Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்

Featured Replies

தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.

தொடர்ந்து டென்மார்க்கில் உயர் படிப்பை முடித்து டென்மார்க் வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணிபுரியும் டேவிட் சாந்தகுமாருக்குத் திருமணமாகி இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். டேவிட் சாந்தகுமாரின் மனைவி டென்மார்க் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். குழந்தைகள் பிறந்த பிறகு தன்னைப் பெற்ற தாயையும் மற்றும் குடும்பத்தாரையும் சந்திக்க விருப்பப்பட்ட அவர், தனது விருப்பத்தை டென்மார்க்கில் உள்ள வளர்ப்பு பெற்றோரிடம் கூறினார்.


ஒருவழியாக அனைவரின் சம்மதத்தைப் பெற்று சாந்தகுமார் தனது உறவுகளைத் தேடி கடந்த 2013ம் ஆண்டு தனியாளாக இந்தியா வந்தார். பல்வேறு இடங்களில் அவரது தாய் மற்றும் உறவினர்களை தேடி அலைந்த சாந்தகுமார் தனது குடும்பத்தார் பற்றிய தகவல் தெரியாத காரணத்தினால் திரும்பிச் சென்றார். அடுத்து ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாள்களில் டேவிட் சாந்தகுமார், இந்தியா வந்து அவரது தாய் மற்றும் குடும்பத்தாரை தேடி தமிழக வீதிகளில் அலைந்தார். கூடவே, அவருக்கு மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து தன்னார்வு தொண்டு நிறுவனம் உதவி கிடைக்கவே, அந்த நிறுவனத்தின் இயக்குநர் அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோருடன் சேர்ந்து தேடுதலைத் தொடங்கினார். அவர்களின் தேடுலில் டேவிட் சாந்தகுமாரின் தத்தெடுப்பு சான்றிதழ்படி அவர் சென்னையில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டிற்கு தத்துக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது

தொடர்ந்து அதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது டேவிட் சாந்தகுமாரின் ஆவணங்கள் பெறப்பட்டன. அந்த ஆவணங்கள்படி தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி அலைந்த சாந்தகுமார் மற்றும் அருண், அஞ்சலி பவார் ஆகியோருக்கு ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தன. மேலும், டேவிட் சாந்தகுமாரின் அண்ணன் ராஜன் என்பவரும் டென்மார்க் நாட்டிற்கு தத்துக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. தனது அண்ணனை டென்மார்க்கில் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார் டேவிட் சாந்தகுமார். இதேபோல், சென்னையில் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி குறித்த அவரது குடும்பத்தார் குறித்து தகவல் தெரியவில்லை. இந்நிலையில், அவர்களின் சொந்த ஊர் தஞ்சாவூர் அடுத்த அம்மாபேட்டை என்பதும் அங்கிருந்துதான் அவரது குடும்பத்தினர் சென்னைக்குக் குடிபெயர்ந்தது என்பதும் தெரியவந்தது.

டேவிட் சாந்தகுமாரின் தேடுதலை விகடன் குழு தொடர்ந்து செய்தி வெளியிட்டது. கடந்த 29ஆம் தேதி வரை திருச்சியில் தங்கி இருந்து தனது தாயை எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தேடிய சாந்தகுமார் `மீண்டும் வருகிறேன்' என நம்மிடம் சொல்லிவிட்டு டென்மார்க் கிளம்பிச் சென்றார்.

இந்நிலையில், டேவிட் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி சென்னை அடுத்த மணலியில் அவரது இளைய மகன் சரவணன் என்பவரின் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதை அடுத்து டேவிட் சாந்தகுமார் மற்றும் அவரது குழந்தைகள் சென்னையில் இருக்கும் தனலட்சுமியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். சில வருடங்களாகத் தாயைத் தேடி தமிழகம் வந்த டேவிட் சாந்தகுமார் தான் கற்றுக்கொண்ட சிறு சிறு தமிழ் வார்த்தைகளில் தாய் உடல்நலம் விசாரிக்க தாய் தனலட்சுமி கண் கலங்கினார். இதைப் பார்த்து டேவிட் சாந்தகுமாரும் கலங்கிப் போனாராம். வரும் நவம்பர் மாதம் தாயைச் சந்திக்க டேவிட் சாந்தகுமார் டென்மார்க்கிலிருந்து தமிழகம் வருவதாகக் கூறியுள்ளாராம். டேவிட் சாந்தகுமாருக்காக தாய் தனலட்சுமியைக் கண்டுபிடிப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்து, தஞ்சை வீதிகளில் அலைந்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், ``டேவிட் சாந்தகுமார், தமிழகம் வந்து தாய் தனலட்சுமியை தேடி அதுகுறித்து விகடன் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பலனாய் டேவிட் சாந்தகுமாரின் தாய் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு நெருக்கடிகளில் தனலட்சுமி அவரின் குழந்தைகளை ஒரு பாதிரியார் மூலம் டென்மார்கைச் சேர்ந்த தம்பதிக்குத் தத்து கொடுத்து உள்ளார். இது நடந்த சில வருடங்களில் அவரின் கணவர் கலியபெருமாள் இறந்துவிட்டார். அடுத்தடுத்த நெருக்கடிகளில் நொடிந்து போன தனலட்சுமி சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து அவரின் இளைய மகன் உள்ளிட்ட பிள்ளைகளை வளர்த்துள்ளார்.

டேவிட் சாந்தகுமாருக்குத் தாயிருக்கும் இடம் தெரிந்ததும் அவர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சரி பார்த்தோம். தனலட்சுமி சாந்தகுமார் மற்றும் ராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்களை இதுநாள் வரை பத்திரமாக வைத்திருந்தார். அதன்மூலம் தனலட்சுமிதான் டேவிட் சாந்தகுமாரின் தாய் என்பதை உறுதி செய்தோம். வரும் நவம்பர் மாதம் டென்மார்க்கிலிருந்து டேவிட் சாந்தகுமார் தாயைச் சந்திக்க வருகிறார். அந்த நாளுக்காகக் காத்து இருக்கிறோம். சாந்தகுமாரின் தாய் கிடைப்பதற்கு விகடன் செய்த உதவியை எந்த நாளும் மறக்க மாட்டோம்" என்றார் உணர்ச்சி பெருக்குடன்.
தாயைத்தேடி அலைந்த மகனின் 39 வருடப் போராட்டம் நெகிழ்ச்சியாக முடிந்திருக்கிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/david-santhakumar-find-out-his-mother-after-39-years

 

  • தொடங்கியவர்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.