Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் சீன வரலாறு!

Featured Replies

பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன.


தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான உறவென்பது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே சீனர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

பல்லவர்களின் சிங்கம், மாமல்லபுரம்

 

“கி.மு 100-ம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கப்பலில் பயணம் செய்தால் காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி பரந்தும், மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும், மணி வகைகளும் நிரம்பித் திகழும் நாடு. கி.மு 140 - 86 காலம் முதல் அந்நாட்டுடன் வாணிபம் நடந்துள்ளது” எனக் காஞ்சிபுரத்தைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கிறார். அதுபோல் கி.பி 550 - 600 காலத்தில் சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான்-லி அவர்கள், "தமிழர்கள், எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், வானவியல் அறிவும் பெற்றிருக்கிறார்கள். ஆடவர்கள் அனைவரும் சித்தாந்தம் என்னும் வழிகாட்டி நூலைக் (திருக்குறள்) கற்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

யுவான் சுவாங், மாமல்லபுரம் சிற்பம்

கி.பி 640-ம் ஆண்டில் இந்தியா வந்த யுவான் சுவாங் என்ற சீனப் பயணி அதன் அனுபவங்களை எழுதியிருக்கிறார். கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்தவர், இங்குள்ள புத்த தலங்களுக்குச் சென்று புத்த மதம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரம் வந்து தங்கியிருக்கிறார்.
 
புத்தர், மாமல்லபுரம்
 
தன்னுடைய பயண அனுபவங்கள் குறித்து யுவான் சுவாங் "காஞ்சித் தலைநகர் வளமான பூமி. பழங்களும் பூக்களும் பெரு மதிப்புடைய பல்வேறு பொருள்களும் நிறைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் வீரம் மிக்கவர்களாகவும் நம்பத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். பட்டு வாணிபம் மற்றும் பட்டுத் தொழில்நுட்பம் சீனர்களிடமிருந்துதான் காஞ்சிபுரத்துக்குப் பரவியிருக்கிறது.
பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன. பல்லவர்களின் வீரத்துக்கு அடையாளமாகப் பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியதை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். சிங்கத்தை நாட்டின் அரசனாகக் கருதுபவர்கள் பல்லவர்கள். பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியதற்கான அடையாளமாகக் கிருஷ்ணர் மண்டபத்தில் நான்கு சிங்கங்கள் அடங்கிய சிற்பங்கள் உள்ளன.
 
முதலாவதாக இருப்பது பல்லவர்களின் சிங்கம். இரண்டாவதாக இருப்பது மனிதத் தலையுடன்கூடிய சிங்கம், இது எகிப்து நாட்டோடு தொடர்புடையது. மூன்றாவதுள்ள டிராகன் முகத்தோடு கொண்ட சிங்கம் சீனா நாட்டுடன் தொடர்புடையது. நான்காவது சிங்கம் ரோம் நாட்டுடன் தொடர்புடையது. இவையெல்லாமே பல்லவர்களின் வீரத்துக்கான அடையாளம். அதே மண்டபத்தில் கோவர்த்தன கிரி என்னும் சிலை உள்ளது. இதில் புத்தர் பசுவிடம் பால் கறக்கும் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவிலிருந்து யுவான் சுவாங் வந்து சென்றதற்கான அடையாளமாகக் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரியில் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள தூணில் யுவான் சுவாங் சிலை உள்ளது. அவர் வந்ததற்கான கல்வெட்டு ஒன்றும் இருந்துள்ளது. தற்போது அந்தக் கல்வெட்டு எங்கு இருக்கிறது எனத் தெரியவில்லை.
 
சீனப் பிரதமர் வரும் நிலையில் அந்த இடம் கேட்பாரற்று கிடக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்ற போதி தர்மர், அங்கு தற்காப்புக் கலைகளைப் பரப்பினார். ஜென் துறவியாக அங்கேயே வாழ்ந்து புத்த மத்தைப் போதித்தார். சீன தற்காப்புக் கலைக் கோயில் உள்ள ஷாவ்லின் என்ற இடத்தில், 'காஞ்சியிலிருந்து வந்த த கிரேட் வாரியர் ஆஃப் குங்ஃபூ' என்ற கல்வெட்டு ஒன்று இன்றும் காஞ்சி பல்லவர்களின் பெருமையை உலகுக்குச் சொல்கிறது.
 
1956-ல் நேரு பிரதமராக இருந்தபோது சீனாவின் முதல் அதிபரான சூ-என்-லாய் மாமல்லபுரம் வந்துள்ளார். அவர்கள் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களை சுற்றிப் பார்த்தனர். பிறகு, அருகில் உள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகப்பேறு குழந்தைகள் நல மையத்தை திறந்து வைத்துள்ளார் சூ-என்-லாய்.
 
அப்போது காவல்துறையினரின் கெடுபிடிகள் அவ்வளவாக இல்லை. இதனால் மக்கள் அவர்களை அருகிலிருந்தே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு நெடிய வரலாற்றைக் கொண்டது சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு.
 
63 ஆண்டுகள் கழித்து இந்தியா-சீன வரலாற்றின் அடையாளமாக மோடி-பின்ஜிங் சந்திப்பு அமையப்போகிறது. இந்தியாவில் பல்வேறு முக்கிய இடங்கள் இருக்க, சீன அதிபர் ஜின்பிங் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு வருவது தமிழர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்தச் சந்திப்பு உலகுக்குச் சொல்லும் பாடம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.