Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூர்வாரும் பணியில் அரசியல் கட்சிகள்

Featured Replies

தூர்வாரும் பணியில் உதயநிதியின் திமுக இளைஞரணி!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களைத் தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளார்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களை தூர் வாரும் பணியை முடுக்கி விட்டுள்ளார். 

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

“தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் மக்கள் பணிகளைப் பொறுத்தவரையில் ரஜினி மக்கள் மன்றம் தான் முதலில் களம் இறங்கியது.  அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில் மக்களின் குடிநீர் தேவைகளுக்காக களம் இறங்கியவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர் தான். ( தொடர்புடைய செய்தி : குடிநீர் பிரச்சனை.. சத்தமில்லாமல் களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்! )
 
தொடர்ந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குளங்கள் தூர்வாருதல் என தமிழ்நாடு முழுவதும் பணிகளை தொடர்ந்தனர் ரஜினி மக்கள் மன்றம். தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளும் இதே வழியில் பின் தொடர ஆரம்பித்தனர். 
 
காங்கிரஸ் கட்சி முதல் திமுக, அதிமுக என தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு குளத்தை தூர்வாருவது, எங்காவது ஒரு ஊருக்கு குடிநீர் வழங்குவது என்று மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
 
தற்போது உதயநிதி ஸ்டாலின்,  சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கு திமுக இளைஞரணியினர் அதிக கவனம் கொடுத்து செயல்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றம் முன்னெடுத்த இந்த மக்கள் பணி முயற்சி, தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம் தான்.
 
வடமேற்கு பருவமழை பெய்வதற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்பட்டால் அதை விட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு எதுவும் இல்லை.
 
– வணக்கம் இந்தியா 

https://vanakamindia.com/dmk-youth-wing-desilting-lakes/

 

 

`தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி!’ -

மண்வெட்டியுடன் களமிறங்கிய நெல்லை ஆட்சியர் ஷில்பா

பொதிகை மலையில் நெல்லை மாவட்டத்துக்குள் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில் கடலில் கலக்கிறது. தமிழக எல்லைக்குள்ளேயே உற்பத்தியாகி மாநிலத்துக்குள்ளேயே பயணித்து கடலில் கலப்பதால் தண்ணீர் தாவா எதுவும் இல்லாத நதியாக விளங்குகிறது.

தாமிரபரணி பராமரிபà¯à®ªà¯à®ªà¯ பணி

இந்த ஆற்றின் கரையோரப் பகுதிகளில் முள் செடிகள் புதர்மண்டிக் கிடப்பதால் ஆறு சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. அதனால் தாமிரபரணி நதியைப் பாதுகாக்கும் வகையில் பாபநாசம் பகுதியிலிருந்து நெல்லை மாவட்ட எல்லை வரையிலும் உள்ள 60 கி.மீ தூரத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பணிகளை இன்று தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டினார். பராமரிப்பு பணிகளைப் பார்வையிட்ட அவர் மிகுந்த உற்சாகத்துடன் தானே மண் வெட்டியை எடுத்து புதர்களை வெட்டி அகற்றினார். வழக்கமான அதிகாரிகளைப் போல நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விட்டுச் செல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் பணிகளைச் செய்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/nellai-collector-took-part-in-the-river-cleaning-project

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.