Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!!

Featured Replies

 

 
 

இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!! அமைச்சர் தகவலால் பரபரப்பு!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய நிலையில், பாகிஸ்தான் முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா | Edited by Musthak (with inputs from PTI) | Updated: August 27, 2019 20:30 IST
 
இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!! அமைச்சர் தகவலால் பரபரப்பு!

ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

 
New Delhi: 

ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு இந்தியாவுக்கு  தொல்லை கொடுத்தது. மேலும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டிவிட்டு மறைமுக போரிலும் பாகிஸ்தான் நடத்தி வருகிறது. 

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றது. குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை கொண்டு வந்த, பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 

பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடுகளும் ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் ட்வீட் செய்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அமைச்சரவை கூட்டத்தின்போது இந்தியா குறித்து விவாதித்தோம். ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் வான் வழி, நில வழிகளுக்கு தடை விதிப்பது பற்றி பேசினோம். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.' என்று தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் நில மற்றும் வான் வெளிகளுக்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

https://www.ndtv.com/tamil/pakistan-pm-imran-khan-considering-total-closure-of-air-space-to-india-pakistan-minister-2091375?pfrom=home-topscroll

 

இந்தியா - ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு: பாக். அமைச்சர் ஃபாவத் ஹூசைன்

Dkn_Tamil_News_2019_Aug27__815731227397919.jpg

 

டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு என பாக். அமைச்சர் ஃபாவத் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹூசைன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521564

எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா.சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம்..!

Dkn_Tamil_News_2019_Aug27__725292384624482.jpg

காபூல்: எல்லையில் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக அரசுப் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து வருகிறது. ஆப்கான் அரசுக்கு ஆதரவாக  தீவிரவாத அமைப்புகளை  ஒடுக்குவதற்கு அமெரிக்க படைகள் உதவி வருகின்றன. இதனால், அந்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் சட்ட விரோதமாக நுழைந்து   போர் பயிற்சி எடுத்து வந்தனர். இதைத் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு இந்த வேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே 2,600 கி.மீட்டர்  தொலைவுக்கு  முழுமையான வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிந்து விடும் என கூறப்படுகிறது. இந்த வேலியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக நுழையும் தீவிராவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரங்களில் உள்ள நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே, அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எழுதிய கடிதம் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521559

Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.