Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்ள தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்ள தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்

[02 - May - 2007]

* சிங்கள பேரினவாத முனைப்பானது உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே குந்தகமானதென்பதே யதார்த்தமாயுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மு.கா.தலைமைகளும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அரசில் இணைந்திருக்கின்ற போதும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலை மிக அபாயகரமானது எனும் விழிப்புணர்வு பரந்து விரிந்து வீரியம் பெறுவதற்கு முதலாவதாக தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதுதான் மிக அவசியமும் மிக அவசரமுமானதாகும். தலைமைகள் காத்திரமானதொரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடும் பட்சத்தில்தான் மக்கள் சக்தியை வெளிக்கொணர முடியும்

இலங்கையில் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்தின் கொடுமை தொடர்பாக அண்மையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் வைபவமொன்றில் அல் அமீன் ஷ்ரீலங்கா இணைப்பாளர் எம்.ஏ.எம்.மன்சூர் ஆற்றிய உரையில் ஆழ்ந்த கவலை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, அம்பாறை மாவட்ட நிலைமையைப் பொறுத்த வரை அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முதலியோர் அரசியல் இலாபம் கருதி பிரதேச வாதம் பார்த்து காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக் காட்டினார். அம்பாறை மாவட்டம் சார்ந்த எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிநலன், பிரதேச வாதம் துறந்து. இன, மத, மொழி பேதம் மறந்து பரஸ்பரம் இணக்கப்பாட்டுடன் செயற்படத் தவறினால் குறிப்பாக, எதிர்கால முஸ்லிம் சந்ததியினர் நலமிழந்து நிர்க்கதியாக்கப்படுவர் என மன்சூர் எச்சரித்துள்ளார்.

மேலும், விசேடமாக தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு உழைக்காவிட்டால் நிலைமை மோசமடையும் எனவும் அபாய அறிவிப்பு ஒன்றினையும் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம் சிங்கள மயமாக்கல்

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்த வரை, அதனை தனிச் சிங்கள மயமாக்க பாரிய சதி நடைபெற்று வருவதால் அரசுக்கெதிராகப் போராட மக்கள் தயாராக வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. நிந்தவூரில் பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூறுல் ஹக் எழுதிய "முஸ்லிம் பூர்வீகம்" எனும் நூலின் 3 ஆவது அறிமுகவிழாவின் போது உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் விஞ்ஞான தொழில் நுட்ப பிரதி அமைச்சருமாகிய பைசல் காசிம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று பெரும்பான்மை சமூகத்தினால் முஸ்லிம்கள் நசுக்கப்படும் நடவடிக்கைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் வேறுவிதமான நில அபகரிப்பு செயற்பாடுகள் முறியடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.

அதேநேரத்தில், சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக அரசில் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் வாய்களும் கைகளும் கட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பதானது துர்ப்பாக்கியமானதாகும். பிளவு பட்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் ஒன்று பட்டுச் செயற்படுவதற்கு முன்வருவதில்லையெனவும் அவர் கவலை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டம் சிங்கள மயமாக்கப்படும் சூழ்ச்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் குரல் கொடுத்து வருவதையும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை முற்று முழுதாக ஆதரித்து வருவதையும் காண முடிகிறது. இலங்கை அரச தரப்பினர் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்கள ஆதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டுமெனும் குறிக்கோளில் நீண்டகாலமாக படை பலத்தினைப் பாவித்து செயற்பட்டு வந்துள்ளமை ஒன்றும் புதிய விடயமல்ல.

மு.கா.தலைவரின் நிலைப்பாடு

அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்துள்ளது என்பதற்காக தொடர்ந்து வக்காலத்து வாங்க முடியாது, எல்லா அநீதிகளையும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மு.கா.தலைவரும் தபால், தொலைத்தொடர்பு அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் அண்மையில் சாய்ந்தமருதில் இடம் பெற்ற அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அறியக்கிடக்கிறது. மேலும், தாம் எந்தவொரு கட்சியிடமும் அடகுவைப்பவர்களோ, துதிபாடிக் கொண்டு அநீதிகளைத் தட்டிக்கேட்காமல் விடுபவர்களோ அல்ல என்றெல்லாம் ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்.

அதே கூட்டத்தில் உரையாற்றிய மு.கா.செயலாளர் நாயகமும் உபபயிர்ச் செய்கை அபிவிருத்தி பிரதி அமைச்சருமாகிய எம்.ரீ.ஹஸனலி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்கள் பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்ட வண்ணமுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து அரசில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமா என்பது மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார். மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வாறான நில ஆக்கிரமிப்பு முயற்சிகள் பௌத்த தேசியவாத கடும் போக்காளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, சுதந்திரக்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான ஒற்றையாட்சி முறையிலானதாயிருக்குமாயின் மு.கா.அரசில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு எந்த நியாயமும் இல்லையென அழுத்தம் திருத்தமாகக் கூறிவைத்தார்.

மு.கா.அரசுடன் இணைவதற்கு சற்று முன்னதாக தலைவர் ரவூப் ஹக்கீம் "சண்டே லீடர்" (28.01.2007) ஆங்கில வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவைத்த சில விடயங்களைப் பார்ப்போம். அதாவது, அரசுடன் இணைவதன்மூலம் சமாதான முயற்சிகளை மீள தொடர்வதற்கு மு.கா.அழுத்தம் கொடுக்கும். நாம் தேசிய நலன் கருதி மிகுந்த அவதானத்துடன்தான் அரசில் இணையவுள்ளோம். வன்முறைகளை தவிர்த்து பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிம்மதி உண்டு பண்ண உழைப்பது பயனளிப்பதாயிருக்கும் என்றெல்லாம் ஹக்கீம் எடுத்துக் கூறியிருந்தார்.

அரசில் இணைந்து கொள்ளுமாறு மு.கா.வுக்கு ஏதாவது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா என பேட்டியாளரால் வினவப்பட்ட போது சில அறிக்கைகள் அப்படியானதொரு உணர்வலையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அரசதரப்பில் அது கடுமையாக மறுக்கப்பட்டது. எவ்வாறாயினும் இதயசுத்தியாக நடந்து கொள்வது அரசாங்கத்தைப் பொறுத்தது எனவும் அவர் கூறினார்.

அண்மையில் வடக்கு - கிழக்கு இணைப்பு அகற்றப்பட்ட போது அது சிக்கலானதொரு அரசியல் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அரசுடன் விரைவில் இணைய இருப்பதால், பிரதான முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம்களின் நலன் மேலும் பாதிக்கப்படாமலிருக்குமுகமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.