Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா : 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டின் முக்கிய தகவல்கள்

Featured Replies

பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய தகவல்கள்:

2019 - 20 ஆம் ஆண்டு நிதியாண்டின் பேரியல் பொருளாதாரம் அதிக வளர்ச்சியைக் காணும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7% ஆக இருக்கும்.

கடந்த நிதியாண்டில் 6.4% ஆக இருந்த நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 5.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2020 நிதியாண்டில் கடன் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும்.

இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.8% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

2011 - 2012 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்த முதலீடு அடுத்த நிதியாண்டில் அதிகரிக்கும்.

2025 ஆம் ஆண்டு 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக இந்திய வளரும்.

நீண்டகால அடிப்படையில் நமது பொருளாதாரம் வளர்ந்து 8% என்ற அளவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திய உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தற்போது மாற்றத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. பாரம்பரிய பொருளாத நிலைகளில் இருந்து புதிய இலக்கை நோக்கி பயணத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

https://www.thinakaran.lk/2019/07/05/இந்தியா/36755/2018-19ஆம்-ஆண்டுக்கான-பட்ஜட்டின்-முக்கிய-தகவல்கள்

 

  • தொடங்கியவர்

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை ; நிர்மலா சீதாராமன் தகவல்

2019- 2020-ம் பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு
2014-ல் ஆட்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு
மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது
இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொருளாதாரமாக விளங்குகிறது
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன
2-வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்
ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும் 
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்படும்
மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்
2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம செயல்படுத்தப்படும்
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஒக்கீடு
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 2% வட்டி மானியம் தரப்படும்
ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம்

ரயில்வே துறையின் முதலீட்டு திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி தேவை
ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்ளப்படும்
தேசிய அளவிலான மின் தொகுப்பை போல எரிவாயு தொகுப்பு, தண்ணீர் தொகுப்பு உருவாக்கப்படும்
சமூகநல திட்டங்களுக்காக பணியாற்றும் நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்படும்
காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
ஒரு பிராண்டு பொருள் விற்பனை நிறுவனங்களுக்கான விதிமுறை தளர்த்தப்படும்
2022-ம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது
மீன்வள மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்
நாட்டின் 97% கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ. நீளச் சாலைகள் மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
1.35 லட்சம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.80,250 கோடி செலவிடப்படும்
கிராம தொழில்களை மேற்கொள்ள 75,000 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி தரப்படும்
மூங்கில், தேனீ வளர்ப்பு, காதித் தொழில்கள் மேம்பாட்டுக்காக 100 மையங்கள் உருவாக்கப்படும்

10,000 விவசாய உற்பத்தியாளர் மையங்கள் உருவாக்கப்படும்
2024-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை

மத்திய - மாநில குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 9.6 கோடி கழிப்பறைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்
ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டமும் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்படும்
எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு
அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்
ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்
அறிவியல் ஆராய்சிக்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்

உயர் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்தப்படும்
உலகின் சிறந்த 200 தொழில்நுட்ப கல்வி நிலைய்களில் இந்தியாவின் 2 ஐ.ஐ.டி.க்கள், ஐ.ஐ.எஸ்.சி. இடம் பெற்றுள்ளது
முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்
பசுமை தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன

செளபாக்கியா யோஜனா, உஜூவாலா யோஜனா 2 திட்டங்களும் கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்வசதி உறுதி செய்யப்படும்
என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்
எல்.இ.டி. விளக்குகள் பயன்பாட்டின் மூலம் ஆண்டுதோறும் ரூ.18,341 கோடி குறைந்துள்ளது
மகளிர் மேம்பாட்டு திட்டங்களை வகுக்க அரசு மற்றும் தனியார் அடங்கிய அமைப்பு ஏற்படுத்தப்படும்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுக்கான வட்டி மானியம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்
17 சுற்றுலா தலங்கள் உலக தரத்திலான சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும்
பழங்குடிகள் பாரம்பரியத்தை பேணும் வகையில் புதிய காட்சியகம் அமைக்கப்படும்
கடந்த ஆண்டில் வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது
நாட்டின் தொழில்கடன் விநியோகம் 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது
பொதுத்துறை வங்கிகளுக்கு மேலும் கூடுதல் மூலதனமாக ரூ.70,000 கோடி ஒதுக்கப்படும்
நாட்டின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டம் தொடரும்
புதிதாக 20, 10, 5, 2, 1 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்
ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் இந்திய அரசின் அன்னியக்கடன் 5%க்கு குறைவாகவே உள்ளது
ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை
ரூ.400 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம் 25 சதவீதமாக இருக்கும்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=507859

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.