Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்ய மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்" - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்ய மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்" - சுமந்திரன்

யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

m.a.jpg

இதன் காரணமாகவே இலங்கை சர்வதேச அழுத்தத்திற்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நல்லூரில் இன்று  காலை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“2011 ஆம் ஆண்டு முழுவதும் 18 தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுடன் நிலப்பிரச்சினை தீர்வு மற்றும் அரசியலமைப்பு தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது. இதனை மறுக்க முடியாது. ஆனால் அந்த ஆதரவை கொடுத்தபோது மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியை வழங்கினார். குறிப்பாக யுத்தத்தை நிறைவு செய்ய உதவி செய்யுங்கள், அதன் பின்னர் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை கொடுப்பேன் என கூறினார்.

அத்தோடு 13 ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவேன், அதுமட்டுமன்றி அதற்கு அப்பால் சென்று அதிகார பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன் என கூறியிருந்தார். இதில் இந்தியாவிற்கு மட்டும் 3 தடவை எழுத்தில் வாக்குறுதியளித்தார்.

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 இல் இந்தியா இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தையை நடத்த ஊக்குவித்தது. கால இழுத்தடிப்பின் பின்னர் முடிவெடுக்கப்பட்டு 2012 இல் பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிட்ட நிலையில் அப்பேச்சுவார்தையில் இருந்து மஹிந்த விலகினார்.

இவ்வாறு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த செய்த பல முயற்சி, சர்வதேசத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்தது.

அதுமட்டுமன்றில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புலம்பெயர் தமிழ் உறவுகள் அதனை காணொளிகள் மூலம் வெளிகொண்டுவந்தது. இவற்றிற்கும் எந்த பதில்களையும் வழங்கமால் அப்போதைய அரசு நழுவியிருந்தது. இவை எல்லாம் சேர்த்தே சர்வதேசத்தின் அழுத்தத்திற்குள் இலங்கை சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என கூறினார்.

 

http://www.virakesari.lk/article/50146

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.