Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போரின் இறுதிநாட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போரின் இறுதிநாட்கள்

இளங்கோ - டிசே

 

Monday, September 30, 2019

 
90களில் இயக்கத்தில் இணைந்துஅடுத்த சில ஆண்டுகளில் போராட்டத்தின் நிமித்தம் ஒரு கையையும்கண்ணையும் இழந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராளியாக இருந்த ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகச் சாட்சியாக இருந்து எழுதிய ஒரு வரலாற்றுப் பதிவு இது.  ஈழத்தில் இறுதி யுத்தம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்து பெரும் கொடூரத்துடன் நடந்து முடிந்திருக்கின்றதுபோர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள்போர் முடிந்தபின்னும் இன்னும் பெரும் உளவியல் நெருக்கடிகளை இராணுவம்/தடுப்புமுகாம் வாழ்க்கை என அனுபவிக்க வேண்டியிருந்தது.

போராளியாக இருந்த வெற்றிச்செல்விக்கு புலிகளின் தலைவர்இறந்துவிட்டார் என்ற களச்செய்தியைக் கேட்டபின் அவரைப்போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளைப் போல அடுத்து என்னமுடிவு செய்வது என்பது பெரும் சிக்கலாகின்றதுஇறுதியில்அவரின் உயிர் போவது இரண்டு இடங்களில் தடுத்துநிறுத்தப்படுகின்றதுமக்களோடு சேர்ந்து சரணடையாமல்சயனைட் குடிப்பதை ஒரு இயக்கத் தம்பி தடுத்து நிறுத்துகின்றார்'இனி எல்லாம் முடிந்தபின் இறப்பது என்பது வீணானதுதயவுசெய்து சயனைட் அடித்துவிடாதீர்கள்இப்படித்தான்காயங்களோடு பங்கருக்குள் நின்றவர்களுக்கு முதல்நாளிரவுசொன்னேன்அடுத்தநாள் காலையில் போய்ப்பார்த்தால்எல்லோரும் சயனைட் அடித்துக் கிடக்கின்றார்கள்நீங்களும்அதைச் செய்துவிடாதீர்கள்என இவர்கள் பதுங்குகுழிக்குள்கிடக்கதன்னைத் தரையோடு தரையாக சாய்த்துக்கொண்டு விழும்எறிகணைக்களுக்கிடையில் அந்தத் தம்பி மீண்டும் மீண்டும்வலியுறுத்துகின்றான் . வாழ்வா சாவா என்று முடிவுசெய்யும்நாணயச்சுழற்சியில் வாழ்வு வெல்கின்றது
இன்னொருமுறை இராணுவத்தை முதன்முதலாகச் சந்திக்கையில்சயனைட்டை மீண்டும் வாயில் வைக்கமுயல்கையில்வெற்றிச்செல்வியோடு இருக்கும் அவரின் பால்யகாலத்தோழியும்அந்தத்தோழியின் தாயாரும் தடுத்து சயனைட் குப்பியைப் பிடுங்கிநிலத்தில் புதைக்கின்றனர்இப்படியான ஏதாவது ஒருசந்தர்ப்பத்தில் வெற்றிச்செல்வியை நாம் இழந்திருந்தால் ஒருமாபெரும் சாட்சியத்தை இழந்திருப்போம் என்பதைவிடஒருஅருமையான போராளியை இழந்திருப்போம்மேலும் தன் கதைகள்எதையும் எமக்குச் சொல்லாமலே அவர் நம் நினைவுகளில்என்றென்றைக்குமாய் இல்லாமற்போயுமிருப்பார்.
 
vetti.jpg
ன்று ஈழப்போர் முடிந்துகிட்டத்தட்ட 10 ஆண்டுகள்முடிந்தபின்போர் பற்றிய நிறையச்சாட்சியங்கள்புனைவுகள் எனவரத்தொடங்கிவிட்டனஆனால்அநேகமானவை தாம் சார்ந்தநம்பிக்கைகளுக்குள் மட்டும்சுருண்டுவிடுவதால் அங்கேபலவேளைகளில் உண்மைகள்காணாமல் எங்கையோதொலைந்துவிடுகின்றனவெற்றிச்செல்வி எவ்வாறுபோராளிகளின் ஓர்மத்தைபெரும்போருக்குள்விபரிக்கின்றாரோ அவ்வாறேகட்டாயமாகப் போரில்சேர்க்கப்பட்டவர்களின் உண்மைநிலைமைகளையும்அந்தப்பொழுதுகளில் மக்களின் மனோநிலைஎப்படி இருந்ததென்பதையும் வெளிப்படையாகப் பேசுகின்றார்அதேவேளை இயக்கம் மீது ஆற்றாமையோடும்கோபத்தோடும்இருந்த  பெரும்பகுதி மக்கள் போராளிகளை ஒருபோதும்கைவிடத்தயாராகவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டபோது வாரித்தூற்றிய மக்களேபிறகுபோராளியாகிப் பசியோடு அவர்கள் திரிந்தபோது அவர்களை பசிதீர்த்து அரவணைத்தார்கள் என்பதையும் பதிவுசெய்கின்றார்.
இந்த இறுதியுத்தம் நாம் நினைத்தே பார்க்கமுடியாக் கொடூரம்நிறைந்ததாக இருந்திருக்கின்றதுஎந்தப்பக்கத்திலும் எவ்விதநியாய/அநியாயங்களுக்கு இடம் இருக்கவில்லைஎப்படி இருந்தமக்கள் இப்படியாயிற்றனரே என எல்லா மனிதவிழுமியங்களும்கரைந்துபோய்விட்டிருந்த நாட்கள் அவைபோரின்போது நிகழும்அழிவுகளைப் போல போரின்பின் வந்த வெறுமையும் விரக்தியும்அவ்வளவு எளிதில் போகமுடியாதவைஅது தன் வாழும் காலம்முழுதும் தன்னோடு வரப்போகின்றது என்றே வெற்றிச்செல்வியும்குறிப்பிடுகின்றார்.
பத்தாண்டுகளானபின்னும்போரில் வெற்றிபெற்றபோதும் இன்றும்சிங்களப்பேரினவாதம் எதையும் விட்டுக்கொடுக்கவோபகிர்ந்துகொள்ளவோ தயாராக இல்லைபோராளிகளும்ஆயுதங்களும் இல்லாமலும்தமிழ் அரசியல் தலைமைகள்என்போரும் மீளாத்துயிலில் இருக்கும்போதும் ஏனின்றும் தமிழர்நிலங்களில் பாரியளவிலான இராணுவமுகாங்களும்கண்காணிப்புக்களும்புத்தர் சிலையுடனான குடியேற்றங்களும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியோசிக்கவேண்டியிருக்கின்றதுஇயல்பான வாழ்க்கையும்,  தன்மொழிஇனம் சார்ந்து தன்னிருப்பு அச்சுறுத்தப்படாத போதும்ஒரு சமூகம் ஒருபோதும் போராடப்போவதில்லை என்பதுபேரினவாத அரசுக்குத் தெரியாமல் இருக்கப்போவதில்லைசிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்துவதன்மூலமே தமது அரசியல் இருப்பை வலுவாக்கலாம் என்ற பேரினவாதசிந்தனையையை ஒழிக்காதவரை எந்தக்கட்சியோ அல்லதுஎவரோ அரசுபீடமேறினாலும் நாட்டில் அவ்வளவு எளிதில் சுபீட்சம்வந்துவிடப்போவதில்லை.
 
ழப்போரின் இறுதி நாட்கள் என்ற இந்நூல் 80களைப் போலஅரசியல் சூழ்நிலை மீண்டும் வந்தாலும்/இருந்தாலும் நம்மைஉணர்ச்சி அரசியலுக்குள் போகவிடாது நமக்கு நிகழ்ந்தபேரழிவைத் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றதுநாம்இறுதியுத்தத்தில் செய்த நம் பக்கத்து தவறுகளிலிருந்து வரலாற்றைஇன்னும் பின்னோக்கி (இந்நூலில் அது இல்லாதபோதும்சென்றுநமது எல்லோருடைய தவறுகளையும் மீள்வாசிப்புச் செய்யச்சொல்கின்றதுகொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையிலும்அந்நியநாடுகளின் தலையீட்டுக்கு இரையாகி ஆயுதங்களைமீண்டும் அவசரப்பட்டுத் தூக்கவேண்டாமென நம்அந்தரங்கத்தோடு உரையாடச் செய்கின்றது.
ஓர் உண்மையான போராளி தான் போராட வந்ததன் நோக்கத்தைஎந்தக் காலகட்டத்திலும் மறந்துவிடுவதில்லைஅந்த ஓர்மம்அந்தப் போராட்டம் தோற்றபின்னால்கூட எங்கோ ஓரிடத்தில்ஒளிர்ந்துகொண்டேதானிருக்கும்அதே சமயம் தங்கள் தவறுகளைஒப்புக்கொள்ளவும் எதிரிகளென நினைத்துப் போராடியவர்களிடம்  அவ்வப்போது வெளிப்படும்  மனிதாபிமானத்தையும்மனந்திறந்துபாராட்டவே செய்யும் (வெற்றிச்செல்வியை பேரூந்தில்ஏற்றி தடுப்புமுகாமிற்கு ஏற்றிச்செல்லும் இளவயதுஇராணுவத்தினனின் மனிதாபிமானம் எவ்வித மறைத்தலுமின்றிஇந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது). 
ஈழப்போரில் இறுதியில் நடந்தவற்றை வாசிக்க -முக்கியமாய்எதையும் அறியவிரும்பாது தமக்கான 'உண்மை'களுடன்போராட்டத்தை விளங்கிக்கொள்ள முயல்வோர்இந்நூலைத்தேடிக் கட்டாயம் வாசிக்கவேண்டும்இதை மட்டுமில்லை அப்புஎழுதிய 'வன்னி யுத்தம்மற்றும் வெற்றிச்செல்வி இந்நூலின்தொடர்ச்சியாக தடுப்பு முகாம் வாழ்வைப் பற்றி எழுதிய 'ஆறிப்போனவலிகளின் காயம்போன்றவற்றையும் வாசிக்கவேண்டும்ஆகக்குறைந்தது இவற்றை வாசித்தாலாவதுஉணர்ச்சிவசப்படாமல்போலிப்பெருமிதம் இல்லாமல் எங்கேஅமைதியாக அரசியல் சார்ந்து இருக்கவேண்டுமென்பதையாவதுநாம் கற்றுக்கொள்ளலாம்.
----------------------------------------------------

(நன்றி: 'அம்ருதா' ‍ ஆவணி, 2019)

 

http://djthamilan.blogspot.com/2019/09/blog-post_30.html?m=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.