Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரம்; அணைகள் நிரம்புகின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரம்; அணைகள் நிரம்புகின்றனபடத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 சென்டி மீட்டர் மழையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

கோயம்புத்தூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிரது. இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அணையின் நீர்மட்டம் 126 அடியாக உயர்ந்தள்ளது. அணைக்கு நீர் வரத்து 3,169 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஆயிரத்து நானூறு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.8 அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

இரவுக்குள் நிரம்பிவிடுமா பவானி சாகர்?

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஐந்து நாட்களுக்கு முன்பு 96 அடியாக இருந்த பவானி சாகர் அணையின் உயரம் தற்போது 101.21ஆக உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 13,211 கன அடியாக உள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணை இரவுக்குள் நிரம்பிவிடுமென எதிர்பார்க்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திறக்கப்பட்ட தூவானம் அணை

தேனியில் உள்ள தூவானம் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுவருகிறது. அம்மாவட்டத்தில் உள்ள சுருளி அருவில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்துவருகிறது.

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் கன மழையால், கோதையாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குற்றாலத்தில் உள்ள பெரிய அருவி (மெயின் ஃபால்ஸ்), ஐந்தருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரம்; அணைகள் நிரம்புகின்றனபடத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், "வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியிலும் வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தவிர, அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக, பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழையோ, மிக கன மழையோ பெய்துள்ளது." என்று தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் பகுதிகளில் 21, 22 தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-50124453

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.