Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையகத்திற்கு பல்கலைக்கழகம் : ஆராய்ந்து செயற்திட்ட அறிக்கையை சம்ர்பிக்க குழு நியமனம்

Featured Replies

இரா.செல்வராஜா)

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து செயல் திட்ட அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ் தலைமையில் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

arumugam.jpg

இக்குழுவில் மலையகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளேன்.இக்குழுவினர் பல்கலைக்கழகம் அமைய வேண்டிய இடம் தேவையான வளங்கள் மற்றும் ஏளைய தேவைகள் குறித்து செயற்திட்ட அறிக்கையை சமர்பிப்பார்கள்.

குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , உயர்கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்

இத்தகவலை தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/69705

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!! 🙌

  • தொடங்கியவர்

மலையகத்தில் அதிகரித்துவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை !

ஆரம்ப காலங்­களில் தோட்­டங்­களில் எந்த வித­மான அடிப்­படை வச­தி­களும் இல்­லாத மாட்டுத் தொழு­வங்கள் போன்ற கட்­டி­டங்­க­ளி­லேயே பாட­சா­லைகள் இயங்கி வந்­தன. இந்தப் பாட­சா­லை­களின் உண்­மை­யான நோக்கம் பிள்­ளைகள் கல்வி பெற வேண்டும் என்­பது அல்ல. அவர்கள் வீட்டில் இருந்து ஓடி­யாடித் திரியும் போது  தேயிலைக் கொழுந்தைக் கிள்ளி சேதம் ஏற்­ப­டுத்தி விடக் கூடாது என்­பதால் கங்­காணி ஒரு­வரை நிய­மித்து பிள்­ளை­களை காலையில் பாட­சா­லைக்கு அழைத்துச் சென்று பகல் வேளையில் மீண்டும் வீட்­டுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இது பாட­சாலை என்ற போர்­வையில் மாண­வர்­களை சில மணித்­தி­யா­லங்கள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சிறைக் கூடங்கள் என்றும் கொள்ளலாம்.

  அதே­நேரம்,  அந்தக் காலத்தில் இருந்த சில பெரிய கங்­கா­ணி­மார்கள், தொழிற்­சங்­க­வா­திகள் மலை­யக சமூகம் அதிகம் படித்து விடக் கூடாது என்­பதில் கண்­ணாக இருந்­தார்கள். அவர்­களின் கல்விக் கண் திறந்து விட்டால்  அவர்­களை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடி­யாமல் போய்­விடும் என்­பதில் விழிப்­பாக இருந்து வந்­தார்கள்.

இத்­த­கைய “சிந்­த­னை­வா­தி­க­ளுக்கு” மத்­தியில் தான் மலை­யகம் படிப்­ப­டி­யாக விழிப்­ப­டையத் தொடங்­கி­யது. 1960 களில் அம­ரர்கள் இர. சிவ­லிங்கம், திருச்­செந்­தூரன் போன்­ற­வர்கள் மலை­யக மக்­களின் கல்வித் தேவை தொடர்­பான சிந்­த­னையை வளர்க்கத் தொடங்­கி­னார்கள்.

அந்தக் காலத்­தி­லேயே மலை­யக மாண­வர்கள் பல்­கலைக் கழகம் சென்று பட்டம் பெறத் தொடங்­கி­யி­ருந்­தார்கள்.

   கடந்த நாற்­பது ஆண்டு காலப் பகு­தியில் மலை­யகம் கல்­வியில் பாரிய வளர்ச்­சியைக் கண்­டுள்­ளது. இன்று தோட்­டங்கள் தோறும் பட்­ட­தா­ரிகள் உரு­வாகி வரு­கின்­றார்கள். குடும்ப கஷ்­டத்­துக்கு மத்­தி­யிலும்  கூட பல்­கலைக் கழ­கங்­களில் உயர்­கல்வி பெற்று வரு­கின்ற மாண­வர்­க­ளுக்கு எந்­த­வொரு தொழிற்­சங்­கமும் புலமைப் பரிசில் வழங்கி ஊக்­கு­வித்­துள்­ள­தாகக் கூற முடி­யாது. தோட்டத் தொழி­லா­ளர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மாதாந்தம் கோடிக் கணக்கில் சந்தாப் பணத்தை பெற்று வரும் தொழிற்­சங்­கங்கள்  அதில் எத்­தனை ஆயிரம் ரூபாவை தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­களின் கல்­விக்­காக புலமைப் பரிசில் வழங்கி ஊக்­கு­வித்து வந்­துள்­ளன என்று கூற முடி­யுமா? எனவே,  தோட்டத் தொழி­லா­ளர்­களின் சந்தாப் பணத்தை பெற்­றுக்­கொண்டு அந்த  சமூ­கத்தின் கல்வி வளர்ச்சி குறித்து சிந்­திக்­கா­த­வர்­க­ளைப்­பற்றி என்ன தான் கூற­மு­டியும்?
 

இன்­றைய மலை­ய­கமும் கல்வி நிலையும்
இன்று மலை­யக சமூகம் மேல்­நோக்­கிய நகர்வைக் கொண்­டுள்­ளது. சுமார் 15 இலட்சம் சனத் தொகையைக் கொண்­டுள்ள மலை­ய­கத்தில் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் பேர் வரையில் தான் தோட்­டங்­களில் வேலை செய்­கின்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். ஏனையோர் அரச நிறு­வ­னங்­க­ளிலும் தனியார் துறை­க­ளிலும் ஏதோ ஒரு­வ­கையில் வேலை செய்­ப­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள்.

எனவே,  தொழி­லா­ளர்­களை மாத்­திரம் வைத்துக் கொண்டு மலை­யகம் தொடர்­பான கருத்­துக்­களை கூறு­வதில் அர்த்­தங்­க­ளில்லை.

    நுவ­ரெ­லியா, கண்டி, மாத்­தளை, பதுளை, இரத்­தி­ன­புரி, கேகாலை, களுத்­துறை முத­லான மலை­யகப் பகு­தி­களில் 819 பெருந்­தோட்டப் பாட­சாலைகள் அமைந்­துள்­ளன.

இவற்றில் அதி­பர்கள் உட்­பட சுமார் 15 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் அர்ப்­ப­ணிப்­போடு கற்­பித்து வரு­கின்­றார்கள். இவர்­களில் நூற்­றுக்­க­ணக்­கானோர் பட்­ட­தா­ரிகள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. அதேபோல்  இலங்கை கல்வி நிர்­வாக சேவையில் 30 பேர் வரையில் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளா­கவும்  உதவிக் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளா­கவும் இருக்­கின்­றார்கள்.

2016 ஆம் ஆண்டில் அதிபர் சேவையில் சுமார் 100 பேர் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளார்கள்.  2017 ஆம் ஆண்டில் இலங்கை கல்வி நிர்­வாக சேவைக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த 14 பேரும் ஆசி­ரியர் கல்­வி­யியல் சேவையில் 12 பேரும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளார்கள்.

   மேலும் மலை­ய­கத்தைச் சேர்ந்த 5 பேர் அமைச்­சு­களில் செய­லாளர் , உதவிச் செய­லாளர், ஆலோ­சகர் பத­வி­க­ளையும் வகித்து வரு­கின்­றார்கள். உதவி பிர­தேச செய­லா­ளர்­க­ளாக  2 பேர் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். இது­வ­ரையில் மலை­ய­கத்தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் 100 க்கும் மேற்­பட்ட பொறி­யி­ய­லா­ளர்­களும் நூற்­றுக்­க­ணக்­கான சட்­டத்­த­ர­ணி­களும் (இவர்­களில் நீத­வான்­களும் அடங்­கு­கின்­றனர்)   30 வைத்­தி­யர்­களும் உரு­வா­கி­யுள்­ளார்கள். சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்கள் 200 பேரும், கிராம சேவ­கர்கள் 250 பேரும், முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்­களும், 200 க்கும் மேற்­பட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும், இலங்கை மின்­சார சபையில் 75 பேரும்  1000 க்கும் மேற்­பட்ட சிற்­றூ­ழி­யர்­களும் அர­சாங்க நிய­மனம் பெற்­றுள்­ளார்கள்.

   வெளி­நாட்டுச் சேவையில் ஆர். கிருஷ்­ண­மூர்த்தி, பி. செல்­வ­ராஜா, கிரேஸ் ஆசீர்­வாதம் ஆகிய மூவர்  அமர்த்­தப்­பட்­டுள்­ளார்கள்.

இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தில் முக்­கி­ய­மான பத­வி­களில் உதவி ஆணை­யா­ளர்­க­ளாக மலை­ய­கத்­த­வர்கள் இருக்­கின்­றார்கள்.

  பல்­கலைக்கழக மட்­டத்தில்  மலை­ய­கத்தில் 5 வயது தொடக்­க­மான ஆரம்பக் கல்­வியின் அடைவு மட்டம் தற்­போது 99 வீதமாகக் காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் உள்ள 15 தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் 1000 க்கும் மேற்­பட்ட மலை­யக மாண­வர்கள் உயர்­கல்வி பெற்று வரு­வ­தோடு, 21 பேர் விரி­வு­ரை­யா­ளர்­க­ளா­கவும்  தற்­போது எஸ். விஜ­ய­சந்­திரன் பதவி நிலையில் பேரா­சி­ரி­ய­ரா­கவும், கலா­நிதி பட்டம் பெற்­ற­வர்­க­ளாக ஏ.எஸ். சந்­தி­ரபோஸ், இரா. ரமேஷ், எஸ். கரு­ணா­கரன் உள்­ளிட்ட 6 பேரும் இருக்­கின்­றார்கள்.

முழு மலை­ய­கத்­திலும் 3000 க்கும் மேற்­பட்ட பட்­ட­தா­ரிகள் உள்­ளார்கள். பேரா­தனை, யாழ்ப்­பாணம், கிழக்கு மற்றும் தென்­கி­ழக்குப் பல்­கலைக் கழ­கங்­களில் வெளி­வாரி பட்­டப்­ப­டிப்பை நூற்­றுக்­க­ணக்­கான மலை­யக இளை­ஞர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். அத்­தோடு, இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழகம், காம­ராஜர் பல்­கலைக் கழகம், அழ­கப்பா பல்­கலைக் கழகம், அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழகம் போன்­ற­வற்றில் ஏரா­ள­மானோர் பட்டம் பெறு­வ­தற்­கான பாட­நெ­றி­களைப் பின்­பற்றி வரு­கின்­றார்கள். இவை தவிர  இந்­திய அர­சாங்­கத்தின் புலமைப் பரிசில் பெற்று 30-40 பேர் வரையில் கல்­வி­மாணி, முது­மாணி பட்­டமும் பெற்று வரு­கின்­றார்கள்.

  டிக்­கோயா மணிக்­க­வத்தை தோட்­டத்தைச் சேர்ந்த சசி­குமார் என்ற பேரா­தனை பல்­கலைக் கழ­கத்தில் பட்டம் பெற்ற மலை­யக இளைஞர் அமெ­ரிக்­காவில் உள்ள SOUTH  CAROLINA  UNIVERSITIY   யில் பேரா­சி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து வரு­கின்றார். ஒரு காலத்தில் அர­சாங்க மட்­டத்தில் 15 – 20 பேர் வரையில் சிற்­றூ­ழியர் வேலை கிடைத்தால் போதும் என்று ஏங்­கிய மலை­யகம் இன்று நினைத்துப் பார்க்க முடி­யாத அளவில் எங்கோ சென்று கொண்­டி­ருக்­கின்­றது.


பல்­கலை. மாண­வர்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு
மலை­ய­கத்தில் வறுமை கார­ண­மாக உயர்­கல்வி பெற முடி­யாமல் தலை­ந­க­ருக்கு தொழில் தேடிச் சென்ற இளை­ஞர்­களால் தமது உழைப்பின் ஒரு பகு­தியைக் கொண்டு கொழும்பு செட்­டியார் தெருவில் உரு­வாக்­கப்­பட்டு அங்­குள்ள வசதி படைத்த தாராள மனம் கொண்ட வர்த்­தகப் பெரு­மக்­களின் பங்­க­ளிப்­புடன் இயங்கி வரும் அமைப்­புதான் “மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம்” ஆகும். இந்த மன்றம் கடந்த 13 வரு­டங்­களில் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி பயின்று வரும் வசதி குறைந்த 600 மாண­வர்­க­ளுக்கு இது­வரை புல­மைப்­ப­ரிசில் வழங்கி ஊக்­கு­வித்து வந்­துள்­ளது. இந்த ஆண்டில் 130 மாண­வர்கள் புலமைப் பரிசில் பெற்று வரு­கின்­றார்கள். இது­வரை சுமார் 2 கோடி ரூபா­வுக்கு மேல் செல­வி­டப்­பட்டு வந்­துள்­ளது.

   மலை­யகக் கல்­வியின் மீது அக்­கறை கொண்டு இளை­ஞர்­களால் உரு­வாக்­கப்­பட்ட ஓர் அமைப்பு வள்­ளல்­களின் உத­வி­யுடன் இத்­த­கைய உத­வியை வழங்க முடியும் என்றால் மலை­ய­கத்தில் தொழிற்­சங்­க­மாக பதிவு செய்­யப்­பட்டு மாதாந்தம் “செக்ரோல்”  மூலம் தொழி­லா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கோடிக் கணக்கில் சந்­தாவைப் பெற்று வரு­கின்ற தொழிற்­சங்க அமைப்­புகள் நினைத்தால் எத்­தனை பேருக்கு புல­மைப்­ப­ரிசில் வழங்கி பட்­டா­தா­ரி­க­ளாக உரு­வா­கு­வ­தற்கு ஊக்­கு­வித்­தி­ருக்க முடியும் என்­பதை சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.
 

மலை­ய­கத்­துக்­கான பல்­கலைக் கழகம்
மலை­ய­கத்தில் கல்வி பற்­றிய சிந்­தனை வளர்ச்­சி­ய­டைந்து வந்த நேரத்தில் தான் மலை­ய­கத்­துக்­கான தனி­யான பல்­க­லைக்­க­ழகம் தேவை என்ற கோரிக்கை வலு­வ­டைந்து வந்­தது. இதை எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் முன்­வைக்­க­வில்லை. கல்­வி­யி­ய­லா­ளர்­களே முன்­வைத்­தார்கள்.

பல்­க­லைக்­க­ழகம் தேவை என்றால் அதற்­கான மாண­வர்­களை எங்­கி­ருந்து பெறு­வது என்ற கேள்வி எழுந்­தது. அதன் விளை­வாக வரு­டாந்தம் 500 மாண­வர்­க­ளை­யா­வது பல்­க­லைக்­க­ழகம் அனுப்ப வேண்டும் என்று அதிபர், ஆசி­ரி­யர்கள், கல்வி அதி­கா­ரிகள் சிந்­தித்து செயற்­பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு 500 க்கும் அதி­க­மான மலை­யக மாண­வர்­களை பல்­கலைக் கழ­கங்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ளார்கள். அதற்­குப்­பி­றகே  மலை­ய­கத்­துக்கு பல்­க­லைக்­க­ழகம் தேவை என்ற கருத்தை அர­சி­யல்­வா­திகள் முன்­வைத்­துள்­ளார்கள்.

    மலை­யக மக்கள் உழைப்பதற்கும் சந்தா செலுத்துவதற்கும் மட்டும் அல்ல,  தமது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் செலுத்தி வீடுகள் தோறும் பட்டதாரிகளை உருவாக்கவும் தயாராக இருக்கின்றார்கள். அப்போது மலையக மக்களை யாரும் ஏமாற்ற முன்வரமாட்டார்கள். சமூகத்தைப் பற்றிய சிந்தனையில் மகாகவி பாரதியார் பாடியதைப் போல , “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், அதுவுமற்றவர் வாய்ச்சொல் தாரீர்” என்று பாடி வைத்தார். அது மலையகதில் தொழிற்சங்கம் நடத்துகின்றவர்களுக்கும் பொருந்தும்.

சரியான புள்ளி விபரங்கள் தெரியாமல் பொது மேடைகளிலும்  ஊடகங்களிலும் மேலெழுந்த வாரியாகவும் மனம் போன போக்கிலும் கருத்துகள் கூறி மலையக மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது. ஏனெனில்,  மலையக இளைய சமூகம் நினைத்தால் அரசியல் ரீதியில் யாரும் எதிர்பாராத அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது என்பதை மறந்து விடக் கூடாது.


- பானா . தங்கம்

https://www.virakesari.lk/article/69699

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.