Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த முகம் கொடுக்கும் யுத்தங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த முகம் கொடுக்கும் யுத்தங்கள்

-வேலவன்-

சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணி. 1994 ஆம் ஆண்டுக்கு முன் அதாவது அவர் ஆளும் கட்சி பா.உ. ஆக முன் 17 வருடங்கள் மனித உரிமை அமைப்புக்களுடன் பலமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.

அதாவது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தரணிகள் மையத்தின் இயக்குநர். காணாமல் போனோரின் பெற்றோர் சங்கத்தலைவர்.

ஆனால் முன்னாள் சனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிலும் அதிகமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீதுதான் எழுந்துள்ளன. அதிலும் இது தொடர்பில் ஏனையோர் சந்தித்த சர்வதேச அழுத்தங்களை விட அதிகமான அழுத்தங்கள் இவர் மீது போடப்படுகின்றன.

முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட போது அவருக்கு ஏராளமான ஊடகத்துறை நண்பர்கள் இருந்தனர். வசந்தராஜா, ராவய ஆசிரியர் விக்டர் ஐவன், லசந்த விக்கிரமதுங்க என தனிப்பட்ட ரீதியிலும் அரசியலில் அவர் ஏதாவது புதுமையாகச் செய்வார் என்ற நம்பிக்கையிலும் இந்த நட்பு வட்டம் இருந்தது. சந்திரிகா சனாதிபதியாக அந்த வட்டம் உதவியது.

இறுதியில் பதவி துறக்கும்போது இந்த நட்பு வட்டம் படிப்படியாக எதிரிகள் வட்டமாகியது. இரண்டாவது தடவையாக சனாதிபதியாகப் பதவியேற்ற போது விக்டர் ஐவன், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரை சந்திரிகா குமாரதுங்க நேரடியாக எதிரிகளாகவே பிரகடனப்படுத்தினார்.

அவ்வேளையில் ஊடகவியலாளர்களை அவ்வாறு பகைக்கக்கூடாது எனப் பகிரங்கமாகவே சந்திரிகாவிற்கு அறிவுரை கூறியவர் மகிந்த ராஜபக்ச. ஆனால் சந்திரிகா அந்த அறிவுரையை ஏற்கவில்லை. பதிலாக ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்குபவர்-செய்தியாளர்- என மகிந்த மீது குற்றச்சாட்டு வீழ்ந்தது.

கடந்த சனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களுக்கென்றே பல சலூகைகளை அறிவித்தார். பதவி ஏற்றதும் ஊடகவியலாளர்களை அலரி மாளிகைக்கு அடிக்கடி அழைத்து உபசரித்து வருகிறார்.

ஆனால் இப்பொழுது ஊடகத்துறையின் கழுத்தை நெரிக்கும் சிறிலங்கா சனாதிபதிகளின் பட்டியலில் முன்னணியில் அவர் இருப்பது மட்டுமல்ல, ஈராக்கிற்கு அடுத்ததாக ஊடகவியலாளர்கள் அதிகம் ஆபத்துக்குள்ளாகும் நாடாக சிறிலங்கா உள்ளது.

இன்று சிறிலங்கா சனாதிபதி மூன்று யுத்தங்களை நடத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று கூறுகிறது. முதலாவது பிரகடனப்படுத்தாத ஈழப்போர் - 4, இரண்டாவது ஊடகவியலாளருக்கு எதிரான யுத்தம் மூன்றாவது மகிந்தவுக்கே உரித்தான அவரின் தயாரிப்பான இராஜதந்திரிகளுக்கு எதிரான யுத்தம் என அது கூறுகிறது.

இங்கு ஊடகவியலாளருக்கு எதிராகவும் இராஜதந்திரிகளுக்கு எதிராகவும் மகிந்த யுத்தம் புரிய வேண்டியேற்பட்டதற்குக் காரணம் முதலாவதாக குறிப்பிட்ட உண்மையான யுத்தமே என்பது வெளிப்படை.

அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது மகிந்த ஏவியுள்ள யுத்தத்தின் பக்கவிளைவாகவே மற்றைய இரு யுத்தங்களும் ஏற்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ச இப்போது நடத்துகின்ற யுத்தம் நேரடியாகத் தமிழ்மக்களைக் கொன்றொழிக்கின்ற, அவர்களை அவலத்திற்குள் தள்ளுகின்ற யுத்தமாகவே பரிணாமம் பெற்றுள்ளது.

சம்பூரிலும், வாகரையிலும் நூற்றுக்கணக்கான மக்களை விமானக் குண்டுவீச்சு மூலமும் எறிகணைத் தாக்குதல் மூலமும் கொன்றொழித்து நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தி பல்லாயிரக்கணக்கானோரைப் பட்டினி போட்டு இடப்பெயர்வு அவலத்திற்கு உள்ளாக்கி அப்பகுதிகளை ஆக்கிரமித்தது.

மட்டக்களப்புப் பிரதேசத்தை இலட்சக்கணக்கான மக்களை இடப்பெயர்வுக்கு உள்ளாக்கி அவர்களை அவலத்திற்குள் தள்ளி ஆக்கிரமித்தது.

அத்துடன் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பல தரப்பினரையும் படுகொலை செய்து பலரைக் காணாமல் போகச்செய்துள்ளது. எந்தப் பகுதியிலும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பில்லை. அவர்களின் உடமைகளுக்குப் பாதுகாப்பில்லை.

வன்னிப் பிரதேசத்தில் தினமும் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக் குண்டுவீச்சு, எறிகணைத்தாக்குதல், ஆள ஊடுருவும் படையணி மூலம் படுகொலைகள் எனத் தொடர்கின்றன.

யாழ். குடாநாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வைக்கப்பட்டுள்ளதுபோல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் கூட பாதுகாப்பில்லை. காணாமல் போவோர், கடத்தப்படுவோர், கைது செய்யப்படுவோர் பட்டியலில் பல்கலைக்கழக துணைவேந்தர், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் என பலதரப்பட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

துணை இராணுவக் குழுக்களுக்கும் அவர்களின் அனைத்து மோசமான நடவடிக்கைகளுக்கும் துணை போகின்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

சிறிலங்காவின் அரச நிர்வாகத்தில் பாரிய ஊழல்கள.; பதவியேற்ற ஒரு வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில் கூட மற்றெந்த அரசாங்கத்தை விடவும் அதிகம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசாங்கமாக மகிந்த அரசாங்கம் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அதிகம் உள்ளாபவர்களாக மகிந்தவின் சகோதரர்கள் இருக்கின்றனர்.

இவ்வாறாக இருக்கையில் யுத்தத்தால் தமிழ்மக்கள் சந்திக்கின்ற அவலங்கள் அவர்கள் மீது புரியப்படுகின்ற மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துகின்ற அமைப்புக்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. வெளியேற்றப்படும் என எச்சரிக்கப்படுகின்றன.

இப்பொழுது இந்த நடைமுறை மனிதநேய அமைப்புகளுக்கு மட்டுமல்லாது, இராஜதந்திரிகள் மீதும் பிரயோகிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் மீது புரியப்படும் கொடுமைகள் அவலங்களை வெளிப்படுத்தாது இருப்பதற்காக, தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டு சொத்துக்கள் அழிக்கப்பட்டன, பணியாளர்கள் மிரட்டப்பட்டனர்.

இப்பொழுது இது சிறிலங்கா ஊடகவியலாளர்கள் மீதும் திரும்பியுள்ளது. ராஜபக்ச சகோதரர்களின் ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அடக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கே அலரிமாளிகை உபசரிப்புகள் பயன்பட்டிருக்கின்றன.

இப்போது இறுதியாக டெய்லிமிரர் ஆசிரியர் மீதும் செய்தியாளர் மீதும் கோத்தபாய விடுத்துள்ள கொலை மிரட்டல் பெரும் விவகாரமாகியுள்ளது. இப்பிரச்சினையைச் சமாளிக்க சனாதிபதி ராஜபக்ச முயன்றும் அது விசுவரூபம் எடுப்பதாகவே தெரிகின்றது.

மகிந்தரும் அவரது சகோதரர்களும் ஆரம்பித்துள்ள யுத்தம் ஏனைய இரு யுத்தங்களையும் தோற்றுவித்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் யுத்தத்தை நிறுத்தும் எண்ணம் மகிந்த அரசுக்கு சிறிதுமில்லை. அதுமட்டுமல்ல, மகிந்தவின் ஆதரவாளர்களும், ஆலோசகர்களும் ஏன் சிங்கள மக்களும் கூட யுத்தத்தை ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

எவ்வாறாயினும் முதலாவது யுத்தம் தொடரும் வரை மூன்று யுத்தங்களையும் சம காலத்தில் மகிந்த புரிய வேண்டியவராகவே இருப்பார். அதேவேளை மூன்று யுத்தங்களும் தீவிரமடைவதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன.

சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச நோய் என எண்ணுவதற்கு மருந்து வழங்குவதைவிட நோய்க்கு என்று வழங்கிய மருந்தால் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்கு அவசரமாக மருந்து வழங்க வேண்டியவராக இருக்கிறார் என்றே கூறலாம்.

நன்றி: ஈழநாதம் (25.04.07)

http://www.tamilnaatham.com/articles/2007/apr/velavan/28.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.