Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை வேடம் போடுகிறதா இந்தியா ....?

Featured Replies

ஆயுதம் வழங்குவதில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறதா?

`

பேரழிவு தரும் போராயுதங்களை இலங்கைக்கு, இந்தியா வழங்கியுள்ளது எனத் தெரிவித்து இணை யத்தளம் ஒன்றின் ஊடாகக் கசிந்த தகவல், இந் தியாவில் அரசியல் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றது.

அயல்நாடு என்ற வகையில் இலங்கைக்குத் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவோம், தாக்குதல் ஆயுதங்களையோ, பேரழிவு தரும் ஆயு தங்களையோ வழங்கமாட்டோம் என்றே புது டில்லி அரசு இதுவரை வெளிப்படையாகக் கூறி வந்தது.

இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவே பயன் படுத்தப்படுகின்றன என்ற எரிச்சல் இந்தியாவில் குறிப்பாக ஈழத்தமிழர் தாயகத்துடன் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தென்னிந்திய மாநில மான தமிழகத்தில் பரவியுள்ள நிலையில், தமிழக மாநில அரசையும் மக்களையும் சமாளிக்கும் விதத் தில் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்து அறிவித் திருந்தது புதுடில்லி. இந்தக் கொள்கை நிலைப் பாட்டையே அது பின்பற்றி வருவதாகவும் கூறப் பட்டது.

ஆனால் சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக அயல் நாடுகளின் விடயங்களில் வழமையா கவே தெளிவற்ற, இரட்டை வேட அணுகுமுறை யைக் கையாளும் புதுடில்லி, இலங்கைக்கு ஆயு தம் வழங்கும் கைங்கரியத்திலும் இவ்வாறு "சொல் ஒன்று செயல் வேறாக' நடந்துகொள்கின்றதோ என்ற சந்தேகம் இப்போது வலுப்பட்டிருக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே புதுடில்லியின் கையாள்கை இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது. எண்பதுகளின் நடுப்பகுதியில் ஈழத் தமிழ்ப் போராளிகள் குழுக்களுக்கு பரவ லாக ஆயுதப் பயிற்சி முகாம்களை அமைத்து அவற் றுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்கிக்கொண்டு, இந்தியாவில் போராளிகளின் பயிற்சி முகாம்கள் இல்லை, அகதிகளின் நலன்புரி முகாம்கள் மட்டும் தான் உண்டு என்று பகிரங்கமாகக் கூறியதிலி ருந்து

புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த "அகத்' கப்பலை சர்வதேசக் கடற்பரப்பில் சுற்றி வளைத்து மடக்கி, இந்திய எல்லைக்குள் பலவந்தமாகக் கூட்டிவந்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் வந்ததால் மடக்கிப்பிடித்தோம் எனஅறிவித்தமை வரை

பல்வேறு விடயங்களிலும் புதுடில்லி போட்ட இரட்டை வேடம் மறக்கக்கூடியதல்ல.

இப்போதும் கூட, நாடாளுமன்றத்தில் தனித்து அறுதிப் பெரும்பான்மை பெறாத காங்கிரஸ் தலை மையிலான அரசு, தனது கூட்டணியில் உள்ள இடது சாரிகளின் தயவில் தங்கித்தான் ஆட்சியைக் கொண் டிழுக்கின்றது. அப்படிச் செயற்படுவதால் சர்வதேச விவகாரங்களில் இடதுசாரிகளின் கொள்கை நிலைப் பாடுகளுக்கு மசிந்து வளைந்து வகுத்துச் செயற் படவேண்டிய இக்கட்டு அதற்கு. அதேசமயம், மத் திய கிழக்குப் பிரச்சினை போன்ற சர்வதேச சர்ச்சை களில் உலக ஏகாதிபத்தியமான அமெரிக்காவின் அழுத்தத்துக்கும் அடிபணியவேண்டிய கஷ்டம் மறுபுறம். அதனால், பேச்சளவில் கொள்கை விவ காரத்தில் ஒரு போக்கையும் செயலளவில் நடை முறையில் வேறு பாணியையும் கையாண்டு, தனது கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகளோடு தின சரி அல்லாடிக் கொண்டிருக்கின்றது காங்கிரஸ் கட்சி தலைமையிலான புதுடில்லி அரசு.

இந்த நிலைமைதான் இலங்கை விவகாரத்தி லும் போலும். ஈழத் தமிழர்கள் தொடர்பான தமி ழகத்தின் உணர்ச்சிபூர்வ நிலைப்பாட்டைப் புறக் கணித்துச் செயற்பட்டால், தமிழகம் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ, தமிழக எம். பிக்களின் தயவில் ஆட்சியைக் கொண்டிழுக்கும் மத்திய அரசின்பாடு "கோவிந்தா!' ஆகிவிடும்.

தமிழகத்தைக் கணக்கில் எடுத்து தமிழக விருப்பப்படி இலங்கை அரசுக்கு சார்பற்ற நிலைப் பாட்டைப் பின்பற்றினாலோ, அயல்நாடான இலங்கை புதுடில்லிக் கட்டுப்பாட்டைத் துறந்து விலகிச் சென்றுவிடும்.

ஏற்கனவே, பாகிஸ்தான் மற்றும் சீனா என்ற இரு பூச்சாண்டிகளை புதுடில்லிக்குக் காட்டிக் கொண்டு நிற்கின்றது கொழும்பு அரசு. உரிய உத விகளை புதுடில்லி தர மறுத்தால் பின்னடித் தால் பாகிஸ்தான் , சீனா ஆகிய இந்திய விரோத அயல் நாடுகளின் வலையில் போய் விழுந்துவிடு வோம் என மிரட்டுகின்றது கொழும்பு.

தனது தென்கோடி மூலையில் உள்ள இலங் கைத் தீவு மீதான பிடியை விட்டுக்கொடுக்கவோ, அங்கு சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடு கள் எல்லை மீறி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கவோ புதுடில்லி விரும்பவில்லை. அதன் காரணமாக இலங்கை விவகாரத்தைக் கையாள்வதி லும் தனது வழமையான இரட்டை வேடப்போக்கை பின்பற்றுகின்றது போலும்.

இலங்கைக்கு பேரழிவு தரும் போராயுதங்களை இந்தியா வழங்கியுள்ளது என்று கசிந்துள்ள செய்தி குறித்து புதுடில்லி இன்னும் உண்மையை உத்தி யோகபூர்வமாகத் தெளிவுபடுத்தவில்லை. அவ் வாறான தெளிவுபடுத்தல் வெறும் அதிகார மட்ட மறுப்பாக அல்லாமல், இதுவரை வழங்கிய ஆயுத தளபாட வகைகளின் விவரத்தோடும் விளக் கத்தோடும் அமைய வேண்டும்.

வெறும் அறிக்கைகள், அறிவிப்புகள் போன் றவை இரட்டைவேடச் செயற்பாடு தொடர்பான சந்தேகங்களைப் போக்கப் போதுமானவை அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழகத் தலைவர்கள் முக்கியமாகக் கவனத் தில் எடுக்கவேண்டிய அம்சம் இது.

உதயன் ஆசிரியர் தலையங்கம்

அதிலென்ன சந்தேகம்

இதுதான் அந்த சமன்பாடு

இந்தியா=இரட்டை ஏஜண்ட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.