Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - ‘நீட் தேர்வு ரத்து’ : முக்கிய அம்சங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ராகுல்படத்தின் காப்புரிமை Getty Images

நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

 

ராகுல் காந்தி,  ''ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் எங்கள் கட்சி குழுவினரிடம் மூடிய கதவுகளுக்கு  பின்னர் அறிக்கையை தயாரிப்பது நோக்கம் அல்ல. மக்களின் எண்ணத்தை எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினேன்'' என்று தெரிவித்தார். 

''மேலும் இந்த தேர்தல் அறிக்கை உண்மையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்'' என்றார் ராகுல்காந்தி. 

  • தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
  • பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
  • ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.
  • பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
  • தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.
  • 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
  • 2023 - 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
  • மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
  • காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

வயநாட்டில் ஏன் போட்டி?

செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி ''தென் இந்திய மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்போதுமே காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. நான் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவது அதற்கு ஒரு சான்றுதான்'' என்று கூறினார். 

மேலும் அவர் பேசுகையில், ''நீட் தேர்விற்கு பதிலாக மாநில அளவில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். மாநிலத்தின் விருப்படி மருத்துவ மாணவர்கள் தேர்வு நடத்தப்படும்'' என்றும் ராகுல்காந்தி கூறினார். 

https://www.bbc.com/tamil/india-47783234

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தி என்ன?

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES Image captionராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "தற்போதைய பாஜக அரசாங்கம் தங்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று தென்னிந்திய மாநிலங்கள் நினைப்பதால் அங்கு எனக்கான தேவை உள்ளது. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி தங்களை விரோத போக்குடன் நடத்துவதாக தென்னிந்திய மாநிலங்கள் கருதுகின்றன" என்று தெரிவித்தார்.

"நாட்டில் மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகளில் தாங்கள் கலந்தாலோசிக்கப்படுவதில்லை" என்று அவர்கள் கருதுகிறார்கள்.

"எனவே, காங்கிரஸ் கட்சியும், நானும் தென்னிந்திய மக்களுக்காக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காகவே, நான் கேரளாவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்று அவர் கூறினார்.

’நீட் தேர்வு நீக்கப்படும்’

நீட் தேர்வு நீக்கப்படுமெனவும் பள்ளிக் கல்வி உள்ளிட்ட சில அம்சங்கள் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுமென்றும் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

நீட் தேர்வு குறித்து கல்வி என்ற பிரிவின் கீழ் வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், "நீட் தேர்வானது சில மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. மேலும்அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களைச் சேர்க்கும் மாநிலங்களின் உரிமையிலும் இது தலையிடுகிறது. ஆகவே, நாங்கள் நீட் தேர்வை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். பதிலாக, அதே தரத்தில் மாநில அளவிலான தேர்வை அறிமுகப்படுத்துவோம்." என்று கூறியுள்ளது.

மேலும் பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும், உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தத் தேர்வு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பள்ளி இறுதித் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதால், அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு 2018ஆம் ஆண்டு பிரதீபா என்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் இதேபோல நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருப்பது தமிழகத்துக்கு ஆதரவான நிலைபாடு என்று கூறப்படுகிறது.

அதேபோல இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A பிரிவு நீக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள், மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-47792247

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.