Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் அரசியல் கலந்துரையாடல்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண பங்கேற்பு 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் அரசியல் கலந்துரையாடல்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண பங்கேற்பு 

  

யாழ்.முகாமையாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த அரசியல் கலந்துரையாடல் நேற்றுச் சனிக்கிழமை(23.02.2019) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் இணைந்த வட- கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் லங்க சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்து கொண்டு “இலங்கை அரசியலும் எதிர்காலமும்” எனும் தலைப்பில் நீண்ட உரையாற்றினார்.

20190223_105952.jpg

அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களால் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதிலளித்தார்.

20190223_103450.jpg

கலந்துரையாடலின் போது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்கான பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் குறித்த ஆணைக்குழுக்களால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை என சுட்டிக் காட்டப்பட்டது.

20190223_113034.jpg

இந்த நிகழ்வில் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும்,சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கணேஸ்வரன் வேலாயுதம், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், மின் பொறியியல் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் வி. பரந்தாமன், இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் இளைப்பாறிய உதவி செயலாளர் எஸ். கிருஷ்ணானந்தன், யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் வி.நிரஞ்சன் மற்றும் புத்திஜீவிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

20190223_120902.jpg

20190223_120935.jpg

20190223_112640.jpghttp://www.jaffnavision.com/2019/02/24/polotical-discussion-in-jaffna-managers-forum/?fbclid=IwAR1TmILwq7zx17WCCCckMAiTsj5rt862tZplLm-V_LnhLpJk7wKHtJZNk0Q

20190223_103359.jpg

{காணொளி:-செ-ரவிசாந்-}

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.