Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலைக் குண்டுகள் மண்டபம் கடலில் மீட்பு! அகதிகள் அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம்

Featured Replies

தற்கொலைக் குண்டுகள் மண்டபம் கடலில் மீட்பு! அகதிகள் அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம்

தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகளை மண்டபம் கடற்பகுதியில் வைத்துப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

5 வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டியொன்றை புதன்கிழமை அதிகாலை மீட்டிருக்கும் மண்டபம் பொலிஸார் இந்தச் சம்பவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறித்த வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டி றெஜிபோமில் பொதி செய்யப்பட்டிருந்ததாக அதனை மீட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் விடிகாலை "சீல்' வைக்கப்பட்ட நிலையில் பெட்டியொன்றைக் கண்ணுற்ற ஈழத்தமிழ் அகதியொருவர் அதனைப் பிரித்துப் பார்த்தார் என்றும்

அதற்குள் வெடிகுண்டுகள் அடுக்கப்பட்டிருந்தமையைக் கண்ணுற்ற அவர் அதிர்ச்சியடைந்த நிலையில் பொலிஸாரிடம் இதுகுறித்த தகவலைத் தெரிவித்தார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

தகவலறிந்ததும் விரைந்து வந்த மாவட்ட பொலிஸ் எஸ்.பி.திருஞானம் தலைமையிலான பொலிஸார் பெட்டியை நவீன கருவிகள் கொண்டு சோதனை நடத்தினர்.

குறித்த குண்டுகள் தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் ரகத்தைச் சேர்ந்தவை என்றும்

மனித உடலில் அணியக்கூடிய வகையில் அவை இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய கடற்படையினருக்கும், இராணுவ நுண்ணறிவுப் பிரிவினருக்கும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைப்பதா, அல்லது அவற்றை ஆதாரமாக வைத்துக்கொண்டு விசாரணைகளைத் தொடர்வதா? என்று அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியதாகப் பொலிஸாரை மேற்கோள்காட்டித் தமிழகச் செய்திகள் குறிப்பிட்டன.

நேற்றுக் காலைவரை குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படவில்லை என அறியமுடிந்தது.

வெடிகுண்டு மீட்கப்பட்ட இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மண்டபம் ஈழத்தமிழர் முகாம் எங்கிலும் பதற்றம் தொற்றியுள்ளதாகத் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தால் விசாரணைகள், தேடுதல்கள் என்ற போர்வையில் கெடுபிடிகள் அதிகரிக்கலõம் என அகதிகள் தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டிருக்கிறது. (சி)

உதயன்

மண்டபம் அருகே கரையொதுங்கிய சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்

ராமேஸ்வரம்: மண்டபம் கடல் பகுதியில் பயங்கர சேதத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய தெர்மகூல் பெட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட்ட வெடிகுண்டு பார்சல்களிலிருந்து இது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆயுதக் கடத்தல் அதிகரித்து வருகிறது. புலிகளுக்காக பலர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கையில் தற்போது புலிகள் விமான பலமும் பெற்று இருமுறை தாக்குதலும் நடத்தி விட்டதால் கடலோரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மண்டபம் கடல் பகுதியில் நேற்று ஒரு தெர்மகூல் பெட்டி கரை ஒதுங்கியது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே இந்த பெட்டி கரை ஒதுங்கியது.

இதையடுத்து காவலர் கார்த்திகேயன் அதை எடுத்துப் பார்த்தார். அப்போது அதில், 5 வெடிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

மாவட்ட எஸ்.பி.திருஞானம் உடனடியாக விரைந்து வந்தார். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். 10 அங்குல நீளம், 2 அங்குல அகலம் கொண்ட அந்த வெடிகுண்டுகள், தற்கொலைப் படையினர் உடலில் கட்டிக் கொள்ளும் வகையிலான குண்டுகள் ஆகும்.

இதுதவிர ராக்கெட் லாஞ்சர் மூலம், ரிமோட் கண்ட்ரோல் மூலமும் வெடிக்க வைக்கலாமாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடித்தால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுமாம்.

வெடிகுண்டுகள் இன்னும் செயலிழக்காத நிலையில் உள்ளன. எனவே அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் முடிவை நிபுணர்கள் கைவிட்டனர். பின்னர் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கச் செய்யும் நிபுணர் குழுவுக்குத் தகவல் தரப்பட்டு அக்குழுவினர் மதுரையிலிருந்து மண்டபம் விரைந்தனர்.

பின்னர் வெடிகுண்டுகளைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் வெடிகுண்டுகள் இருந்த பெட்டியில் பிளாஸ்டிக் நூலை கட்டி கிட்டத்தட்ட 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டு அந்த நூலை அசைத்தனர். ஆனால் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து அந்த குண்டுகள் செயலிழந்தைவயாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த குண்டுகள் மண்டபம் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மிக மிக சக்தி வாய்ந்த குண்டுகள் சிக்கியதால் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவியது. மண்டபம் முகாமுக்குள் உள்ள பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

அகதிகள் அருகே குண்டுகள் கரை ஒதுங்கியதால் இந்த சம்பவத்தில் அகதிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

---Thatstamil.com----

மண்டபம் கடலில் கரை ஒதுங்கியது கப்பல் சிக்னல் குண்டு - கருணாநிதி

சென்னை: மண்டபம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது பயங்கர வெடிகுண்டு அல்ல. வழக்கமாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் குண்டுகள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து கருணாநிதி பேசுகையில், மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே கடலோரத்தில் ஒரு பார்சலில் 5 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை மதுரையிலிருந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதித்தனர். சோதனையின்போது, ஒரு குண்டு மேலே சென்று ஒளி வீசியபடி பாராசூட் போல கீழே இறங்கி வந்தது.

எனவே இவை வெடிகுண்டுகள் அல்ல. கப்பலில் சிக்னலுக்காக பயன்படுத்தப்படும் ஒளி உமிழும் தன்மை கொண்ட குண்டுகள் என கண்டறியப்பட்டது.

இது சிகப்பு வர்ணத்தில் இருந்ததால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது என்றார்.

---Thatstamil.com----

நிலமை எப்படி இருக்கு என்று பார்த்திர்களா?

முதல் செய்திகள் வரும் வேகம் அதை பரப்பிய பின் உண்மையை சொல்லுவதுஇல் என்ன இருக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.