Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

 

பிரிட்டன் பிரதமர் திரேசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

British-Prime-Minister-Theresa-May1.jpg

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற  பிரிட்டன் அரசு முடிவு செய்தது. 

ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன்  பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால்  பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2019-05-24T102655Z_1786282439_RC13CD2550

ஆளும் பழமைவாத  கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்தனர்.

 இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள திரேசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3 ஆம் திகதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.

2019-05-24T094730Z_1534334850_RC17F92776

 இந்த  வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.

இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான திரேசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து திரேசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7 ஆம் திகதி இராஜினாமா செய்வதாக திரேசா மே அறிவித்துள்ளார்.

லண்டன் நகரில் டவுனிங் வீதியிலுள்ள உள்ள தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த திரேசா மே, 

‘பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கௌரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/56671

  • கருத்துக்கள உறவுகள்

Theresa May mit Angela Merkel bei ihrem letzten Treffen in Berlin am 9. April 2019

உலகின் பலம் பொருந்திய பெண்மணிகளாக....
ஜேர்மனிய அதிபர் "அங்கேலா மேர்கலுக்கு" அடுத்த இடத்தில்  இருந்த, 
பிரிட்டன் பிரதமர் "திரேசா மே" யின், அழுகையை பார்க்க கவலையாக உள்ளது.

இவர் ஆரம்ப காலங்களில் வசித்த இடத்தில்,  உள்ள எனது  உறவினர் ஒருவர் சொல்லியதாவது...
தமிழர் சம்பந்தமான போராட்டங்களை  நன்கு அறிந்து,  சில விடயங்களில் தார்மீக  ஆதரவுகளையும் வழங்கியராம். அந்த வகையில்... இவரின் பதவி துறப்பு, என்னும் அறிவிப்பு... எனக்கு  வருத்தமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.