Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 7 : எளிய, மலிவு வீடுகள்

Featured Replies

தாயக உறவுகள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். சொந்த நிலம் இருந்தும் ஒரு பாதுகாப்பான வீடுகள் இல்லாமல் உள்ளார்கள். 

வீடுகள் எமது வெப்ப நிலைக்கு உகந்ததாயும், மழை உட்பட சகல காலநிலைக்கு ஏற்பதாயும், நீண்ட காலம் நிலைக்க கூடியதாயும்  முக்கியமாக எமது மக்களால் அவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்புடையதாகவும் இருக்கவேண்டும். 

à®à®à¯à®¤à¯à®¤ பà¯à®¯à®²à¯ வநà¯à®¤à®¾à®²à¯à®®à¯ à®à®à®°à®¾à®¤ வà¯à®à¯

 

விலை = 2.5 லட்சம் இந்திய ரூபாய்கள் 

340 சதுர அடி பரப்பளவில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, குளியலறை, குழந்தைகள் படிக்கும் அறை என ஒரு சராசரி குடும்பம் வசிப்பதற்கு போதுமான வீட்டை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மதன் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் உறவு ஒருவர். 

=========================================================================================================

60,000 ரூபாயில் வீடு சாத்தியமா?

சமூக ஆர்வலரும் உள்ளூர்வாசியுமான திலீப் என்பவரின் உதவியுடன் ஒடிஷாவின் பல கிராமங்களுக்கு சென்று தனது 'உறையுள்' மலிவு வீட்டை எப்படி கட்டமைப்பது என்பதை விளக்கினார் மதன். ஆனால் அங்குள்ள கள நிலைமையை நேரில் பார்த்த பிறகு மலிவு வீட்டின் மூன்றாவது பதிப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்.

''உள்ளூரில் நிலவும் சூழல், கால நிலை, வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றனவா என்பனவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த மலிவு வீட்டின் முதல் பதிப்பையும் இரண்டாம் பதிப்பையும் உருவாக்கினேன். எனவே இந்த காரணிகளை மையமாகக் கொண்டு 240 சதுர அடி பரப்பளவில் வெறும் அறுபதாயிரம் ரூபாயில் மலிவு வீட்டின் மூன்றாவது பதிப்புக்கான மாதிரி திட்டத்தை ஒடிஷாவுக்கு சென்ற பிறகு உருவாக்கினேன்.''

''அங்கு ஒரு கிராமத்திற்கு சென்றபோது, உள்ளூர் மக்களை கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து தரமான வீட்டை அமைக்க பயிற்சியளித்தேன். இதை ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் என்னிடம் வந்து தழு தழுத்த குரலில், ''எப்படி வீடு கட்டுவது என்று எங்களுக்கும் சொல்லித்தருகிறீர்களா? யாரவது வீடு கட்டி தருவார்களா என்று எதிர்பார்த்து ஒதுக்குப்புறங்களில் சிரமப்பட்டு வாழ்வதற்கு பதிலாக எங்களுக்கான வீட்டை நாங்களே கட்டிக்கொள்கிறோம்,'' என்று சொன்னது என் மனதை என்னவோ செய்தது என்று கண்கலங்கியபடி நம்மிடம் கூறினார்.

 

மூங்கில், மண், தண்ணீர் பாட்டில்களால் கட்டப்படும் வீடு

'மதன் சீவ்' என்ற பெயரில் நான்கு பேர் கொண்ட சொந்த நிறுவனத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கியிருக்கிறார் இவர். ஆர்வமுள்ள எவரும் தனது நிறுவனத்தில் இணைந்துகொள்ளலாம் என்று சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்ட பதிவைப் பார்த்து பல மாவட்டங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்துவருவது தனக்கு களிப்பூட்டுவதாக மதன் கூறுகிறார்.

"சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரம், காலநிலைக்கு ஏற்றவாறு வீட்டை அமைப்பது, வீட்டின் கட்டமைப்பில் தொழில்நுட்பத்தை புகுத்துவது போன்றவற்றை செயல்படுத்த வெறும் கட்டிட கலை மட்டும் தெரிந்திருந்தால் போதாது. எனவே தொழில்முறையாக கட்டிட கலையை பயின்றவர்கள் மட்டுமில்லாமல், புவியியல், சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை பயின்றவர்களையும் எனது நிறுவனம் வரவேற்க தயாராக இருக்கிறது.

à®à®à¯à®¤à¯à®¤ பà¯à®¯à®²à¯ வநà¯à®¤à®¾à®²à¯à®®à¯ à®à®à®°à®¾à®¤ வà¯à®à¯

"மூங்கில் அல்லது யூக்கலிப்டஸ் மரங்கள், மண் மற்றும் சிமெண்ட் கலவை, தண்ணீர் பாட்டில்கள் போன்றவை இந்த வீடு கட்ட தேவைப்படும் முக்கியமான பொருட்கள். இயற்கையான முறையில் எல்லா அறைகளிலும் காற்று நுழையும்படி வடிவமைத்திருக்கிறோம். இந்த வீடு எளிதில் வெப்பமாகாது, கரையான் அல்லது பூச்சி போன்றவை வராதது, வளிமண்டல அழுத்தத்தையும் வீட்டில் நிலவும் அழுத்தத்தையும் சமன் செய்ய முயற்சித்துள்ளோம். இதனால் மீண்டும் ஒரு புயல் வந்தாலும் வீட்டிற்கு குறைந்த அளவிலான பாதிப்புகளே ஏற்படும்" என்று விளக்குகிறார்.

தனது நிறுவனத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது ஒரு புறம் இருக்க, சாமானியர்களுக்கு புரியும் வகையில் கட்டிட கலையை தமிழில் பயிற்றுவிக்க யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த இளைஞர். ''காக்கை குருவி போன்ற பறவைகளும் நத்தை ஆமை போன்ற விலங்குகளும் தனக்கான வீட்டை தானே கட்டிக்கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கான வீட்டை அமைக்க மற்ற மனிதர்களை சார்ந்து இருக்கிறான். எனவே அனைவருக்கும் தங்கள் வீட்டை முழுவதும் வடிவமைக்க தெரியாவிட்டாலும் சில அடிப்படை விடயங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த அறிவு வீடு கட்டும்போது ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கவும், பொருளாதார ரீதியாக ஏமாறாமல் இருக்கவும் உதவும்.''

 

 

 

Edited by ampanai

  • தொடங்கியவர்

Veedu : குறைந்த விலையில் அழகான GFRG பேனல் வீடு! | 27/04/2019

ஒரு புதிய தொழில்நுட்பம் 

 

Edited by ampanai

  • தொடங்கியவர்

பரமசிவம் போன்ற தமிழர்கள் நாசாவின் திறமை கொண்ட தமிழர்கள். 

ஒரு தற்சார்பு வீட்டை அமைத்துள்ளார். நிச்சயம் முழுமையாக பாருங்கள் !/

இப்படியானவர்களுக்கு முறைப்படி உதவி செய்து ஒன்று இல்லை இரண்டு உபகரணங்களை காப்புரிமை பெற்று வடிவமைத்தல் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.