Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`இந்தியாவுக்கு நோ சொல்லுங்கள்’ - புதிய பிரசாரத்தைத் தொடங்கிய பாகிஸ்தான்

Featured Replies

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையில் காஷ்மீர் சிறப்புச் சட்டப்பிரிவு 370 பற்றி நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A-வை ஆயுதமாகப் பயன்படுத்தி காஷ்மீரில் உள்ள மக்களின் மனதில் எதிர்ப்பை விதைக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்யும். சட்டப்பிரிவு நீக்கத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும்” எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், `இந்தியாவுக்கு நோ சொல்லுங்கள்’ என்ற புதிய பிரசாரத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு. இதனால் இந்தியாவுடன் எந்த கலாசார பரிமாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, இனி இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முழக்கத்தைப் பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் புதிய உத்தரவுகளின்படி அங்கு ஒளிபரப்பாகும் அனைத்து வகையான இந்திய ஊடகங்களும் நிறுத்தப்படவுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் இந்தியா- பாகிஸ்தான் இடையில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு சட்டப்பிரிவு ரத்துக்குப் பிறகு இயக்கப்பட்ட ரயில், வாகா பகுதியிலேயே நிறுத்தியது பாகிஸ்தான். இனி இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் அறிவிப்பை இந்திய ரயில்வே ஏற்க மறுத்தது. இருந்தும் பாகிஸ்தான் தங்களின் நிலைப்பாட்டிலிருந்து கீழே இறங்கவில்லை. இதையடுத்து, இந்தியாவிலிருந்து இன்ஜின் கொண்டுசென்ற பிறகு ரயில் இயக்கப்பட்டது. இதனால் ஐந்து மணிநேரம் காலதாமதமாக ரயில் டெல்லிக்கு வந்தடைந்தது.

https://www.vikatan.com/government-and-politics/international/pakistan-launching-a-national-slogan-say-no-to-india

 

`மாஸ் காட்டும் ஜெய்சங்கர்!’ - காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்படும் பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததும் அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவுடனான பல்வேறு ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இந்தியாவுடனான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது. காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை இருநாடுகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்ற ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக தொடர்ந்து பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

à®à¯à®¯à¯à®à®à¯à®à®°à¯

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததும் அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவுடனான பல்வேறு ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இந்தியாவுடனான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது. காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை இருநாடுகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்ற ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக தொடர்ந்து பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

 

இந்தியா தொடர்ந்து தெரிவித்து வரும் ஒரு கருத்து, காஷ்மீர் எங்கள் உள்நாட்டு விவகாரம் என்பதுதான். ஆனால், இது வெறும் உள்நாட்டு விவகாரம் என்பது மட்டும் கிடையாது. காஷ்மீரை பொறுத்தவரை மற்ற நாடுகளுக்கான எல்லைப் பகுதியும் வருகிறது. அந்த எல்லைகளில் பல்வேறு சிக்கல்களும் பல ஆண்டு காலமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் இந்தியா, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை திரும்பப் பெற முடியும்.

இதன் காரணமாக பாகிஸ்தானுடன் தொடர்ச்சியாக நட்பு பாராட்டி வரும் சீனா, முதலில் இந்தியாவின் முடிவை கடுமையாக எதிர்த்தது. முக்கியமாக லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதுக்கு தன்னுடைய கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தது. மறுபுறம் பாகிஸ்தானும் தன் பங்குக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலகநாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் கடிதம் மூலம் வைத்தது. ஆனால் இந்த விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என அமெரிக்காவும், ஐ.நாவும் விலகிக் கொண்டன. நீங்கள் `இரு நாட்டு பேச்சுவார்த்தை’ மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்பில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

தனது நட்பு நாடான சீனாவும் காஷ்மீர் விவகாரத்தில் பேசுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி கூறியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் தற்போது உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷி, "பாகிஸ்தானில் இருக்கும் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளோ, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலோ காஷ்மீர் விவகாரத்தில் நாம்மை பூச்செண்டு கொண்டு வரவேற்க தயாராக இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவில் முதலீடு செய்திருப்பதால் நம் பக்கம் நிற்க தயங்குகிறார்கள்” என்றார். காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா ஒருபடி மேலே சென்று இந்தியாவின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா பயணமானார். நேற்று அவர் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யைச் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு காஷ்மீர் விவகாரத்துக்கு முன்னதாகவே முடிவு செய்யப்பட்டபோதும், இந்தச் சந்திப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது காஷ்மீர் விவகாரம்தான்.

 

லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டாலும் அதன் எல்லைகளில் மாற்றமிருக்காது என ஜெய்சங்கர் சீனாவுக்கு உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியா இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுதான் இந்த முடிவை எடுத்ததாகவும் சீனாவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். மேலும் "சீனா இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் கள நிலவரங்களின் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். இயற்கையாகவே இந்தியா மற்றும் சீனா நாடுகள் பொருளாதாரத்தின் அடிப்படையில் வளரும் நாடுகள். அதனால் நம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவு என்பது மிக முக்கியமானது” என ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு சீன அதிபர் இந்தியா வருவது தொடர்பாகவும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்றது. ஏற்கெனவே இந்தியா சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளை மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டனர். அதன் பின்னர் இந்திய சீன உறவு மேம்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் காஷ்மீர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்தியத் தூதராக 2009 -ம் ஆண்டு முதல் 2013 வரை பணியாற்றியுள்ளார். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை சார்பாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சீனாவில் இந்திய தூதராக செயல்பட்ட போது இந்தியா சீனா இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்னைகள் எல்லாவற்றையும் திறம்பட கையாண்டார்.
மேலும் இந்தியா சீனாவின் எதிர்கால உறவு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் சில சர்ச்சைகள் இந்த உறவில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்திவிடாதபடி இருநாடுகளும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது சீனாவின் சார்பில், இந்தியாவிடம் எல்லையில் இருக்கும் பதற்றத்தை தணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா காஷ்மீரின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீனா இந்தியாவின் வளர்ச்சிப் பணிகளை கவனிக்கும் என்றும் தெரித்தார்.

இதனால் சீனாவிலும் ஜெய்சங்கருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என சீனா எடுத்த முடிவுக்கும் ஜெய்சங்கரின் செயல்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை இந்தியாவுக்குப் பெற்று தருவதில் வெளியுறவுத்துறையில் அனுபவம் கொண்ட ஜெய்சங்கரின் பங்களிப்பு என்பது நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததே!

https://www.vikatan.com/government-and-politics/international/indian-foreign-minister-plays-an-important-role-in-kashmir-issue

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.