Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கும் குப்பையில் இருந்து தயாரித்த உரங்கள் 20 இடங்களில் விற்பனை

Featured Replies

2019-11-18@ 00:03:49

Dkn_Tamil_News_2019_Nov14__427898585796357.jpg

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில்  மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின்  மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை சென்னை மாநகராட்சியிடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் கையிருப்பு இருந்தது. மேலும் இந்த  உரம் நே‌ஷனல் அக்ரோ பவுண்டே‌ஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபரட்டரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு உகந்தவை என்றும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உரம் கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார். இதன்படி பொதுமக்கள் 9445194802 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப்பில்   தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உரத்தின் அளவை குறிப்பிட்டு முழு முகவரியை வழங்கினால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டுவந்து வழங்கப்படும். அதற்கான பணம் டெலிவரியின்போது வீட்டிலேயே  பெறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களில் உரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது : டோர் டெலிவரி திட்டத்தின் மூலம் தற்போது வரை 9910 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.98 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. பொதுமக்களின் இந்த ஆதரவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய  இடங்களில் உர விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி பீனிக்ஸ் மார்கெட் சிட்டி, ஸ்கைவாக், சிட்டி சென்டர் உள்ளிட்ட வணிக வளாகங்கள், விஜிபி கோல்டன் பீச், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 20  இடங்களில் விற்பனை  இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541647

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.