Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சு.கவுக்கு தமிழரின் நன்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சு.கவுக்கு தமிழரின் நன்றி!

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனை என்ற பெயரில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த திட்டம் தமிழர் தரப்பை மட்டுமல்ல, இலங்கை விவகாரத்தை ஆழ உற்றுநோக்கும் பக்கச்சார்பற்ற பார்வையாளர்களையும் சர்வதேச சமூகத்தையும் கூட அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இராஜதந்திர வட்டாரங்கள் இவ்விவ காரம் குறித்து வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள் இதனையே உணர்த்துகின்றன.

நாட்டில் பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்த நிலை யில் தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் கட்டுமட்டில்லாமல் இடம்பெற அனுமதித்த சூழலில் சுமார் ஒருவருட காலம் இழுத்தடித்த பின்னர் "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' ஒன்றுக்குமே உதவாத, உருப் படியற்ற ஒரு திட்டத்தை தீர்வு யோசனையாக முன்வைத் திருக்கின்றது ஆளும் கட்சி.

தமிழர் தரப்பு ஒட்டுமொத்தமாக ஓரணி சேர்ந்து இந்த யோசனைத்திட்டத்தை அடியோடு நிராகரித்திருக்கின்றமை ஆளும் தரப்புக்கு நல்லதோர் அடி.

விடுதலைப்புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மட்டுமல்ல, தமிழர் தரப்பில் அனைத்துக் கட்சிகளுமே இதனை நிராகரித்து விட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ. பி. டி. பி., இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி மற்றும் ஆனந்தசங்கரி புளொட் சித்தார்த்தன் பத்மநாபா அணி ஆகியவை ஒன்றிணைந்த கூட்டமைப்பு என்பனவும் தமிழர் தரப்பைப் பிரதிபலிக்கும் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் எல்லாமே இந்த யோசனையைக் காட்டமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டன.

இந்த யோசனை மஹிந்த அரசின் திட்டமாக முன்வைக் கப்படவில்லை. அதுபோலவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைப் பிரேரிப்பதற்காக கொழும்பு அரசு அமைத்துள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதியான சிபாரிசும் இதுவல்ல. ஆக, அந்தக் கமிட்டிக்கு ஆளும் அரசுக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சி சமர்ப் பித்த யோசனைத் திட்டம்தான் இது. அப்படியிருக்க இதை ஏன் முடிந்த முடிவாக எடுத்து இவ்வளவு ஆரவாரம் போட வேண்டும் எதிர்ப்புக் காட்டவேண்டும் என்று சில தரப்பு களில் முணுமுணுப்பு வெளிப்படுத்தப்படுகின்றது.

அவர்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் அதற்கு அப்பாலும் சில விடயங்கள் இதில் பொதிந் துள்ளன. அதனால்தான் இந்தத் திட்டத்தைக் கண்டு தமிழர் தரப்பு இப்படிச் சீறுகின்றது.

சு. க. தான் ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சி. அக் கட்சியின் தலைவர்தான் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை வைத்திருப்பவர். அந்தக் கூட்டமைப்பின் அரசுக்கும் அவரே தலைவர். அத்தோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் அவரே.

அத்தகையவரைத் தலைவராகக் கொண்ட ஆளும் கட்சி யின் யோசனைத் திட்டம் இது. அமைதி வழியில் சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டு மானால் இத்தகைய யோசனைத் திட்டத்தை முன்வைத்த கட்சியினதும், அதன் செல்வாக்கு அதிகமுள்ள இந்த அரசின தும், அக்கட்சி மற்றும் அரசின் தலைவரான ஜனாதிபதியின தும் இணக்கமும், உடன்பாடும், ஒத்துழைப்பும் அதற்கு அவ சியமானவை என்பது கண்கூடு.

அவ்வாறு சமரச எத்தனங்கள் மூலம் சுமுகமான தீர்வைக் காண்பதாயின் அந்த முயற்சியில் இந்த அரசு, இந்த அரசின் பிரதான கட்சி, அதன் தலைவர் ஆகிய தரப்புகளின் விட்டுக்கொடுப்பும் தாராளமும், நியாயப்போக்கும் எவ்வளவு தூரம் விரிந்து கொடுக்கும் என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு இந்த யோசனைத்திட்டம் நல்ல அளவுகோலாகும்.

இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் தமிழர் தரப் பின் எதிர்ப்பு இப்போது பீறிட்டுப் பிறந்திருக்கின்றது.

தமிழர் தொட்டுக்கூடப் பரிசீலிப்பதற்கு லாயக்கற்ற ஒரு திட்டத்தையே தீர்வுக்கான யோசனையாகக் கொண்டிருக் கும் ஒரு கட்சியுடன் அந்தக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட அரசுடன் அந்த அரசினதும், கட்சியினதும் தலைவராக உள்ள ஜனாதிபதியுடன் தமிழர் எதைப் பேசி, எதைப் பெறுவது?

இதுவரை, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டு, தோற்றுப்போன சகல யோசனைகளையும் விட மோச மான பலவீனமான வலுவற்ற திட்டம் இது. தமிழர்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வு என்று பரிசீலிப்பதற்கு எந்த ஓர் அடிப்படையுமற்ற வெறும் காகிதாதியே அந்த யோசனைத் திட்ட ஆவணம்.

தென்னிலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதிகளையும் யுத்த வெறியர்களையும் திருப்திப்படுத்தும் நோக் கில் இந்த உருப்படியற்ற அரைவேக்காட்டுத் திட்டம் ஒன்றை முன்வைத்திருக்கும் ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சி, அதன் மூலம் தமிழர் தரப்புக்கு ஒரு நன்மையும் சேர்த்திருக் கின்றது என்பது நோக்கற்பாலது.

தமிழர்களுக்கு, அவர்களின் நியாயமான அபிலாஷை களை நிறைவு செய்யும் தீர்வு ஒன்றை வழங்கும் தாராளமோ அதற்கான நல்லெண்ணமோ தென்னிலங்கைக்குக் கிடை யவே, கிடையாது என்பதை சர்வதேச சமூகத்துக்கு இதன்மூலம் எடுத்துக்காட்டியிருக்கும் அக்கட்சி, அதன் வாயிலாக தமிழ் மக்களின் விடுதலைப் புலிகளின் உரிமைக்கான போராட் டத்தின் நியாயத்தை சர்வதேசம் புரிந்துகொள்ளவும் சர்தர்ப் பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

தென்னிலங்கைச் சிங்களத்துக்குள் ஊறிப் பொதிந்து, ஊதிப் பெருத்து, ஆக்கிரமித்துக் கிடக்கும் பேரினவாத மேலாண் மையையும் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கும் அதி காரப் போக்கையும் சர்வதேசம் மீண்டும் ஒரு தடவை அள விட்டு, அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்தர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமிழர் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து நன்றி தெரிவிக்க வேண்டும். அதுவும் ஒரு வகையில் நியாயமே.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.