Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க, அவுஸ்திரேலிய அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சர்வதேச சட்டத்திற்கு `முரண்'

Featured Replies

அமெரிக்க, அவுஸ்திரேலிய அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சர்வதேச சட்டத்திற்கு `முரண்'

*மனித உயிர்கள் வியாபாரப் பண்டமல்லவென சாடுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

- அருளானந்தம் அருண் -

அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் செய்து கொண்டுள்ள அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டவிதிகளுக்கு எதிரானதென அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் முன்னணி மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சாடியுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அவுஸ்திரேலியாவின் நௌரு தடுப்பு முகாமில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 83 இலங்கையர்களும் 7 மியான்மார் நாட்டவர்களுமாக 90 பேர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவர் என்றும் அதுபோல் குவான்டனாமோ வளைகுடாவில் அமெரிக்க கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கியூப மற்றும் ஹெயிட்டி நாட்டின் அகதிகள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது. ஆயினும், அகதிகளை இவ்வாறு பரிமாற்றம் செய்வதற்கு அவர்கள் பொருட்கள் அல்லவென்றும் அவர்கள் மனிதர்கள் என்றும் மேற்படி அமைப்பு தனது விசனத்தை தெரிவித்துள்ளது.

தரகுக்கும் வியாபாரத்திற்கும் அகதிகள் ஒன்றும் பொருட்கள் அல்ல, இவர்கள் மனிதர்கள். அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் உயிர்களைப் பேரம் பேசும் உடன்படிக்கையொன்றையே செய்துள்ளன. இந்த உடன்படிக்கை சர்வதேச சட்டவிதிகளை அலட்சியப்படுத்தி பரிகசித்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அகதிகளுக்கான கொள்கைகள் தொடர்பான இயக்குநர் பில் ஃபிறீலிக் மிகக் கடுமையான தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் வைக்கப்படும் கைதி ஒருவரை நடத்துவதுபோல் அகதியொருவரை நடத்தக்கூடாதென சர்வதேச அகதிகள் பாதுகாப்பு விதிகள் தெரிவிக்கின்ற போதிலும், உண்மையான அகதிகளை பகுப்பாய்ந்தறியும் திறமையற்ற காரணத்தால் அமெரிக்க அரசு குவாண்டனாமோ தடுப்பு முகாமிலும் அவுஸ்திரேலிய அரசு நௌரு தீவிலும் அகதிகளை தடுத்து வைக்கின்றதாக தெரிவித்துள்ள இவ்வமைப்பு, இதன் மூலம் 1951 ஆம் ஆண்டு உலக நாடுகள் கைச்சாத்திட்ட அகதிகளுக்கான சாசனத்தின் கீழான தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளன என்றும் சாடியுள்ளது.

மேலும், அகதி ஒருவரை தேசிய பாதுகாப்பு காரணங்களன்றி வேறு எவ்வகையிலும் நாட்டைவிட்டு வெளியேற்றக்கூடாது என்றும் சட்டப் பொறுப்பையும் அமெரிக்க- அவுஸ்திரேலிய அகதி உடன்படிக்கை மீறியுள்ளதென்றும், அகதி ஒருவரை தேசிய பாதுகாப்பு கருதி வெளியேற்றுவது கூட முறையான சட்ட திட்டங்களுக்கமைவாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், தமக்கு அருகில் தமது சொந்த பந்தங்கள் வசிக்கும் இடங்களை தமது தெரிவாக மேற்கொள்ளும் விருப்பத்தை அகதிகளுக்கு மறுப்பதன் மூலம் அவர்களை விரக்திக்குட்படுத்தும் உடன்படிக்கையாக இது உள்ளதாகவும் இதன்மூலம் அகதிகள் தமது குடும்பங்களுடன் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற 1951 ஆம் ஆண்டின் அகதிகளுக்கான சாசனத்தையும் அமெரிக்க, அவுஸ்திரேலிய அரசுகள் மீறியுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

தினக்குரல்

அட நம்மவர்களின் பிச்சைப் பாத்திரத்தில் கிடைத்த சோற்றினுள் இவ்வளவு கற்கள் இருக்கின்றனவா? :D

பிச்சை சோற்றினுள் கற்களை போட்டு கொடுப்பது முதலாளித்துவ நாடுகளிற்கு கைவந்த கலை... :blink::D :D

அகதிகளுக்கான ஐ.நா செயலாளர் நித்திரையே கொள்ளுறார் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.