Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பதியில் 10,000 ரூபாய் நன்கொடை அளித்தால், இனி எல்லோரும் வி.ஐ.பிதான்!

Featured Replies

கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும்.

திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், எல்லோரும் 40 அடி தள்ளி நின்றுதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 10,000 ரூபாய் பணம் கட்டினால் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அருகில் நின்று தரிசிக்கலாம். தீபாவளி இனிப்பாக இனிக்கும் இந்தச் செய்தியை விரிவாகப் பார்ப்போம்.

Tirupati
 
Tirupati

திருமலை திருப்பதி வேங்கடசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட்டுடன்கூடிய சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், 300 ரூபாய் தரிசனம், வி.ஐ.பி-க்கள் தரிசனம் எனப் பல்வேறுவிதமான தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

திருமலைக்கு வரும் வி.ஐ.பி-க்கள் தரிசனத்துக்காக எல்-1, எல்-2, எல்-3 என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தரிசன நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை என 3 மணிநேரம் ஒதுக்கப்பட்டு வந்தது.

ஆந்திராவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜகன்மோகன் ரெட்டி அரசு பல அதிரடியான சீர்திருத்தங்களை ஆந்திரா முழுவதும் செய்துவரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் சில சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. ஏற்கெனவே வி.ஐ.பி தரிசன நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாகக் குறைத்தது. இதனால், தினமும் 5,000 பக்தர்கள் சர்வ தரிசனம் செய்துவருகின்றனர்.

Jegan mohan reddy
 

Jegan mohan reddy

 

இந்தியா முழுவதுமுள்ள எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வி.ஐ.பி தரிசனம் என்ற பெயரில், தினமும் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தரிசனம் செய்துவந்தனர்.

இந்த வி.ஐ.பி தரிசனத்துக்குச் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி-க்களின் சிபாரிசுக் கடிதங்கள் பெற்றுவந்து அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் தரிசனம் செய்துவந்தனர்.

தினமும் 2,500 பேர் என்கிற கணக்கில் வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகி வந்தன. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய். ஆனால், இந்த வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகள் 20,000, 30,000 ரூபாயென அதிக விலைக்கு புரோக்கர்களால் விற்கப்படுவதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

லட்சக்கணக்கான மக்கள் செல்லும் திருப்பதியில் இந்த 2,500 பேர் மட்டுமே பெருமாளை அருகில் இருந்து தரிசிக்க முடியும். எவ்வளவு படிப்பு இருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும் பெருமாளை அருகில் சென்று பார்க்க முடியாத நிலையே இருந்து வந்தது.

 

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், வி.ஐ.பி தரிசன டிக்கெட் ஒன்றின் விலை 10,000 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலய நிர்மாண டிரஸ்ட் என்னும் `ஸ்ரீவாணி' அமைப்புக்கு பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால், அவர்களுக்கு ஒரு வி.ஐ.பி தரிசன டிக்கெட்டை வழங்குகிறார்கள். ஒருவருக்கு 9 டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும்.

பக்தர்கள் திருமலையிலிருக்கும் கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும்.

 

இந்த வி.ஐ.பி தரிசன டிக்கெட்டைக் கொண்டு நாம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை இரண்டடி இடைவெளியில் தரிசனம் செய்யலாம். இது மிகப்பெரிய பேறு.

கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி செல்லும் அனைவரும் பெருமாளை அருகில் சென்று தரிசனம் செய்யும் முறைதான் இருந்துவந்தது. அப்போதெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் என்கிற கணக்கில்தான் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால், இப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் கூடுவதால், எல்லோரையும் அருகில் சென்று பார்க்க அனுமதிப்பதில்லை.

ஸ்ரீவாணி டிரஸ்ட் மூலம் கிடைக்கின்ற தொகை திருப்பதி கோயில் நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல், திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக உதவி பெற்று இந்தியா முழுவதும் உள்ள பல கோயில்களுக்குப் புனர்நிர்மாணம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இந்தச் செய்தி அமைந்துள்ளது. காலப்போக்கில் எல்லோரும் அருகில் சென்று சுவாமியை தரிசனம் செய்கிற நிலையும் வரும், வர வேண்டும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

https://www.vikatan.com/spiritual/temples/now-you-can-get-vip-darshan-ticket-in-tirupati-by-donating-ten-thousand-rupees

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.