Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய அரசின் நிதி முடக்கம் கவலை தரவில்லை - சிறீலங்கா அரசு உதாசீனம்

Featured Replies

பிரித்தானிய அரசின் நிதி முடக்கம் கவலை தரவில்லை - சிறீலங்கா அரசு உதாசீனம்

பிரித்தானிய அரசு, சிறீலங்கா அரசிற்கு வழங்குவதாக உறுயளித்திருந்த 5.9 மில்லியன் அமெரிக்க டொலரில், எஞ்சியுள்ள 3 மில்லியன் அமெரிக்க டொலரை தற்பொழுது வழங்க முடியாது என, கடந்த வாரம் அறிவித்திருந்தது.

பிரித்தானியாவின் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் கறத் தோமஸ் இந்த அறிவித்தலை விடுத்ததுடன், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்கா வெளிவிகார அமைச்சர் றோஹித போகொல்லகம, பிரித்தானிய அரசின் இந்த நிதி முடக்கத்தை தமது அரசு ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை எனவும், இதில் தமது அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை என்றும் கூறினார்.

இருப்பினும் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கென பிரித்தானிய அரசு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதியை தற்பொழுது வழங்க மறுப்பது முறையற்ற செயல் எனவும் போகொல்லாகம கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மட்டும் 700ற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்ப் போயிருப்பதாகவும், அரச படைகளும், ஒட்டுக் குழுக்களும் படுகொலைகளைப் புரிந்து வருவதுடன், ஆட் கடத்தலில் ஈடுபடுவதாகவும், பிரித்தானிய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்

பிரிட்டனுக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு போராட்டங்கள்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக நடந்த விவாதத்திற்கு எதிராகவும், அதன்பின்னர் பிரித்தானிய அரசு இலங்கைக்கான நிதி உதவித்தொகையை நிறுத்திவைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பிரித்தானியாவில் இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் ஒருங்கே கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்பாடுகளிற்கெதிராகவும் தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன.

பெளத்த மதகுரு அல்லே குணவன்ச தேரர் தலைமையிலான இலங்கை தேசாபிமான முன்ணணி என்ற அமைப்பு கொழும்பு பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் இன்று இவற்றிற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது அதேவேளை, பாராளுமன்ற அவையில் ஜே.வி.பியின் கோரிக்கையின் பேரில் இது குறித்த நீண்ட பிரத்தியேக விவாதமொன்றும் நடந்தது.

இதில் உரையாற்றிய ஜே.வி.பியின் பாராளுமன்றக்குழுவின் தலைவரும், பிரச்சார செயலாளருமான விமல் வீரவன்ச, இலங்கை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரம் பெற்று சுமார் 50 வருடங்களிற்கு மேலாகிவிட்ட நிலையில் இலங்கையில் உள்நாட்டு விடயத்தில் அது தலையிடுவதற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்று தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/

  • தொடங்கியவர்

இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை விவகாரத்தில் பிரித்தானிய தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டு, வாசகம் பதிக்கப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர்.

இலங்கை விவகாரத்தில் பிரித்தானிய மேற்கொண்டு வரும் நடவடிக்கையானது, புலிகளுக்கு சார்பாக இருப்பதாகதோடு, நாட்டின் உரிமையை மீறும் செயல் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் கூறினர்.

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.