Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக முடிவை எதிர்பார்த்து 9 வருடங்களாக வீட்டிற்குள் மறைத்து வாழ்ந்த குடும்பத்தவர்கள்- நெதர்லாந்தில் மீட்பு

Featured Replies

உலகமுடியும் நாளை எதிர்பார்த்து பண்ணையொன்றில் 9 வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேரை நெதர்லாந்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் டிரென்தே என்ற மாகாணத்தில் உள்ள பண்ணையில் பல வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஆறு பேரையே காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வீடொன்றில்  ஆறு பேரை நாங்கள் கண்டுபிடித்தோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

55 வயதான தந்தையையும் ஐந்து பிள்ளைகளையுமே கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் அருகிலுள்ள மதுபானநிலையத்திற்கு சென்று மதுபானத்தினை கொள்வனவு செய்யமுயன்றவேளையே இவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

நபர் ஒருவர் என்னிடம் வந்து ஐந்து பியர்களை வேண்டி குடித்தார் என மதுபானசாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அவர் நீண்டதலைமுடியுடனும் நீண்ட தாடியுடனும் காணப்பட்டார் பழைய ஆடைகளை அணிந்திருந்தார், குழப்பத்தில் காணப்படுபவர் போல காணப்பட்டார் என மதுபான சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

19777270-7578557-image-m-30_157121332517

 

அவரிடம் நான் பேச்சுக்கொடுத்தவேளை அவர் ஒருபோதும் பாடசாலை செல்லாததும தெரியவந்தது என குறிப்பிட்டுள்ள மதுபான சாலையின் உரிமையாளர் அவர் தனது பண்ணையில் சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளதாகவும் தானே வயதில் மூத்தவான் எனவும் அவர்கள் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை என தெரிவித்தார் எனவும் மதுபான சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மதுபான உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அவர்கள் அந்த பண்ணை வீட்டிற்கு சென்று சோதனை செய்தவேளை மறைக்கப்பட்ட நிலையில் படிகளை கண்டுள்ளனர்.

அதனை பின்தொடர்ந்து சென்றவேளை காவல்துறையினர் மறைந்து வாழும் குடும்பத்தவர்களை கண்டுள்ளனர்.

மரங்களால் மறைக்கப்பட்ட பண்ணை வீட்டிலேயே இவர்கள் வாழ்ந்துள்ளனர்.

நான் அவர்களிற்கு ஒருபோதும் கடிதங்களை வழங்கவில்லை என அந்த பகுதியின் தபால்காரர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67020

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில்... இப்படி ஒரு குடும்பமா?
எல்லோரின் வாழ்க்கையையும்... கிறுக்குப் பிடித்த தந்தை பாழாக்கி விட்டார்.  

  • தொடங்கியவர்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.