Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்களவை வீழ்த்திய மகிந்தவின் "இடியப்பம்- மது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மங்களவை வீழ்த்திய மகிந்தவின் "இடியப்பம்- மது"

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 22:32 ஈழம்] [க.திருக்குமார்]

அனைத்துலகத்திலும் உள்ளுரிலும் சிறிலங்கா அரசுக்கு தோன்றியுள்ள நெருக்கடிகள் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான மங்களவை வீட்டுக்கு அழைத்து இடியப்பமும் மதுவும் கொடுத்து அரவணைத்துள்ளார் மகிந்த ராஜபக்ச என்று கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.

சண்டே லீடர் வார இதழின் அரசியல் ஆய்வில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தான் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் எரிமைலை ஒன்றின் மீது இருப்பது போல் உணர்ந்துள்ளார். நாட்டின் பல பிரிவுகளில் தோன்றியுள்ள நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள், பொருளாதாரத்தை தக்க வைப்பதற்கான போராட்டங்கள் என்ற போராட்டங்களுக்கு மத்தியில் அவர் எதிர்கொள்ளும் அரசியல் அழுத்தங்களும் உச்சத்தை தொட்டுள்ளன.

இந்த அரசியல் விளையாட்டுக்களில் இறுதியாக அரசாங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட இரு முன்னாள் அமைச்சர்களுக்கான வாசலை மகிந்த திறந்துள்ளார். அவர்கள்தான்- அதாவது மங்கள சமரவீரவும் சிறிபதி சூரியாராச்சியும் விடுதலைப் புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மகிந்த செய்துள்ளதாக முன்னர் குற்றம் சுமத்தியவர்கள்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக அவர்கள் மட்டும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை, அரசின் தோழமைக் கட்சியான ஜே.வி.பியும் எதிர்வரும் மே 10 ஆம் நாள் மனித உரிமை மீறல்கள், அரசாங்க நிர்வாகங்களில் நிகழும் ஊழல்களுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதே நாளில் ஐக்கிய தேசியக் கட்சியும் மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளது.

இந்த உள்ளுர்ப் போராட்டங்களுக்கு அப்பால் ஏற்கனவே அனைத்துலகத்தில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஊடக சுதந்திரத்தை மகிந்த அரசாங்கம் மீறுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அனைத்துலக மட்டத்தில் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துலக மற்றும் உள்ளுர் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச, குறைந்தது மங்களாவுடனான அரசியல் நெருக்கடிகளையாவது குறைப்பதற்கு எண்ணியுள்ளார்.

இதன் தொடக்கமாக கடந்த செவ்வாய்க்கிழமை (24) மங்களவை தொடர்பு கொண்ட சுதந்திரக்கட்சியின் நிர்வாக செயலாளர் ஆரியரத்ன அன்று நடைபெறும் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த சமயத்தில் கடுவெல்ல நீதிமன்றத்திற்கு சிறீபதி சூரியாராச்சியின் பிணை விசாரணை தொடர்பாக மங்கள பயணித்துக் கொண்டிருந்தார். எனவே அவர் தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்ததுடன், காரணத்தையும் கூறினார்.

எனினும் அதே நாள் மங்கள சமரவீரவின் இல்லத்துக்கு சென்ற "சாமாதனத் தூது"வரான அலவி மௌலானா, மங்கள சமரவீரவுக்காக மகிந்த ராஜபக்ச காத்திருப்பதாகவும், அவர் நள்ளிரவு வரையிலும் காத்திருக்க தயார் எனவும் கூறினார்.

பின்னர் இரவு 7.00 மணியளவில் மங்கள சமரவீரவை அலவி மெளலானா தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகை இல்லத்திற்கு சென்றார்.

மங்கள சமரவீரவை கண்ட மகிந்த ராஜபக்ச ஒடிச்சென்று கட்டி அணைத்து வரவேற்றார்.

"என்ன நடந்ததோ அதனை எல்லாம் மறந்துவிடு, உள்ளே வா" என மகிந்த ராஜபக்ச அன்புடன் அழைத்தார்.

உள்ளே மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்காவும் மங்கள சமரவீரவுக்காக காத்திருந்தார்.

எல்லாவற்றையும் மறந்துவிடு என மீண்டும் கூறிய மகிந்த ராஜபக்ச, அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அரைச்சுற்று துடுப்பாட்ட போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிக்க வருமாறு மங்கள சமரவீரவை அழைத்துச் சென்றார்.

ஏதோ திருப்தி அடைந்த மனநிலையில் மகிந்த ராஜபக்ச அன்று இருந்தார். எனவே மங்கள எல்லாவற்றையும் மறந்துவிடு எங்களிடம் உனக்கு இடமுண்டு என மீண்டும் மீண்டும் கூறினார்.

துடுப்பாட்ட போட்டியை ரசித்தபடி அவர்கள் பல விடயங்கள் தொடர்பாக பேசினார்கள். துடுப்பாட்டம், அரசியல், தனது வத்திக்கான் பயணம் எல்லாம் பேசப்பட்டது. அந்த சமயங்களில் அலவி மௌனமாக இருந்தார்.

அவர் ஓரு திருமண வைபவத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

பேசிக்கொண்டிருந்த போது மகிந்த ராஜபக்ச, ஒரு உயர் ரக மதுப் போத்தலை (Brandy) எடுத்து வந்து மங்கள சமரவீரவை அருந்தச் சொல்லி அழைத்தார். எனினும் ஏனையவர்களை விடுத்து தான் மது அருந்துவதையிட்டு மங்கள சமரவீர கவலை கொள்ளவில்லை. ஆனால் மங்கள சமரவீரவுடன் மது அருந்த மகிந்த ராஜபக்ச ஆவலாக இருந்தார். இந்த சமயத்தில் அலவி மெளலானா விடைபெற்றார்.

மதுவை அருந்தியபடி "இன்று நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும் ஏனெனில் அங்கு உங்களின் விடயமான இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது அங்கு உங்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் எமக்குப் பயனாக அமைந்திருக்கும்" என மகிந்த ராஜபக்ச கூறினார்.

ஆனால் அதற்கு மங்கள சமரவீர "நான் கடுவெல நீதிமன்றத்திற்கு சென்றபடியால் அங்கு வரமுடியவில்லை" என்றார். ஆச்சரியமான மகிந்த ராஜபக்ச "ஏன் நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள்?" என வினாவினார். இன்று அங்கு சிறீபதி சூரியாராச்சியின் பிணை விசாரணை நடைபெற்றது என மங்கள சமரவீர கூறியதும். மிகவும் ஆச்சரியமடைந்த மகிந்த ராஜபக்ச "சிறீபதி சூரியராச்சிக்கு இன்று வரை பிணை கிடைக்கவில்லை எனக் கூறுகிறீர்களா"? எனக் கேட்டார்.

மங்கள சமரவீர அமைதியானார், நான் உங்களுக்காக தரமான இடியப்பத்தை வரவழைத்துள்ளேன், நீங்கள் அதனை மறுக்கக்கூடாது என மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டார். பின்னர் மூவரும் வாசனையான கறிகளுடன் இடியப்பத்தை உண்டவாறு துடுப்பாட்டம் தொடர்பாக பேசி மகிழ்ந்தனர்.

மங்கள சமரவீர, அலவி மெளலானா ஏற்றிக்கொண்டு வந்ததனால் தற்போது மங்களவுக்கு தனது இல்லத்திற்கு திரும்பிச் செல்வதற்கு வாகனங்கள் இருக்கவில்லை. உடனடியாக குண்டு துளைக்காத வாகனத்தை ஒழுங்கு செய்த மகிந்த ராஜபக்ச, மங்களவை பத்திரமாக அனுப்பி வைத்தார்.

"நாங்கள் தற்போது மோதலை நிறுத்திக் கொள்வோம், லலித் வீரதுங்கவிடம் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுப்பதற்கு உகந்த நாளையும், நேரத்தையும் கொடுங்கள்" என மங்கள சமரவீர செல்வதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச கூறினார்.

மங்கள சமரவீரவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, அவரது மாத்தறை அமைப்பாளர் என்ற பதவியையும் பறித்தெடுத்து, பாதுகாப்புக்களை விலக்கி, அவரது பாவனைப் பொருட்களைக்கூட பறித்த மகிந்த ராஜபக்ச தற்போது அவரை அரசாங்கத்தில் இணையுமாறு மன்றாடியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான மங்களவின் குற்றச்சாட்டுக்களுக்கும், மகிந்த ராஜபக்ச சகோரர்கள் மீதான மற்றும் விடுதலைப் புலிகளுடனான இரகசிய உடன்பாடு என்ற குற்றச்சாட்டுகளுக்கும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்காது மகிந்த ராஜபக்ச, பணிந்தது மங்கள சமரவீரவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.