Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் கிளேமோர்த்தாக்குதல் இருவர் பலி.

Featured Replies

அம்பாறையில் கிளேமோர்த்தாக்குதல் இருவர் பலி.

அம்பாறை தமன பக்மிட்டியாகம பிரதேசத்தில் ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற் படைவீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 8.30க்கு இடம்பெற்றுள்ளது

வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் இரண்டு ஊர்காவல் படையினரும் மூன்று விசேட அதிரடிப்படையினரும் காயமடைந்தனர்

இத்தாக்குதலில் படையினரது கவசவாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த படையினர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.sankathi.net/

கிழக்கிலங்கையை விரைவில் தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக சூளுரைத்த மகிந்தா மாத்தையா அதை முற்றாக மறந்துவிட்டார்.

அவருக்கு இந்தத் தாக்குதல் மூலம் நினைவு திரும்பட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 25-04-2007 16:46 மணி தமிழீழம் [முகிலன்]

அம்பாறையில் பவள் கவச வாசனம் மீது தாக்குதல்: இரு விசேட அதிரடிப் படையினர் பலி!

அம்பாறை தமன பக்மிட்டியாகம பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்காப் விசேட அதிரடிப் படையினரை இலக்கு வைத்தே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் பவள் கவச வாகனம் சகிதம் வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்தே தாக்குதல் நடதப்பட்டுள்ளன.

தாக்குலில் இரு விசேட அதிரடிப் படையினர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் மூன்று விசேட அதிரடி படையினரும் ஒரு ஊர்காவல் படையினரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த படையினர் அம்பாறை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கிளைமோர் தாக்குதலில் பவள் கவச வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளன.

இன்றைய தாக்குதலில் இரு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டதாக இரு ஊர்காவல் படையினரும் மூன்று அதிரடிப்படையினரும் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.

பதிவு

  • தொடங்கியவர்

(2 ஆம் இணைப்பு) அம்பாறை தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையினருக்கு பாரிய இழப்பு: இளந்திரையன்

அம்பாறை வக்கிமுட்டியாப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பின்பகுதியில் உள்ள வக்கிமுட்டியாப் பகுதியில் பவள் கவச வாகனத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் ஊர்காவல் படையினரும் சென்று கொண்டிருந்த போது இந்த அணி மீது இன்று புதன்கிழமை காலை 8.15 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிரடிப்படையினர் சென்று கொண்டிருந்த பவள் கவச வாகனம் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் முற்றாக சிதைக்கப்பட்டது. அதிரடிப்படை தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இராணுவத்தினரது உடல்கள் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார் இளந்திரையன்.

இத்தாக்குதலில் ஊர்காவல் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர். அதிரடிப்படையினர் 3 பேர் மற்றும் ஊர்காவல் படையினர் 2 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.