Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உள்ள மக்கள் முதலீடுகளை எதில் செய்யலாம்?

Featured Replies

இலங்கையில் உள்ள மக்கள் முதலீடுகளை எதில் செய்யலாம்? - அனுதினன் சுதந்திரநாதன்

இலங்கையின் பொருளாதார தளம்பல்நிலை, வருமானங்கள் மீதான வரி, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவீனம் என்பவற்றின் வாயிலாக, சேமிப்பென்பது மக்களுக்கு குதிரைக் கொம்பாகியுள்ளது.

இந்த நிலையில், சிறுகச் சிறுகச் சேமிக்கும் வருமானத்தையும் முதலீடுகளாக மாற்றுவதில் மக்களுக்கு ஜெயமான நிலையேயுள்ளது. ஆனாலும், சேமிப்புகளை மற்றுமொரு முதலீடாக மாற்றாதவிடத்து, நீங்கள் உங்களது மற்றுமொரு வருமான வழியை இழக்கவே நேரிடும்.

பெரும்பாலானவர்கள், வங்கிகள் தரும் மாத, நிலையான சேமிப்பு வட்டி வீதங்களுடன் தமது மேலதிக வருமானத்தை நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது வருமானமும் ஒருவித எல்லையுடன் நின்றே போகிறது.   

உண்மையில், நம்மை சுற்றி வங்கிகள் தரும் வருமானத்தைவிட அதிக வருமானத்தை உழைக்கக் கூடிய பல்வேறு வகையான முதலீட்டு முறைகள் உள்ளன. இவை, துணிகரத்தன்மை அல்லது அபாயநேர்வு (Risk Basis) தன்மையின் அடிப்படையில் முதலீட்டுக்கான வருமானம் கிடைப்பதிலிருந்து வேறுபடுகிறது.

இம்முதலீடுகளுக்கான வருமானத்தை எளிமையாக விளக்குவதென்றால், ஒரு முதலீட்டாளர் தனது முதலீடுகளைப் பயன்படுத்தி, அதிக அபாயநேர்வைச் சந்திக்கத் தயாராகவிருந்தால், அவரது முதலீட்டுக்கான வருமானமும் அதிகமாக இருக்கும்.

அதுபோல, குறைவான அபாயநேர்வையே ஒரு முதலீட்டாளர் விரும்பினால், அவர் துணிகர முதலீட்டாளர் போல தனது வருமானத்தை அதிகளவில் எதிர்பார்க்க முடியாது.

அப்படியாயின், சாமானியர் ஒருவர் தனது வருமானத்தில் ஒருபகுதியாகச் சேமிக்கும் பணத்தைக் கொண்டு எவ்வாறு மீளவும் ஒரு வருமானத்தை உழைக்க முடியும்? அவ்வாறான முதலீடுகளை நோக்கிச் செல்லும்போது, அவை எந்தளவுக்கு பாதுகாப்பனாதாக இருக்கும்? அவ்வாறு, இலங்கையில் வங்கிச் சேமிப்பு தவிர்ந்து வேறு எவ்வகையான முதலீடுகள் உள்ளன?   

 

செல்வ மேலாண்மை

அண்மைய காலத்தில், இலங்கையில் பிரசித்தம் பெறுகின்ற இன்னுமொரு சேமிப்பு சார்ந்த முதலீட்டுமுறை இதுவாகும். எதிர்காலத்தை நோக்கியதான ஒரு திட்டத்துக்கு வருமான அளவைப்பொறுத்து, சேமிப்பை நிலையாகத் தெரிவு செய்துகொண்டுச் சேமிக்கும் திட்டம் இதுவாகும்.

குறித்த சேமிப்புக்காலத்துக்கான வட்டிவீதமும் வங்கிகளை விட இம்முறையில் அதிகமாக வழங்கப்படும். கூடவே, With holding Tax வரி சலுகையும் வழங்கப்படுகிறது.

எனவே, சரியான கால அளவில் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கும், நிலையான சேமிப்பை, மாதமாதம் மேற்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும்,  இது மிகச்சரியான வழிமுறைகளில் ஒன்று. சராசரியாக, செல்வ மேலாண்மைத் திட்டங்களுக்கு 10 - 15% வருட வட்டிவீதமும் வழங்கப்படுகிறது.

இதுவும், அபாயநேர்வு குறைவான முதலீட்டு முறையாகும்.  

 

அரச பிணையங்கள்

முதலீட்டு மூலங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு மூலமாக இதைக் குறிப்பிட முடியும். அரசாங்கத்தால்,  தனது தேவைகளுக்கும், நாட்டின் அபிவிருத்திக்குமென வெளியிடப்படுகின்ற பிணையங்களே இவையாகும்.

இவற்றின் முதிர்ச்சியின் அடிப்படையில் குறுங்கால,  நீண்டகால முதலீடுகள் என இவை வகைப்படுத்தப்படும். குறுங்கால முதலீடுகள் திறைசேரி உண்டியல் எனவும் நீண்டகால முதலீடுகள் திறைசேரிமுறி, இலங்கை அபிவிருத்தி முறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.  

திறைசேரி ஊண்டியல் அதிகபட்சமாக 91,182, 364 நாள்களை முதிர்வுக் காலமாகக் கொண்ட குறுகிய முதலீடாகும். முதன்மை சந்தையிலோ அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட எந்தவொரு வங்கியிலும் இதைக் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்பததுடன், முதிர்ச்சிக் காலத்தில் மொத்த வருமானத்தின் 10% Withholding வரியாக அறவிடப்படும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்சமயம் 364 நாட்களை முதிர்வாக கொண்ட திறைசேரி முறிகளுக்கு சராசரி வருடாந்த வட்டிவிகிதமாக 10.47% வழங்கப்படுகிறது.  

திறைசேரி முறிகள் குறைந்தது 2 வருடத்தையும் அதிகூடியது 20 வருடங்களை முதிர்வு காலமாக கொண்டதாகவுள்ளது. இதனையும், திறைசேரி உண்டியலை கொள்வனவு செய்வது போல கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். இதற்கான வட்டி வருமானம் திறைசேரி முறிகளின் முதிர்வு காலத்தின் அடிப்படையில் வேறுபடும்.

தற்போதைய நிலையில் 10 வருட முதிர்வுகாலத்தைக் கொண்ட திறைசேரி முறிகளுக்கு சராசரியாக 11.5% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. இதற்கும் முதிர்ச்சி பருவத்தில் 10% Withholding வரியாக அறவிடப்படும்.   


அரச பிணையங்கள் 100% அரச உத்தரவாதத்தைக் கொண்ட அபாயநேர்வு குறைவான அல்லது இல்லாத முதலீடுகளாக உள்ளமையால், இவற்றுக்கான வருமானமும் சந்தையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும்.   

  • தொடங்கியவர்

அசையும் சொத்துகள் மீதான முதலீடுகள்

பணமாகவோ, வங்கிகளிலோ அல்லது உடனடிப் பணமாகவோ மாற்ற முடியாத சொத்துகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு உரித்தான மற்றுமொரு முதலீட்டு வழிமுறை இதுவாகும். சேமிப்புக்கு ஏற்றவகையில், முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக  தங்கம் மீதான முதலீடு  தங்கம் விலைகுறைவான காலத்தில் கொள்வனவு செய்து, விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விற்பனை செய்கின்ற எளிய முறைமை இது.  

மோட்டார் வாகனம் மீதான முதலீடு  இலங்கையின் அதிகரித்து செல்லும் மோட்டார் வாகன வரி, கேள்வி நிலை என்பன இந்த சந்தையை உருவாக்கியுள்ளது. 

பெரும்பாலும், இரண்டாம் சந்தையை கொண்ட மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்யும்போது, முதலீட்டு லாபத்தை பெறக்கூடியதாக அமையும்.  

இதனை தவிர்ந்தும பல்வேறு வகையான முதலீடுகள் சந்தையில் உள்ளன. உதாரணத்துக்கு நிலையான சொத்துக்கள். ஆனால், அவற்றுக்கு மிகப்பெரிய அளவிலான முதலீடு அவசியமாகும். எனவே, மிகச்சிறிய பாதுகாப்பான முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதனை ஆரம்பத்தில் கற்றுக்கொள்ளுவது அவசியாமாகும். இதன்போது , கிடைக்கின்ற வருமானமும் சரி, நட்டநிலையும் சரி எதிர்காலத்தில் உங்களையும் ஒரு துணிகர முதலீட்டாளராக மாற்றியமைக்கும் என்பதில் ஜயமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.