Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதியோரின் ஏக்கங்களை உலகம் புரிந்து கொள்ளட்டும்!

Featured Replies

Fea01.jpg?itok=J47V2zu_

சர்வதேச முதியோர் தினம் இன்று

கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர்.

இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து பிறரின் உதவி வேண்டி அவர்கள் காலம் கழிக்கின்றனர்.

மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமை. இதனை எந்த விஞ்ஞான விந்தையாலும் தடுக்கவோ, தாமதித்து விடவோ முடியாது.

இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். 'முதியோர்' என்றால் அவர்கள் யாருமில்லை. அவர்களே நம் பெற்றோர்... நம்மை பெற்று வளர்த்து கல்வியூட்டி சமுதாயத்தில் வாழ வைத்தவர்கள், ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள். நமக்காக, நமது எதிர்கால இனிய வாழ்வுக்காக உழைத்து உருக்குலைந்தவர்கள்.இதனை இன்றைய இளைஞர்கள் மறந்து விடுவது முறையல்ல.

சில வீடுகளில் முதியோர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர்களுக்கு முன்னர் வீட்டிலிருந்த மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய் விடுவதை காண முடிகிறது. சில வேளைகளில் குடும்பத்தினரின் கடின வார்த்தைகளைக் கேட்டு வேதனையோடு சகித்துக் கொள்ள வேண்டிய பரிதாபத்துக்கும் முதியோர் தள்ளப்படுகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

60 வயதை தாண்டியவர்கள் 'தனக்கு வயதாகி விட்டதே என்று கவலைப்படுவது உண்டு. இது இயற்கையின் நியதி என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது.இன்றைய நவீன உலகில் இளவயதினர் சிலர் முதுமையினை வெறுப்புடனேயே நோக்குகின்றனர். இந்த வெறுப்பின் காரணமாக பிள்ளைகளால் வெறுக்கப்பட்ட, கைவிடப்பட்ட முதியோர் பலர் வீதியோரங்களிலும் அநாதை இல்லங்களிலும் காலம் கழிக்க வேண்டியுள்ளது.

இன்று நவீன மருத்துவம், பொது சுகாதார வசதிகள்,நோய் வருமுன் தடுப்பு முறை, துரித சிகிச்சை முறை மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு காரணமாக மக்களின் ஆயுட் காலம் நீடித்து வருகிறது. முதியோரின் நலனில் அக்கறை கொண்ட ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதியை முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியதோடு முதியோரை கௌரவப்படுத்தியும் வருகின்றது. இத்தினம் 1991ம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் அரசாங்கம் முதியோருக்கான பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2000ம் ஆண்டின் 9ம் இலக்க முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டு அதனூடாக முதியோர் உடல், உள, சமூக, சமய, கலாசார நலன்புரி சேவைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. முதியோருக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் இலவச சட்ட உதவிகள் பெற்றுக் கொள்வதிலும் பல ஏற்பாடுகள் இருந்த போதிலும், பெரும்பாலான பாமர மக்கள் இவைபற்றி அறியாதவர்காளாகவே இருக்கின்றனர். இது தொடர்பில் கிராம, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் விழிப்பூட்டல் கருத்தரங்குகளை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும். முதுமைக் காலத்தில் தனிமை, ஏக்கம், மற்றும் சிந்தனை நிறைந்த நிம்மதியற்ற நிலைமையே தோன்றலாம். இவற்றை புறந்தள்ளி சந்தோசமாக வாழவேண்டுமேயானால் மக்களுடன் தொடர்புடைய கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் சங்கம் மற்றும் சிரமதான பணிகளில் இணைந்து செயற்படலாம். இவ்வாறு செயற்படுவோமேயானால் தனிமையும் ஏக்கமும் முதியோரை விட்டு நீங்கி விடும்.

முதுமைக் காலத்தில் பலவிதமான நோய்கள் ஏற்படலாம். சில நடைமுறைகளை கைக்கொள்வதன் மூலம் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சத்துணவு உட்கொள்ளல், போதிய உறக்கம், பொருத்தமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் மது, புகைபிடித்தல்,போதைப் பொருள் பாவனைகளை தவிர்த்தல், மாமிசம், கொழுப்பு,இனிப்பு சேர்ந்த உணவுப் பண்டங்களை குறைத்துக் கொள்ளல்,தினமும் போதிய தண்ணீர் அருந்துதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றினால் பல நோய்களை தவிர்க்க முடியும்.

முதியோர் பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகின்றனர். தனது பிள்ளைகளால் கவனிக்கப்படாமை,நிம்மதியாக வாழ்வதற்கு வீடு ஒன்று இல்லாமை,அனுபவித்து வந்த சொத்துக்களை இழத்தல். மருத்துவ கவனிப்பின்மை, வறுமை, மனஅழுத்தம் போன்ற பெரும் துன்பங்களுடன் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

சில இளைஞர்கள் உத்தியோகம் கிடைத்ததும் தம்மை பெற்று ஆளாக்கிய வயது போன பெற்றோரை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். இவ்வாறான பிள்ளைகளிடமிருந்து பராமரிப்புப் பெற முதியோர் உரிமையுடையோராவர். முதியோர் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் 15 (1) ம் பிரிவில் பிள்ளைகளால் பெற்றோர் பேணிப் பாதுகாக்கப்படுதல் வேண்டும் எனவும்,அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அது பிள்ளைகளின் கடமை மற்றும் பொறுப்பு எனவும் இப்பிரிவில் கூறப்பட்டிருக்கிறது.

முதியோரை கவனிப்பதில் பிள்ளைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தெருக்களில் அலைந்து திரியும் நிலை மற்றும் முதியேர் விடுதிகளிலும் சேர்த்து விடும் நிலை மாற வேண்டும்.

http://www.thinakaran.lk/2019/10/01/கட்டுரைகள்/41226/முதியோரின்-ஏக்கங்களை-உலகம்-புரிந்து-கொள்ளட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.