Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்தறை பாலட்டுவவில் இருந்து நாட்டின் ஜனாதிபதி வரை...

Featured Replies

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

1949 ஜூன் 20ம் திகதி மாத்தறை, பாலட்டுவவில் பிறந்த கோட்டாபய ராஜபக்‌ஷ சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தண்டினா திஸாநாயக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் உள்ள 9 பேரில் இவர் ஐந்தாமவர்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்ற கோட்டாபய 1971 இல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். அவரது இராணுவ சேவையின் போது பாதுகாப்புக் கல்வி தொடர்பான முதுமாணி பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றார். அத்துடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உயர் பயிற்சிகளைப் பெற்றார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவற்றுக்குத் தலைமை தாங்கியமைக்காக அவருக்கு 'ரணவிக்ரம' பதக்கமும் தீரம் மற்றும் போரில் திறமை காட்டியமைக்காக 'ரணசூர' பதக்கமும் இவருக்குக் கிடைத்தன.

அத்துடன் செயலில் தைரியம் காட்டிய இராணுவத் தளபதி என்ற பாராட்டு இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. 1991 இல் இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக இருந்து ஓய்வு பெற்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்று தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பெற்றார்.

அதன் பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற அவர், கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லொயோலா சட்டக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப தொழில் சார்பாளராக பணியாற்றினார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அயோமா என்ற மனைவியும் மனோஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். மனோஜ் ராஜபக்ஷ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள டீயூக் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியல் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகிய இரு துறைகளிலும் பட்டம் பெற்றவர். அத்துடன் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முறைமைப் பொறியியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளதுடன் நாசா நிறுவனத்தில் ஆய்வுகூடத்தில் பணி புரிகிறார். மனோஜின் மனைவியான செவ்வந்தி வினோனா பல்கலைக்கழகத்தில் உயிரணு மற்றும் மூலக் கூற்று உயிரி விஞ்ஞான பட்டதாரியாவார். இவர் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணிப்பாளராக பணிபுரிகிறார்.

2005 தேர்தலையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை திரும்பினார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து அவரது பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய நியமிக்கப்பட்டார். இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த பயங்கரவாத யுத்தத்தை அவர் தனது நிபுணத்துவ முறையில், இராணுவ தந்திரோபாயத்துடன் திறமையாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார். யுத்தம் முடிவுற்றதும் நாட்டில் ஸ்திர நிலையை அவர் துரித கதியில் ஏற்படுத்தினார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்தினார். யுத்தத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் கண்ணி வெடியகற்றும் செயற்பாடுகளை அவர் விரைவுபடுத்தினார். அதேநேரம் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் துரித கதியில் குடியமர்த்தினார். அத்துடன் 13 ஆயிரத்து 500 முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளை வெற்றிகரமாக புனவர்வாழ்வுக்குட்படுத்தினார். 2009 இல் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2010 ஏப்ரல் 25ம் திகதி பாதுகாப்பு செயலாளர் பதவிக்குப் புறம்பாக நாட்டின் நகர அபிவிருத்தி திட்டமும் அவரும் பொறுப்பளிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் நகரங்களை மெருகுபடுத்தியதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர் மேம்படுத்தினார்.

அதனையடுத்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 ஜனவரி 9ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவியைத் துறந்தார். அதன் பின் ‘வியர்மக’ (சிறந்த எதிர்காலத்துக்கான தொழில் சார்பாளர்கள்) என்ற அமைப்பினை அவர் உருவாக்கினார். வியர்மக வளர்ந்து வலுப்பெற்று கோட்டாபயவை எதிர்கால தலைவராக உருவாக்க பெரிதும் உதவியது.

2019 இல் கோட்டாபய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த நவம்பர் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://www.thinakaran.lk/2019/11/18/கட்டுரைகள்/44018/மக்கள்-வழங்கிய-தீர்க்கமான-ஆணை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.