Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2019_5_img22_May_2019_PTI5_22__0-720x433.jpeg

சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்!

இந்தியவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், தற்போதைய நிலைவரப்படி 17 தொகுதிகளில் பா.ஜ.க 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதுடன், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது.

அத்துடன் சிவ சேனா ஒரு தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மிசோ தேசிய முன்னணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

http://athavannews.com/சூடுபிடித்துள்ள-நாடாளு-6/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

download-6.jpg

மின்னணு வாக்குகளின் படி பா.ஜ.க 306 இடங்களில் முன்னிலை!

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் பா.ஜ.க 306 இடங்களை பெற்று முன்னிலை வகிப்பதுடன், காங்கிரஸ் 103 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

அத்துடன், ஏனைய கட்சிகள் 95 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், தமிழகத்தை பொறுத்தவரையில், அ.தி.மு.க 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மின்னணு-வாக்குகளின்-படி/

  • கருத்துக்கள உறவுகள்

2019 தேர்தல் முடிவுகள்: கள நிலவரம்

சென்னை
bjpjpg

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.   நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கிய போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தன.

இந்நிலையில், மக்களவையின் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

அது குறித்த முழு நிலவரம்:

10.06 AM: 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலை.

10.05 AM: மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக தருமபுரி, தேனி ஆகிய 2 தொகுதிகளிலும் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

10.00 AM: கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை.

9.51 AM: ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலை| விரிவான செய்திக்கு: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை |

9.50 AM: மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை வகிக்கிறது. |விரிவான செய்தி: மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை; காங்கிரஸுக்கு பின்னடைவு |

9.45 AM: உத்தரப் பிரதேசத்தில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை. இங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன.

9.40 AM: தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 35 இடங்களில் முன்னிலை. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை.

9.35 AM: 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 தொகுதிகளிலும் அதிமுக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

9.30 AM: சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார். | விரிவான செய்தி: சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை |

9.25 AM: வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் காந்தி, ரேபரேலியில் சோனியா காந்தி, காந்தி நகரில் அமித் ஷா ஆகியோர் முன்னிலை.

|விரிவான செய்தி: ராகுல் காந்தி வயநாட்டில் முன்னிலை; சோனியா காந்தி ரேபரேலியில் முன்னிலை|

9.22 AM: நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300 இடங்களிலும்; காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்துள்ளன. பாஜக தனிப் பெரும்பான்மைக்கான 273 என்ற எண்ணைக் கடந்துள்ளது.

9.20 AM: விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் முன்னிலை வகிக்கிறார்.

9.15 AM: கரூரில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை.

9.11 AM: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகிக்கிறார்.

9.10 AM: தேனியில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.

9.05 AM: நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை. |விரிவான செய்திக்கு: நீலகிரியில் ஆ.ராசா முன்னிலை|

9.00 AM: 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக 8 தொகுதிகளில் அதிமுக 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

8.56 AM: தேனி மக்களவைத் தொகுதியில் 7 ஆயிரத்து 89 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இவை காலை 8 மணிக்கு எண்ணப்பட வேண்டும் ஆனால் 20 நிமிடம் தாமதமாக 8.20க்கு  எண்ணிக்கை தொடங்கியது

8.55 AM: சிதம்பரம் தனி தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவ 445 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அங்கு அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் முன்னிலை. தேனியில் ஓபிஎஸ் மகன் ஓபி. ரவீந்திரநாத் முன்னிலை வகிக்கிறார்.

8.52 AM: நாடு முழுவதும் பாஜக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

8. 51 AM: மத்திய சென்னையில் தயாநிதி மாறன் முன்னிலை | விரிவான செய்தி: மத்திய சென்னையில் தயாரிதி மாறன் முன்னிலை |

8.50 AM: புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகிக்கிறார்.

8.44 AM: திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி முன்னிலை வகிக்கிறார்.

8.43 AM: திருப்பூரில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலை வகிக்கிறார்.

8.42 AM: தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார். | விரிவான செய்தி: தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை |

8.41 AM: கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.

8.40 AM: நெல்லை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், நாமக்கல், ஆரணி, அரக்கோணம், மதுரை, திருச்சி, தென்காசி என 13 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

8.35 AM: திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை வகிக்கிறார்.

|விரிவான செய்திக்கு: திருச்சியில் திருநாவுக்கரசர் முன்னிலை|

8.32 AM: தமிழகத்தில் இதுவரை 9 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

8.31 AM: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். இத்தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

8.31 AM: திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை வகிக்கிறார்.

8.30 AM: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரி வேந்தார் முன்னிலை வகிக்கிறார்.

8.25 AM: நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலை வகிக்கிறார். லக்னோவில் ராஜ்நாத் சிங் முன்னிலை வகிக்கிறார்.

8.20 AM: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.

|விரிவான செய்தி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் முன்னிலை|

8.15 AM: தமிழகத்தில் நாமக்கல், காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

8.11 AM: நாடு முழுவதும் பாஜக தற்போதைய நிலவரப்படி பாஜக 80-க்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

8.00 AM: மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர நாடுமுழுவதும் 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணணும் பணி தொடங்கியது.

7.55 AM: கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு அனுமதி மறுப்பு

7.40 AM: கோவையில் வாக்கு இயந்திர பாதுகாப்பு அறை திறக்கப்படுகிறது!

 

https://tamil.thehindu.com/india/article27209428.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.