Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வங்கியால் பாதிப்படைவதே அதிகம்’

Featured Replies

2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, பி.ப. 02:36

 

-எஸ்.நிதர்ஷன்

வங்கியால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்ததைவிட பாதிப்படைந்ததுதான் அதிகமெனத் தெரிவித்த தொழிலதிபர் வி.ஜெயேந்திரன், இதனை வங்கிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

image_b2d1ae7162.jpg

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்து வருவதாகவும் மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி, மக்களுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குவததாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே, வங்கிகள், மக்களுக்கு கடன்களை வழங்க முதல் மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வங்கியால்-பாதிப்படைவதே-அதிகம்/71-237114

  • தொடங்கியவர்

பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன் 

அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் சரத்பொன்சேகா கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஓரு இராணுவ ரீதியான கண்ணோட்டமாகவே பார்க்கிறேன். அவர் ஓரு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை.

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றி பேசவேண்டியவர்கள் அனைத்தையும் கைவிட்டு சோமாலியா, தென்சூடான் போன்ற நாடுகளைப் போல் இந்த நாட்டை மாற்ற முயல்கிறார்கள். இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையும் என உணர முடிகிறது. தமிழர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் நகர தயாராகவில்லை. வறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டமையே அதற்கு காரணம்.

எனவே, இலங்கையிலும் அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவம் வழங்கி இன்னொரு அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் எனத்தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/63117

  • தொடங்கியவர்

நடுத்தர வருமான நாடு என்ற நிலையிலிருந்து  முன்னேற ஏற்றுமதி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் 

(நா.தினுஷா)

இலங்கை உயர் நடுத்தர வருமானத்தை பெரும் நாடாக மாறியுள்ளது. இன்று எமது ஆள்வீத வருமானம் 4000 அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. ஆகவே தொடர்ந்து இந்த நிலையில் இருந்துவிட கூடாது. உயர் பொருளாதார வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை வகுத்து கொள்ள வேண்டும். 

உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடியவகை வெளிநாட்டு வருமானம், ஏற்றுமதி பொருளதாரம் என்பவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா -கொரியா தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று  பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

அங்கு தொடரந்து பிரதமர் கூறுகையில் ;

இன்று எமது நாடு உயர் நடுத்தர பொருளதார மட்டத்தை அடைந்துள்ளது. உயர் நடுத்தர வருமானம் தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. அதற்கமைய ஆள்வீத வருமானம் 4000 டொலர்களாக அதிகரித்துள்ளது.  இன்று உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடு என்ற நிலையை அடைந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.  

அதேபோன்று பொருளாதார ரீதியாக நாம் எதிர்க்கொண்டுள்ள சவால்களையும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரே நிலையில் இருக்க முடியாது. உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னேறி ச்செல்ல வேண்டும். அதை நோக்கி பயணிக்காவிட்டால்  பொருளாதார ரீதியாக ஒரு இடத்தில் நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும். 

நாட்டின் அதிக பொருளாதார வருமானத்துக்காக எவ்வாறு எமது வெளிநாட்டு பொருளாதார வருமானத்தை ஏற்படுத்தி கொள்ளுதல், கடன்களை செலுத்துவதற்கு தேவையான நிதியை எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு கடனை மீள செலுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு பதில் தேட வேண்டும்.  இதுவரையில் பாரிய கடனை பெற்றுக்கொண்டுள்ளோம். அந்த கடன் தொகைகளை விரைவாக மீள்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

என்றாவது ஒருநாள் நாம் பெற்றுள்ள மொத்த கடனையும் மீள செலுத்தி கடன் சுமையில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்கு சரியான காலமே தற்போது உருவாகியுள்ளது. கடன் சுமையில் இருந்து மீண்டு வரவேண்டுமாக இருந்தால் எமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இன்று எமது  ஏற்றுமதி பொருளாதாரத்தி அளவை விட இறக்குமதி பொருளாதாரத்தின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி பொருளதாரத்தை விட ஏற்றுமதி பொருளாதாரத்தினூடான வருமானம் அதிகரிக்கும் போதே கடன் சுமையில் இருந்து மீண்டு வருவோம். 

ஜி.எஸ்.பி வரிச்சலுகையினூடாக எமது வருமானத்தை  இன்னும் பெற்றுக்கொள்ள கூடியதாக இக்கும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே உலக சந்தையில் எமது இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எமது சவால். இன்று தேர்தல் குறித்தும் நாட்டை  மீட்டெடுக்குமாறும் கூச்சலிடுகிறார்கள். நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் எமது கடன்களை மீலச் செலுத்த வேண்டும்.  அதனூடாக எமது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/63055

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.