Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்நியன் பட விக்கிரம் போன்று பாசாங்கு செய்கின்றாரா சுமந்திரன்? கஜேந்திரன்!

Featured Replies

தமிழ் மக்கள் மத்தியில் கூட்ட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அந்நியன் திரைப்படத்தின் விக்கிரம் போல் பாசாங்கு செய்கின்றாரா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அவசரகால பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.குண்டு வெடிப்பு நடைபெற்ற இடங்களை விட வடக்கு மாகாணத்திலே இராணுவ கெடுபிடிகள் அதிகரித்து காணப்படுகின்றன.அமைதியாக உள்ள எமது பிரதேசத்தில் போர்க்காலத்தை போல பதற்றமான நிலைமையை இராணுவம் உருவாக்க முயற்சிக்கின்றது.அதன் ஓர் அங்கமே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது,பல்கலைக்கழக சிற்றுண்டி சாலை நடத்துனர் கைது சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும்,தமிழ் இன அழிப்புக்கு உரிமை கோரியும் பல போராட்டங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகம் இதுவரை காலமாக முன்னெடுத்து வருகின்றது.இந்த செயலுக்கு பழிதீர்க்கவும் அவற்றை முடக்கவும் திட்டமிட்ட வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை இராணுவம்,பொலிஸார் ஆகியோரது சீருடைகளில் வித்தியாசங்கள் இருந்தாலும் அவர்களின் மனநிலை தமிழர்களை அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்.என்ற வஞ்சக மன நிலையிலேயே உள்ளனர்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் எல்லா வகையிலும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரே இதற்கு முழுப் பொறுப்பையும் கூறவேண்டும்.ஏனெனில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் எவ்வித யோசனையும் இன்றி ஆதரவு கொடுத்தனர்.இப்போது மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் பொலிஸ் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர்.தென்னிலங்கையில் ஒரு முகத்தையும் வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முகத்தையும் அந்நியன் திரைப்பட விக்கிரம போல கூட்டடமைப்பு நாடாளுமனற உறுப்பினர் காட்டி நாடகமாடி வருகின்றார்.

உள்நாட்டு போரின் போது மேற்கொள்ளப்படட இன அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் திட்டமிடட முறையில் நடைபெற்றுள்ளன.எனவே பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.இல்லாதுவிடின் வடக்கில் ஜனநாயக போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/119302

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Rajesh said:

அந்நியன் திரைப்படத்தின் விக்கிரம் போல் பாசாங்கு செய்கின்றாரா?

தன்னுடைய பரம்பரை  சொத்தை மலேசிய ரப்பர் தோட்டத்தை வித்து கட்சி உருவாக்கி  இலங்கையில் அரசியல் செய்தவர் தந்தை செல்வா இன்று அவர் ஸ்தாபித்த கட்சி முக்கியஸ்த்தர்கள் தற்போது  கொழும்பில வீடு அதுதான் இலங்கை அரசியல் சொறிலங்கா அரசால் எறியும் எலும்பு துண்டுக்கு வாலாட்டுவது கேவலம் அதுவும் இந்த சுமத்திரன் தரவளி கோவணத்துடன் நடைபயின்று விட்டு மறுநாளே நான் உடுப்புடன் மட்டும் நடை பயின்றேன் அந்த உடுப்பு பெயர் கோவனம் என்று எங்கள் எதிரிகள்  சொல்வார் நாங்கள் அதை உடுப்பு என்போம் என்று வெக்கமில்லாமல் சொல்லும் ..........

  • தொடங்கியவர்
23 minutes ago, Rajesh said:

தமிழ் மக்கள் மத்தியில் கூட்ட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அந்நியன் திரைப்படத்தின் விக்கிரம் போல் பாசாங்கு செய்கின்றாரா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்

கஜேந்திரன் நிறைய சினிமா பாக்கிறார் போல! இது நல்லதுக்கில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.