Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88.jpg

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்று வருகிறது

இதற்கமைய அனைத்து மொழி பாடசாலைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு இந்த பரீட்சைகள் ஆரம்பமாகின.

பரீட்சைகளுக்கு முன்னர் மாணவர்கள் சோதனையிடப்பட்டதுடன், பாடசாலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீச்சைக்கு சமூகமளித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55,529 மாணவர்களும் தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 31ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தரம்-ஐந்து-புலமைப்-பரிசி/

 

தமிழ் மாணவர்களை பொறுத்தவரையில் படிப்பு என்பது மட்டும்தான் கை கொடுக்கும் என்றாகிவிட்ட நிலையில் இவர்கள் படித்து சாதனைகளை பெற வாழ்த்துக்கள் / பிரார்த்தனைகள். 

படித்து, தரப்படுத்தல் மத்தியில் பல்கலைக்கழகம் செல்வது இமாலய கடினம். அப்படி படித்து பட்டதாரிகள் ஆன பின்னரும் தேர்தல் வரும் காலங்களில் வேலை வாய்ப்பு கேட்டு மீண்டும் போராட்டம். 
  

சிறு வயதில்  இருந்தே தமிழர்களை பொறுத்தவரையில் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்டம்.  

 இவர்கள் படித்து சாதனைகளை பெற வாழ்த்துக்கள் / பிரார்த்தனைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.