Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்தைக் காட்ட புலிகள் நடத்தும் வான்தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்: சிறிலங்கா பிரதமர்.

Featured Replies

பலத்தைக் காட்ட புலிகள் நடத்தும் வான்தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்: சிறிலங்கா பிரதமர்.

தங்களது பலத்தைக் காட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் வான் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குண்டு துளைக்காத கண்ணாடி கூட்டுக்குள் நின்று அவர் பேசியதாவது:

நாட்டில் இன்று புதிய அரசாங்கம் ஒன்று இருக்கும் என்று கடந்த காலத்தில் கூறப்பட்டது. சிலர் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிலங்காவில் நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைதான் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க சிலர் முன்வந்தனர். நாம் யாரையும் அரசாங்கத்திற்குள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல வெற்றிகளை நாம் பெறுகின்றபோது சிலர் அவ்வெற்றியை விமர்சனம் செய்கின்றனர். தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் செய்கின்ற வேலையா இது? இந்த நாட்டுக் குடிமகன் செய்யக்கூடிய வேலையா இது?

விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாதிகளை ஒழிக்கவேண்டும். அதனை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம். தேசத்தை காட்டிக்கொடுக்கவும் வேண்டாம். தேசத்தை காட்டிக்கொடுப்பதன் மூலம் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

புலிகள் தாம் சக்தி படைத்தவர்கள் என்பதை காட்டுவதற்காக இன்று வான் குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். அந்த தாக்குதல்களுக்கு அரசாங்கம் விரைவில் முடிவு எடுக்கும். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக, அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு சதம் கூட குறைக்கப்பட மாட்டாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றைக்கூட முன்னெடுக்காமல் விடமாட்டோம்.

இந்த அரசாங்கம் தனியார் மயப்படுத்தல் கொள்கையுடன் செயற்படுவதாக கூறுகின்றனர். தனியார் மயப்படுத்தப்படல் என்ற பேச்சுக்கே இந்த அரசாங்கத்தில் இடமில்லை. கடந்த அரசாங்கம் பாடிய பாட்டை நாமும் பாடமாட்டோம். அந்த வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படமாட்டோம். நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறு இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிப்போம்.

வடக்கில் மட்டும்தான் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை இரண்டொரு இடங்களை தவிர மற்றைய இடங்களில் எல்லாம் தேசியக் கொடி நாட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற இடங்களில் வாழ்பவர்கள், என்று விடுதலை பெறுவோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் அரசாங்கம் பதில் வழங்கும்.

அரசாங்கம் முன்னெடுக்கின்ற அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளோம். பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இனவாதியாக இருக்கமாட்டார்கள். வடக்கில் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பொதுமக்கள் எங்களுக்கு தகவல்களை வழங்குவார்கள்.

உதவி செய்வார்கள். அதன் மூலமாகவே வடக்கு மக்களை பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து விடுதலை செய்ய முடியும். அதற்குப் பின்னர் அவர்கள் யாரையாவது தெரிவு செய்து கொள்ளட்டும் அது குறித்து எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனையை இன்று வெளியிட்டுள்ளோம். அதில் நாட்டைப் பிரிக்காத தீர்வு என்ற நிபந்தனை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. எமது யோசனைகள் குறித்த விமர்சனங்களை கட்சி, இயக்கம், பொதுமக்களிடையே இருந்து எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன், மக்களை இலகுவில் நிர்வாகத் திற்குள் கொண்டுவருவது தேர்தல்கள் நடத்துவதை குறைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. எமது யோசனைக்கு பெரும்பான்மையோரின் விருப்பத்தை எதிர்பார்க்கின்றோம். யோசனைகள் நூற்றுக்கு நூறு வீதம் கிடைத்தால் நல்லது. ஆனால் காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் பெரும்பான்மையோரின் விருப்பத்தின்படி பொது தீர்வுத்திட்டத்தை தயாரிப்போம். அதன் மூலம் நாட்டை பிரிக்காது பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம். பயங்கரவாத பிரிவினை வாதத்திற்கு பதில் வழங்கும் அதேவேளை, இதர பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் சமமானவர்கள். இது நாம் பிறந்த நாடு. எங்களுக்கு சமமான உரிமைகளை பெற்றுக்கொண்டு எதிர் காலத்தில் அச்சம் பயமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவோம். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தேசிய யோசனை முன்வைக்கப்படவேண்டும்.

அதனை செய்யும் வரை தயவுசெய்து எங்களோடு கைகோர்த்து இருங்கள் என்றார் அவர்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.