Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் பிரச்சனை.. இன்று களமிறங்கும் திமுக.. டெல்லியில் போராட்டம்.. 14 கட்சிகள் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DMK to protest opposing Kashmir issue today in Delhi

தீவிரமடையும் காஷ்மீர் பிரச்சனை.. இன்று களமிறங்கும் திமுக.. டெல்லியில் போராட்டம்.. 14 கட்சிகள் ஆதரவு

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. திமுக அதை தற்போது கையில் எடுத்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் மிக கடுமையாக எதிர்த்தது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது.

இதில் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் மிக உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அங்கு உடனே ஒடுக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அங்கு இணைய இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இன்று போராட்டம் செய்யும் நபர்கள் அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/dmk-to-protest-opposing-kashmir-issue-today-in-delhi-360811.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®ªà¯à®ªà¯à®¤à¯ à®à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯

திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் களமிறங்கி போராட்டம்.. 

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. திமுக அதை தற்போது கையில் எடுத்துள்ளது. 

தொடக்கத்தில் இருந்தே இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் மிக கடுமையாக எதிர்த்தது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது.

à®à®ªà¯à®ªà¯à®¤à¯ பà¯à®°à®¾à®à¯à®à®®à¯

இதில் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் மிக உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

திமுக லோக்சபா தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் இந்த போராட்டம் நடக்கிறது.விசிக தலைவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சீதாராமன் யெட்சூரி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

à®à®©à¯à®© à®à¯à®°à®¿à®à¯à®à¯

ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அங்கு உடனே ஒடுக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அங்கு இணைய இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த போராட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

à®à®©à¯à®© பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯

இந்த போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இன்று போராட்டம் செய்யும் நபர்கள் அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/dmk-to-protest-opposing-kashmir-issue-today-in-delhi-360811.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DMK protest to give a headache for modi

காஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்?

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும் திமுக அதிக முனைப்போடு செயல்படுவது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அரசியல் கட்சித்தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக போராட்டம் நடத்துகிறது.

இந்தப் போராட்டத்தைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்களில், குறிப்பாக பாகிஸ்தான் ரேடியோவில் இந்தியாவின் மூன்றாவது பெரியகட்சி திமுக என்றும், அந்தக் கட்சி காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் தொடர்ந்து போர்க்குரல் எழுப்புவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்த திமுகவினர், இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட மிசா கருணாநிதியை இந்திய அளவில் கொண்டுசேர்த்தது.

தற்போது மோடி காலத்தில் காஷ்மீர் விவகாரம் தங்கள் தலைவர் ஸ்டாலினை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே முல்லைப்பெரியார், கச்சதீவு. உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக டெல்லியில் இதுவரை திமுக ஆர்ப்பாட்டமோ,போராட்டம் நடத்தவில்லை எனவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக திமுகவின் செயல்பாடு உள்ளதாகவும் பதிலுக்கு பாஜகவினர் கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.

இப்படி சமூக வலைத்தளங்களில் மாறி மாறி கருத்துப்போர் நடக்கும் சூழலில், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தங்கள் போராட்டத்தின் (single agenda) ஒற்றை நோக்கம் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், திமுகவின் போராட்டக்குணம் இன்னும் தொய்வடையவில்லை என்பதை மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உணர்த்தவே காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் விடாப்பிடியாக நின்று குரல்கொடுக்கிறார் எனக் கூறுகின்றனர். மொத்தத்தில் ஆளாளுக்கு தங்களது இருப்பை உணர்த்தவே போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-protest-to-give-a-headache-for-modi-360829.html

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.