Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிராயச்சித்தம் செய்யுமா பிரிட்டன்?

Featured Replies

பிராயச்சித்தம் செய்யுமா பிரிட்டன்?

இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளுக்கு இடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத் துடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது.

இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் உத் தேச மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக் கிடைக்க முன்னரே இந்த மாநாடு குறித்து பேச்சுகள் அடிபடும் ஆரம்ப நிலையிலேயே இத்தகைய முடிவை முந்திக் கொண்டு கொழும்பு விடுக்கும் என்று எண்ணப்படவில்லை.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதற்கென தனக்கென தனியான இராணுவத் தீர்வை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சி நிரல் ஒன்றை வகுத்து, அதன்படி காரியங்களை மேற்கொண்டு, காய்களை நகர்த்திவரும் இலங்கை அரசு, அதைக் குழப்பும் விதத்திலான மேற்படி முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி, இணங்கிச் செயற் படாது என்பது நிச்சயம்.

இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தில் நடத்தப்பட்ட விசேட விவாதம் மற்றும் அது சம்பந்த மாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அரசு அலட்டிக்கொள்ள மாட்டாது என்றும் அரசுப் பேச்சாளர் அறிவித்திருக்கின்றார்.

ஆக, இலங்கை விவகாரம் குறித்து கவனமும், சிரத்தை யும் கொண்டுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவுக்கு இலங்கை அரசு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லி விட் டது. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங் கள் என்பதுதான் அந்தத் திட்டவட்டமான செய்தி.

சரி. பிரிட்டிஷ் சர்வகட்சி நாடாளுமன்றக் குழு இது விட யத்தில் இனி என்ன செய்யப்போகின்றது? இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து முன்னெப்போது மில்லாதவாறு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் உரக்கக் குரல் எழுப்பி, இவ்விடயத்தின்பால் உலகின் கவ னத்தைத் திருப்பிய பிரிட்டிஷ் எம். பிக்கள், இப்போது முகத்தில் அடித்தாற்போல இலங்கை அரசு விடுத்திருக்கும் அறிவிப்பை அடுத்து வாயை மூடிக் கொண்டு அமைதி காக்கப் போகின்ற னரா? அல்லது ஆக்கபூர்வமாக ஏதேனும் நடவடிக்கை மேற் கொள்ளப் போகின்றனரா?

இது விடயத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் கள் குழு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு முன்னர் அந் தக் குழுவுக்கு சில விடயங்களை ஈழத் தமிழர் தரப்பிலி ருந்து சுட்டிக்காட்டுவது நமது கடமையும் பொறுப்புமாகின்றது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்கு எதிரான கொடூர அடக்குமுறை கட்டவிழ்வதற்கும், அப்பிரச்சினையைத் தீர்ப் பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அமைதி முயற்சிகள் இப்போது மோசமான கட்டத்தை அடைந்து, குழம்பி, பெரும்போர் வெடிக்கக்கூடிய இன்றைய இக்கட்டு நிலைமை ஏற்பட்டதற்கும் பிரிட்டிஷ் அரசுத் தலைமைகளின் பொறுப்பற்ற உதாசீனமான போக்கே பிர தான காரணம் என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.

சரித்திர காலம்தொட்டு இலங்கைத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் தனித்தனி மொழி, பண்பாடு, பழக்க வழக் கங்கள், வெவ்வேறான தாயகங்கள் என்பவற்றுடன் இரண்டு வெவ்வேறு தேசங்களாகவும் தேசியங்களாகவுமே வாழ்ந்து வந்தனர்.

தமிழர் தேசம், சிங்களவர் தேசம் ஆகிய இரண்டையும் ஆக்கிரமித்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகிய இரண்டு ஆக் கிரமிப்பாளர்களுமே இந்த இரண்டு தேசங்களையும் அவற் றின் பிரதேச ஒருமைப்பாட்டையும் இன அடையாளத் தனித் துவத்தையும் மதித்து அங்கீகரித்து இரண்டு வெவ்வேறு நிர்வாக அலகுகளாகவே அவற்றைக் கட்டியாண்டனர்.

ஆனால் இலங்கைத் தீவின் ஆட்சிக்கட்டுப்பாட்டை ஒல்லாந்தரிடமிருந்து பற்றிக்கொண்ட பிரிட்டன், இந்த இரு தேசங்களினதும், தேசியங்களினதும் தனித்துவங்களைப் பொருட்படுத்தாது தமது நிர்வாக வசதிக்காக அவற்றை ஒரு நிர்வாக அலகின் கீழ் கொண்டுவந்து ஒற்றையாட்சி அமைப்பைத் திணித்தனர்.

இப்படி பிரிட்டனின் அந்நிய குடியேற்றவாதம், பொறுப் பற்று நடந்துகொண்டதன் மூலம்

இலங்கைத்தீவில் எண்ணிக்கையில் சிறுபான்மையின ரான தமிழர்களின் தேசம் மற்றும் தேசியத்தின் தனித்துவத்தை எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் கைகளில் சிறைவைக்க இடமளித்து, இந்தத் தீவின் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டது.

இலங்கைத் தீவில் கிறிஸ்துவுக்கு முந்திய காலம்வரை தொடர்ந்து செல்லும் தொன்மைமிக்க ஆழமான வரலாற்று வேரோடல்களைக் கொண்டுள்ள சிங்களவர்களும் தமிழர் களும் தனித்தன்மைகளையுடைய இனங்களாகக் கணிக்கப் படும் தேசத்தையும், தேசியத்தையும் இனக் கட்டமைப்புச் சிறப்பியல்புகளையும் கொண்டுள்ளனர்.

அந்தத் தனித்துவத்தை புறமொதுக்கி, தமிழர் தேசத்தின் பிரதேச ஒருமைப்பாட்டைச் சிதைத்து, அதன் இறைமையைத் தீவின் பெரும்பான்மையின சிங்களவர்களிடம் அடிபணிய வைத்ததன் மூலம் இலங்கைத் தீவில் தீர்க்கப்படமுடியாத வகையில் இனப்பிரச்சினை மோசமடைவதற்கு கால்கோள் இட்டு, வரலாற்றுத் தவறு இழைத்தவர்கள் பிரிட்டிஷாரே.

அதுமட்டுமல்ல.

2002 முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய அமைதி முயற்சிகளில் இலங்கை அரசுத் தரப்பினரும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான புலிகளும் சமதரப்பு அந்தஸ்தோடு பங்குபற்றி, அதனை முன்னெடுக்க அப்போது திடசங்கற்பம் கொண்டனர்.

அந்நிலையில், அதில் ஒரு தரப்பினரான புலிகளை, சுமார் இருபத்தியைந்து நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத நாடாகப் பட்டியலிட்டு அறிவிக்க அந்த அமைப் பைத் தூண்டி, அதற்கான கைங்கரியத்தை முன்னின்று நடத்தி யதும் பிரிட்டன்தான்.

இப்படி அறிவிக்கச் செய்ததன் மூலம் அமைதி முயற்சிக ளில் புலிகள் தரப்பின் சம அந்தஸ்துத் தரம் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் அந்த சமாதான எத்தனங்கள் குடைசாய்வதற்கு முட்டுக்கட்டை போட்ட பெருமையையும் பிரிட்டனே சுவீகரித்துக் கொண்டது.

எனவே இவ்வாறு வரலாற்றுத் தவறுகளைத் தொடர்ந்து புரிந்து இந்தத் தீவின் அமைதியும், சமரசவாழ்வும், நல்லி ணக்க சுமுக நிலையும் பாதிப்புறவும், தமிழர்களுக்கு காலாதி காலக் கெடுதி நேரவும் காலாக அமைந்த பிரிட்டன், அதற் கான பிராயச்சித்தத்தைச் செய்யவேண்டிய கடப்பாட்டிலும் பொறுப்பிலும் உள்ளது என்பதை அதன் ஜனநாயகத் தலை வர்களுக்கு எம். பிக்களுக்கு நினைவூட்டவும் சுட்டிக்காட்ட வும் விரும்புகிறோம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.