Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலை. மாணவர்களால் யுத்தம், வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கும் திட்டம்

Featured Replies

முல்லைத்தீவு  மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின் கீழ் யுத்தத்தால் மற்றும் வறுமையால் மாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கும் திட்டம் இன்று  காலை 10 மணியலவில்  இடம்பெற்றது.

 

 

இந்நிகழ்வானது மாங்குளம் பகுதியில் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு எதிராக உள்ள கிராம சேவையாளர் வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மு/மாங்குளம் மகா வித்தியாலய அதிபர் திரு யோகானந்தராசா மங்கல விளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ச்சியாக கல்வி நிலைய பெயர்ப்பலகையினையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

IMG-20190818-WA0044.jpg

பின்னர் வைபவ ரீதியாக கல்வி நிலையத்தை திறந்து வைக்கின்ற நிகழ்வினை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திவாகரனால் மேற்கொள்ளப்பட்டது

ஏறத்தாழ 200 பிள்ளைகள் இலவசக்கல்வி நிலைய ஆரம்பவிழாவுக்கு வருகை தந்ததுடன் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன இன்றைய விழாவின்  விருந்தினராக கலந்து சிறப்பித்த அதீதிகளால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன

வைபவ ரீதியாக இலவச கல்வி நிலைய திறப்பு விழா நிகழ்வுகள் நிறைவு பெற்றதும் தொடர்ச்சசாக ஒன்பது கிராமத்திலிருந்து வருகை தந்திருந்த மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை அனுபவம் மிக்க ஆசிரியர்களுடன் இன்று மேற்கொள்ளப்பட்டது 

இந் நிகழ்விற்கு வருகைதந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தலைவர் திவாகரன் மற்றும் கலைப்பீட ஒன்றியத்தலைவர் கிரிசாந் மற்றும் பல்லைக்கழக மாணவர்கள் மற்றும்  பாடசாலை அதிபர்கள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக வருகைதந்த மாணவர்களுக்கு புலம் பெயர்நாடுகளில் வசிக்கும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பினால் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

IMG-20190818-WA0036.jpg

IMG-20190818-WA0045.jpg

https://www.virakesari.lk/article/62898

  • தொடங்கியவர்

மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!!

மாங்குளத்தில் உள்ள வறிய மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்கு என புலம்பெயா் உறவுகளின் உதவியுடன் அறிவூற்று எனும் இலவச கல்வி நிலையம் இன்று (2019/08/18) திறந்து வைக்கப்பட்டது.

இதில் தரம் 6 முதல் க.பொ.த சாதாரண தரம் வரையிலான மாணவா்கள் இலவசமாக கற்க முடியும்.
 

இந்த இலவச கல்வி நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடைகளை தாண்டி இக் கல்வி நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
போரால் முற்று முழுதாக அழிந்து போய் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள பிரதேசமான மாங்குளத்தில் கல்வியினை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான வேலைகளை முன்னெடுக்கும் மாங்குளம் இளைஞர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
இதே போல ஏனைய இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும்.
FB_IMG_1566110485951.jpg

 

FB_IMG_1566110490054.jpg

 

FB_IMG_1566110492468.jpg
 

https://mankulam-news.blogspot.com/2019/08/blog-post_18.html?fbclid=IwAR2moxgNZr1jkFVRlF50cANcXRYwYYqw-1GcuJT5iw5FUdrhsdmyveRzwx8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.