Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர் கதையாக நீளும் உதயன் மீதான கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கதையாக நீளும்

உதயன் மீதான கொடூரம்

"உதயன்' பத்திரிகையின் மற்றொரு செய்தியாளர் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றார்.

"உதயன்' அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் குழுவொன்று முகங்களை மறைத்துக்கொண்டு இயந்திரத் துப்பாக்கிகளு டன் புகுந்து நாலாபுறமும் சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து, இரண்டு ஊழியர்களை அங்கேயே சுட்டுப் படுகொலை செய்து, பலரைக் காயப்படுத்தி, ஊடக உபகரணங்களை நாசப்படுத்தி, பெரும் அட்டூழியம் புரிந்த கொடூரத்தின் முதலாம் வருட நிறைவு நினைவு தினம் நாளையாகும். கடந்த வருடம் சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் சமயத்தில் ஊடக அலுவலகம் மீதான இந்த அலங்கோலம் அரங்கேறியது. அடுத்த ஊடக சுதந்திர தினம் வருகின்ற இந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் மட்டும் பல்வேறு நெருக்கடிகளை உதயன் அனுபவித்து விட்டது.

அதன் விநியோக மற்றும் ஏனைய அன்றாடப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய அலுவலகச் சாரதி பாஸ் கரன், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பத்திரிகைகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அலு வலக வாகனத்திற்குள் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

உதயன் ஆசிரியபீட அலுவலர்கள் அவ்வப்போது மோசமான அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளானார்கள்.

உதயனின் அச்சுத்தாள் சேமிப்புக் களஞ்சியம் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டது. அவ்வேளை முதல் "உதயன்' பத்திரிகை அச்சிடுவதற்கான பத்திரிகைத்தாளை கொழும்பிலிருந்து தருவிப்பதற்கு நீண்ட பல மாதங்களாக நேரடியாகவும் மறை முகமாகவும் தடை விதிக்கப்பட்டது.

அந்த அவலங்களின் வரிசையில் இப்போது "உதயனின்' அலுவலகச் செய்தியாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய் யப்பட்டிருக்கின்றார்.

யாழ். குடாநாட்டில் தினசரி மேற்கொள்ளப்படும் படு கொலைகள் பற்றிய செய்திகள் அமுக்கப்பட அல்லது அது குறித்து உலகம் பார்த்தும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண் டிருக்க அங்கு தமிழ் இளம் சமுதாயம் ஒன்றே தொடர்ந்து படு கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வரிசைக் குள் ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் சேர்க்கப்பட்டு அவரது குரலும் நசுக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை ஓர் இக்கட்டான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இலங்கை விவகாரத்தில் சர்வதேசத் தின் நேரடிப் பார்வை அதிகம் மொய்த்திருக்கும் இந்தச் சமயத் தில் ஊடகங்களின் அதுவும் இலங்கை இனப்பிரச்சினை யில் சம்பந்தப்பட்ட சிறுபான்மை இனத்தின் சார்பில் வெளி யாகும் ஊடகங்களின் பங்கு பணி மிக முக்கியமானது. அதிலும் தமிழ் ஊடகங்களின் பொறுப்பு வெறுமனே அன்றாடச் செய் திகளைத் தருவதற்கு அப்பால் இரண்டு வித முக்கிய பரிமா ணங்களைக் கொண்டது.

தமது தேசியத்தைப் பேணிக் காப்பதற்கான முக்கிய போராட்ட காலகட்டத்தில் தமிழினம் இன்று நிற்கின்றது. இச் சமயத்தில் தமிழ் மக்களின் கருத்துக்களையும், உள்ளக்கிடக்கைகளை யும் வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைத்துக் கொடுப் பது தமிழ் ஊடகங்களின் பொறுப்பாகின்றது. மக்களின் மன தில் தேங்கிக் கிடக்கும் கருத்து நிலைப்பாட்டை வெளிக் கொணர்ந்து, மக்களின் கருத்துருவாக்கிகளாகவும், எண்ணங் களைப் பிரதிபலிக்க வைக்கும் கண்ணாடிகளாகவும் அவை செயற்படவேண்டும்.

அந்த வகையில் தமது தேசியத்துக்காகவும் தேச நிர்மா ணத்துக்காகவும் போராடும் தமிழ் இனத்தின் தேசிய அபிலா ஷைகளையும், கருத்துக்களையும் ஒருங்குபடுத்தி வெளிக்கொண ரும் உன்னத பணியை தமிழ் ஊடகங்கள் சிறப்பாக ஆற்றி வருகின்றன.

அதேசமயம், மறுபுறத்தில் பௌத்த சிங்கள மேலாண்மை வாதத்தின் அடக்கு முறைக்கும், உரிமை மறுப்புக்கும் உள் ளாகியிருக்கும் தமிழ் மக்களின் உண்மையான அவல நிலையை உலகுக்கு எடுத்துரைத்து, சர்வதேச சமூகத்தின் முன்னால் தமிழர்களின் பக்கத்தில் உள்ள நியாயங்களையும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநியாயங்களையும் அம்பலப்படுத்து வதன் மூலம், சர்வதேச சமூகத்தின் பரிவை பார்வையை ஆதரவை தமிழர்களுக்கு சார்பாகத் திருப்பவேண்டிய பொறுப் பும் தமிழ் ஊடகங்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கின்றது.

இந்த இரண்டாவது அம்சத்திலும், தமிழர் தாயகப் பிர தேசத்திலிருந்து செயற்படும் "உதயன்' உட்பட்ட தமிழ் ஊட கங்கள், தமிழர் தாயகத்துக்கு வெளியிலும், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் செயற்படும் ஏனைய தமிழ் ஊடகங்களுக்கு நிகராகப் பணியாற்றி வருகின்றன.

தவிரவும், உதயனைப் பொறுத்தவரை மோசமான மனித நேய நெருக்கடிக்குள்ளும், அடக்குமுறை அவலத்துக்குள் ளும், கொடூரக் கொலை வெறி ஆபத்துக்குள்ளும் சிக்கித் திணறி அந்தரப்படும் குடாநாட்டு மக்களின் ஒரே குரலாக ஒலித்து, விடயங்களை அம்பலப்படுத்தும் ஒரு மேலதிக பொறுப்பும் கடமையும் அதற்கு உண்டு. இது விடயத்தில் இக்கட் டுகளுக்கு மத்தியிலிருந்து வெளிவரும் உதயனிடமிருந்து ஒலிக்கும் குரல் அது திசை எங்கும் எட்டுகின்றது என்பது தான் நிஜம்

அந்த இக்கட்டான கத்தியின் மீது நடப்பதுபோன்ற அந் தப் பணியை தனக்குரிய நேர்மையுடனும், நியாயத்துடனும் ஆற்றும் சமயத்தில் அதற்காகப் பல்வேறு அழுத்தங்களை நெருக்கடிகளை இக்கட்டுகளை அச்சுறுத்தல்களை வன் முறைகளை கொலைவெறித்தாண்டவங்களை எதிர்கொண்டு முகம் கொடுக்கவேண்டியவனாக நிற்கிறான் உதயன்.

ஊடகங்களின் வாயை மூடுவதன் மூலம் அல்லது அவற்றை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் உண்மையை மறைத்து விடலாம் என சிலசக்திகள் கனவு காண்பதில் அர்த்த மில்லை.

உண்மை நியாயம் என்றும் தோற்பதில்லை. சில சம யங்களில் சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் சத்தியம் ஒருநாள் வென்றே தீரும். அதுவே உலக நியதி.

ஊடகங்களுக்கு எதிரான அநியாயங்கள் அரங்கேறினா லும் உண்மைகள் அம்பலமாவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதே நிஜம்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனில் தொடங்கி நேற்று முன்தினம் உயிரிழந்த செல்வராஜா ரஜிவர்மன் வரை படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பேனாக்களின் மறைவு களுக்குப் பின்னால் உள்ள உண்மைகளும் அம்பலமாகியே தீரும். தமிழ் மக்களின் உணர்வாகவும் உயிர்ப்பாகவும் செயற் படும் "உதயன்' போன்ற ஊடகங்களின் மூச்சும் தமிழினத் துடன் ஒன்றியே இருக்கும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.