி­க­ளின் பினாமி மதுச்­சா­லை­கள் என ஒட்­டு­மொத்­த­மாக வடக்­குத் தமி­ழரை அச்­சு­றுத்தி வரு­கின்­றன.

 

தமி­ழர்­க­ளின் கையி­லி­ருந்த எச்ச சொச்ச அதி­கா­ரங்­க­ளும் தமி­ழ­ரின் திற­மை­ யின்­மை­யா­லும் இலஞ்ச ஊழ­லா­லும் கைந­ழு­விப் போய்க்­கொண்டி­ருக்­கின்­றன. இதன் பின்­னர் சிங்­க­ள­வர், அல்­லது முஸ்­லிம்­கள் உயர் அதி­கா­ரி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­லாம். அதன் பின்­னர் ஆர்ப்­பாட்­டம் செய்­வ­தால் தமி­ழர்­கள் எதை­யும் அடை­யப்­போ­வ­தில்லை.

 

https://newuthayan.com/story/11/தொலைவாகும்-தமிழர்கள்.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை யாரோ ஒரு முஸ்லீம் அன்பர் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன்...இதில் கொஞ்சம் உண்மை இல்லாமலும் இல்லை...தமிழர் சிங்களம்,ஆங்கிலம் படிக்கவில்லை என்று முஸ்லீம்களை கொண்டு வந்து வேலைக்கு விட போயினம் 😧

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.