Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் உட்பட சில முக்கிய அமைச்சர்கள் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்

Featured Replies

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் உட்பட முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான இரண்டு அமைச்சர்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் சாட்சியங்களை வழங்கினர்.

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு படையினர் தனக்கு தகவல் தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டார்.

இதையடுத்து முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சில் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.hirunews.lk/tamil/221674/பிரதமர்-உட்பட-சில-முக்கிய-அமைச்சர்கள்-இன்று-தெரிவுக்குழு-முன்னிலையில்

 

ஐ.எஸ். அமைப்பு தொடர்பாக 13 தகவல்கள் கிடைத்தது - சாகல

நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்புக்களிடமிருந்து ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக 13 தகவல்கள் கிடைத்தது. அவற்றில்  சிங்கள – முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் பற்றிய ஆறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தாக அமைச்சர் சாகல ரத்நாயக்க பாராளுமன்ற மன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.

sagala.jpg

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டபோதே அவர் தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் கூறினார்.

அரச புலனாய்வு பிரிவு எனக்கு தகவல் கூறுவதில்லை அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கே அறிவிப்பர். ஆனால் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நான் எனது காலப்பகுதியில் 407 புலனாய்வு தொடர்பான கடிதங்கள் கிடைத்துள்ளன. தொலைபேசி  மூலமும் எனக்கு அறிவுருத்தி உள்ளனர். அவ்வாறான நிலையில் தான்  ஐ.எஸ் அமைப்பு பற்றி 13 புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. அவற்றில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்தியர்கள் இலங்கையில் வசிப்பது, ஐ.எஸ் அமைப்பு வெளிநாடுகளில் நடத்தும் தாக்கதல்கள், ஐ.எஸ் அமைப்பு வெளியிட ஆரம்பித்துள்ள சஞ்சிகை, இலங்கையிலிருந்து அந்த அமைப்பின் வலைத்தளங்களை தேடுபவர்கள் பற்றிய தகவல்கள் ஆகியனவும், 2016 ஆண்டில், முதல் முறையாக தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளை நியாயப்படுத்தி வருவதாகவும் தகவல் கிடைத்தது 

அதன் பின்னர் ஐ.எஸ் அமைப்பினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதும் நெருக்கடிகள் பற்றியும், அந்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராக வேண்டும் என்றும், 14.07.2014 அன்று நடந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் அறிவுருத்தியும் இருக்கிறேன். 

அதேபோல் 2018 ஆம் ஆணடில் மத நல்லிணக்கம் பற்றிய 400 மேற்பட்ட நிகழவுகள் நடத்தப்பட்டுள்ளன. அதனையடுத்து புலனாய்வு தகவல்களை பறிமாற்றல், வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடத்திலிருந்து தாக்குதல்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான பத்திரம் ஒன்றும் தயாரிக்கபட்டது. 

2016 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் மத அடிப்படைவாதம் பற்றிய தனியான பிரிவொன்றை அமைத்து, சஹரான் பற்றி பேஸ்புக் மூலம் தேடிப்பார்க்குமாறும் அறிவுரைக்கப்பட்டது என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/62095

பாதுகாப்பு செயற்பாடுகள் மந்தகதியில் - போட்டுடைத்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான  நிலைப்பாடு இல்லாமல் போனதற்கு காரணம் என தான் உணர்வதாக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

67701999_394288841225042_620428201516072

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டது என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான  நிலைப்பாடு இருக்கவில்லை. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே இதற்கான காரணம் என நான் நினைக்கிறன்.

அதேபோல் நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் எனக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/62081

  • தொடங்கியவர்

 

சஹ்ரன் குழுவால் தென்னிந்தியாவுக்கும் ஆபத்து - தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர்

 

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க  வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். 

ranil.jpg

ஈஸ்டர்  தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளிக்கையில் இவற்றை கூறினார். 

இந்த சூழ்ச்சியில் தொடர்புபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேரடி தொடர்பில் மட்டும் அல்ல என்ன வகையிலேனும் தொடர்பு பட்ட நபர்கள் என்றால் அவர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளோம். 

ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது. இது புற்றுநோய் போன்றது. ஒரு குழு முடிந்துவிட்டது என திருப்திகொள்ள முடியாது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். யாரின் கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல வேறு எதனையும் பயன்படுத்த முடியும். புதிய பயங்கரவாத யுகத்தில் உள்ளதாக் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். தனி நபரால் கூட முடியும். இது புற்றுநோய் போன்றது ஆகவே இதில் நாம் அவதானமாக இல்லாத நிலையில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.  

இன்று நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் சீராக உள்ளது. சோல்பரி அரசியல் அமைப்பில் இருந்தே அமைதியையும் நல்லாட்சியையும் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் நாம் அதனை நீக்கிவிட்டோம். ஆனால் முதலில் அமைதியான சூழலும் நல்லாட்சியும் தான் வேண்டும். இது புற்றுநோய் ஆகவே இது முடிவுக்கு வராத வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சஹ்ரன் தமிழில் பிரசாரம் செய்வதால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல். ஆகவே தான் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/62099

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.