Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு

In இலங்கை     June 14, 2019 8:24 am GMT     0 Comments     1139     by : Litharsan

Mannar-Sadosha-Mannar-Court.jpg

மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தொல்லியல் திணைக்களத்தையும் உள்ளீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், இம்மாதம் 27 திகதி விசேட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மன்னார் பொலிஸார் நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இது குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் ‘சதொச’ வளாகத்தில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின் ஆரம்ப அகழ்வு பணிகளின் போது அகழப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ‘சதொச’ வளாகத்தில் பணிகள் இடைநிறுத்தப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

குறித்த அகழ்வு பணிகளின் போது சுமார் 318இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், குறித்த மனித எலும்புக்கூடுகள் எந்த காலப்பகுதிக்கு உரியவை என கண்டறிவதற்காக மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் குறித்த எழும்புகள் 500 வருடங்களுக்கு மேற்பட்டவை என குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவுகள் சம்மந்தமாக பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் கடந்த மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் குறித்த புதைகுழி அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன் குறித்த மனித புதைகுழி பகுதியில் காணப்படும் மண் படைகள் மற்றும் ஏனைய சாதக பாதக தன்மைகள் தடையப் பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு களனிப் பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் கோரப்பட்டிருந்தது.

அத்துடன், நேற்று மன்னார் பொலிஸார் குறித்த புதைகுழி தொடர்பாக நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதன்மூலம் மன்னார் மனித புதை குழியானது 500 வருடங்களுக்கு மேற்பட்டதாக காணப்படுவதாக அறிக்கை கிடைக்கப் பெற்றமையினால் அகழ்வு பணிகள் தொடர்பாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதனியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக சட்டதரணி டினேசனும் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கானது, விசேட கூட்ட நாளான வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/மனிதப்-புதைகுழி-தொடர்பாக/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.