Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்படையினரின் வான் எதிர்ப்புத் தாக்குதலால் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான்படையினரின் வான் எதிர்ப்புத் தாக்குதலால் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற அவலம்

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 21:42 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது கடந்த வியாழக்கிழமை இரவு விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக அதன் அருகில் இருந்த அனைத்துலக வானூர்தி நிலையம் அவசரமாக மூடப்பட்டது.

அப்போது வான்படையினரின் சரமாரியான வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி வேட்டுக்களால் அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்து சிதறியோடியுள்ளனர்.

பயணிகள் செல்லும் பகுதியில் பெரும் சத்தங்களும், நெருக்கடிகளும் ஏற்பட்டதுடன் பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் வானூர்தியில் ஏறும் பகுதிகளில் இருந்து சிதறி ஓடி பயணிகளை பரிசோதனை செய்யும் பகுதிக்கு சென்று பாதுகாப்புத் தேடியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடிமுழக்கம் போன்ற சத்தம் ஒன்று கேட்ட போதும் காத்திருந்த பயணிகள் அதற்கு பெரியளவில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான குண்டுச் சத்தங்களும், துப்பாக்கி வேட்டு ஒலிகளும் சரமாரியாக கேட்டகத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து பயணிகள் அச்சமடைந்ததுடன் சிதறி ஓடத் தொடங்கினார்கள் என்றும் பயணி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் பெரும்பாலான பயணிகள் தமது பயணப்பைகளை தம்முடன் எடுத்துக்கொண்டு ஓடிய போதும் சிலர் தமது பயணப்பைகளை தவற விட்டிருந்தனர்.

இது தொடர்பாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

குண்டுச் சத்தங்கள் 10.45 மணியளவில் கேட்கத் தொடங்கின. தாக்குதல் நடக்கிறது ஓடுங்கள் என வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி சத்தமிட்டார்.

பயணிகள் செல்லுமிடத்தில் நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்பாக ஒதுங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

ஒரு பாதுகாப்பு அதிகாரி தனது அறையை பூட்டிவிட்டு இருந்து விட்டார். தாக்குதல் அச்சம் நீங்கும் வரை அவர் வெளியில் வரவில்லை.

பயணிகள் பரிசோதனைப் பகுதியில் நின்ற பயணிகள் மேசைகள் மற்றும் கதிரைகளின் கீழ் பாதுகாப்பு தேடிக்கொண்டனர். துப்பாக்கிச் சத்தங்கள் தொடர்ச்சியாக கேட்கும் போது சிலர் தமக்கு அண்மையில் தாக்குதல் இடம்பெறுவதாக எண்ணியதால் மேலும் பெரும் பதற்றம் அப்பகுதியை தொற்றிக்கொண்டது.

வானூர்தி நிலையத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்ட போது மிகவும் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் பயணிகள் உள்ளாகினர் என்றார் அவர்.

அனைத்துப் பயணிகளும் தமது உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை எடுக்க முயற்சித்ததனால் தொலைபேசி இணைப்புக்களும் செயலிழந்து போய்விட்டது. இதனால் பயணிகளிடம் மேலும் அச்சமும், பீதியும் அடைந்தனர்.

எனினும் அரை மணிநேரத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியதுடன் பயணிகளை தமது பகுதிகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் துபாய்க்கு பயணமாக இருந்த எமிரேட்ஸ் வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான வானூர்தி சேவை இரத்துச் செய்யப்பட்டது.

சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த கதே பசுபிக் வானூர்தி 1 மணி 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. ஆகையால் பயணிகளுக்கு வானூர்தி நிலைய கார்டின் விடுதியில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

துபாயில் இருந்து வந்த ஏமிரேட்ஸ் வானூர்தி மாலைதீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் மலேசியாவில் இருந்து வந்த சிங்கப்பூர் வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான வானூர்தியே இந்த தாக்குதல் அச்சத்தின் பின்னர் 12.15 மணியளவில் முதலில் தரையிறங்கியது.

இந்த களோபரத்தில் தம்மை ஏற்றிச்செல்ல வந்த வாகனங்களை தவறவிட்ட பெருமளவான பயணிகள் வாடகை வாகனங்கள் மூலம் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.