Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின்  பிரச்­சி­னைகள் தொடர்பில் அவ­தானம் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின்  பிரச்­சி­னைகள் தொடர்பில் அவ­தானம் தேவை

எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான பிர­சா­ரப்­ப­ணிகள் தீவி­ர­ம­டைந்து செல்­கின்­றன.  பிர­தான அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள்  தமது கொள்கை பிர­க­ட­னங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.  நாட­ளா­விய ரீதியில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் தமது கொள்­கை­க­ளையும் அபி­வி­ருத்தி திட்ட யோச­னை­க­ளையும் வெளி­யிட்டு வரு­கின்­றனர்.  இன்னும்  13 நாட்­களே  ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்­திற்கு எஞ்­சி­யுள்ள நிலையில் மிகவும்  அதி­க­ள­வான பிர­சார கூட்­டங்கள்  ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் தாம்  ஆட்­சிக்கு வரும் பட்­சத்தில் இவ்­வா­றான அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் நாடு அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கலா­சார ரீதியில் எவ்­வாறு அடுத்த கட்­டத்­திற்கு  கொண்­டு­செல்­லப்­படும் என்று  தமது தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில்  உரை­யாற்­றி­ வ­ரு­கின்­றனர்.

தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் மக்­க­ளிடம் வாக்­கு­று­தி­களை  அள்­ளி­வீ­சி­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.  குறிப்­பாக  வறு­மையை போக்­குதல்,  மக்­களை  பொரு­ளா­தார ரீதியில் வலுப்­ப­டுத்­துதல், பாது­காப்பை  உறு­திப்­படுத்­துதல் உள்­ளிட்ட  பல்­வேறு முக்­கிய விட­யங்கள் தொடர்­பாக இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் மக்­க­ளிடம்  வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கின்­றனர்.
இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் இரண்டு வேட்­பா­ளர்­களும் கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றனர்.  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு பிர­தே­சங்­களில் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்டு  அவர்­களின் வாழ்க்கை  ஒளிம­ய­மாக்­கப்­படும் என்ற வகை­யி­லான கருத்­துக்கள் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னாலும்  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மையில் யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட  தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் விரைவில் தீர்க்­கப்­படும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அத்­துடன்  தற்­போது தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள்,  புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு சமூக மயப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என கோத்­த­பாய ராஜ­பக் ஷ உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.  அதே­போன்று  கண­வனை இழந்த பெண் குடும்ப தலை­வி­களின் வாழ்­வா­தாரம் மேம்­ப­டுத்­தப்­படும் என்றும்  வடக்கு, கிழக்கு சமூக அபி­வி­ருத்தி விரை­வு­ப­டுத்­தப்­படும் என்ற தொனி­யிலும் எதி­ரணி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்தார்.  அதே­போன்று  வவு­னி­யாவில் பிர­சா­ரக்­கூட்­ட­மொன்றை நடத்­திய புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தாஸ வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­வைப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கிறார்.  போரில் பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பினர் என்ற ரீதியில் மக்­களின் கவ­லைகள் கஷ்­டங்கள், துய­ரங்கள் என்­ப­வற்றை நான் அறிந்­து­ கொண்­ட­வ­னாக இருக்­கின்றேன். அதனால் மக்­களின் கவலை கஷ்­டங்­களைத் தீர்த்து மக்­க­ளது வாழ்வை வள­மிக்­க­தாக மாற்­று­வதில் முன்­னின்று செயற்­ப­டுவேன் என்று வவு­னி­யாவில் இடம்­பெற்ற கூட்­டத்தில் சஜித் பிரே­ம­தாஸ உறு­தி­ய­ளித்தார்.

எமது ஆட்சி வந்­ததும் சர்­வ­தேச பிர­தி­நி­தி­களை அழைத்து வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் தனித்­த­னி­யாக  நிகழ்­வு­களை நடத்தி சர்­வ­தேச  ஆய்வு மையங்­களை அமைத்து  அபி­வி­ருத்­தியின் கேந்­திர நிலை­ய­மாக மாற்­றி­ய­மைப்பேன் எனவும் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ வடக்கு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கிறார்.  அந்­த­ வ­கையில் இரண்டு பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்­களின் பொரு­ளா­தார சமூக  பிரச்­சி­னை­களை தீர்த்­து­வைப்­பதில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தாக  வாக்­கு­றுதி அளித்­தி­ருப்­பதை  அவ­தா­னிக்க முடி­கி­றது.

முக்­கி­ய­மாக நாடு­மு­ழு­வதும் பிர­சா­ரங்­களில்  ஈடு­படும் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் வடக்கு, கிழக்கு விட­யத்தில் கூடிய அவ­தா­னத்தை செலுத்த வேண்­டிய தேவை உள்­ளது.  வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்த வண்­ணமே வாழ்ந்து வரு­கின்­றனர்.  

யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் இது­வரை தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வில்லை. யுத்­தம் முடி­வ­டைந்த பின்னர் இரண்டு அர­சாங்­கங்கள் பத­வியில் அமர்ந்­து­விட்­டன. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் விசே­ட­மாக யுத்­தத்தின் கார­ண­மாக ஏற்­பட்ட பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் காணப்­ப­டு­கின்­றன.  மிக முக்­கி­ய­மாக இன்னும்  தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள  தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விமோ­சனம் இல்­லாத நிலைமை நீடிக்­கி­ன்­றது.  சுமார் 200 பேர் வரையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  இந்த அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக கடந்த பத்­து­வ­ரு­டங்­க­ளாக  வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் இது­வரை   தீர்வு கிடைக்­காத நிலைமை நீடிக்­கி­றது. இது தொடர்பில் பிர­தா­ன ­வேட்­பா­ளர்கள் இரு­வரும் முக்­கி­ய­மாக கவனம் செலுத்­த ­வேண்டும். அது­மட்­டு­மன்றி  காணாமல் போனமை தொடர்பில்  வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் 19 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட எழுத்­து­மூல  முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.  எனவே  இந்தப் பிரச்­சி­னைக்கும்  ஒரு விரைந்த தீர்வு அவ­சி­ய­மா­கி­றது. காணா­மல்­போ­னோரின் உற­வுகள் பாரிய இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் சமூகப் பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றனர்.  காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாமல்  அவர்­களின் உற­வுகள் பாரிய  தவிப்­புடன் வாழ்ந்து வரு­கின்­றனர்.  இந்த விடயம் தொடர்பில் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும் பாரிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. தாம் ஆட்­சிக்கு வந்­ததும் எவ்­வாறு  இந்த மக்­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்­பது தொடர்­பாக இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் சரி­யான முறை­யி­லான வாக்­கு­று­தியை மக்­க­ளுக்கு வழங்­க­வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க யுத்­தத்­தினால் கண­வனை இழந்த பெண் குடும்­பத்­த­லை­விகள்  பாரிய இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் தமது குடும்­பங்­களை நடத்தி செல்­கின்­றனர். பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு பிரச்­சி­னை­களை  இந்த குடும்­பங்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றன. மிக முக்­கி­ய­மாக நுண்­கடன் என்ற கடன் முறைமை கார­ண­மாக பல்­வேறு பெண் குடும்­பத்­த­லை­விகள்  சிக்­கல்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே  கண­வனை இழந்த பெண் குடும்­பத்­த­லை­வி­களை பொரு­ளா­தார ரீதியில் வலுப்­ப­டுத்தும் வகையில் திட்­டங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது பத­விக்கு வரப்­போ­கின்ற ஜனா­தி­ப­தியின் மிக முக்­கி­ய­மான கட­மை­யாக அமையும்.

வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் புதிய தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­துடன் பல்­வேறு துறை­களில் உள்ள மக்கள் அந்த துறை­களில் முயற்­சி­களை மேற்­கொண்டு தமது வாழ்­வா­தா­ரத்தை  முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்கள் உரு­வாக்­கிக்­கொ­டுக்­கப்­ப­டு­வது மிக அவ­சி­ய­மாகும்.  

சுய தொழில்­மு­யற்­சி­களை முன்­னெ­டுத்து  வாழ்­வா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கிக்­கொ­டுக்­கப்­ப­டு­வது கட்­டா­ய­மாகும்.  அத்­துடன்  வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­களின் இளைஞர், யுவ­தி­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் தீர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.  மிக முக்­கி­ய­மாக இப்­ப­கு­தி­களில் புதிய தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு முத­லீ­டு­களை கொண்­டு­வ­ரு­வது அவ­சி­ய­மாகும்.

அது­மட்­டு­மன்றி  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், மீன்பிடி, சிறுதொழில் முயற்சி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் துரிதகதியில் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதில் வெற்றிபெறப்போகும் வேட்பாளருக்கு மிகப்பெரிய பொறுப்புகள் காணப்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். யார். ஜனாதிபதியாக வந்தாலும் இந்தப் பிரச்சினைகள்  மிக அவசரமாக தீர்க்கப்படவேண்டும் என்பதை மனதில் கொள்வது  அவசியமாகிறது.

யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்கள் ஆகியும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படவேண்டும்.  இரண்டு பிரதான வேட்பாளர்களும் இந்த விடயம் தொடர்பில் இதய சுத்தியுடன்  வாக்குறுதிகளை வழங்குவது கட்டாயமாகும்.  இந்த மக்களின் இந்த அவசர மனிதாபிமான விடயங்களை ஆராய்ந்து விடிவைப் பெற்றுக்கொடுக்க அதிகாரத்திற்கு வரப்போகின்றவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம்.

 

https://www.virakesari.lk/article/67978

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.