Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

சந்திப்புபடத்தின் காப்புரிமைANI

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லியில் சந்தித்தனர். சந்தித்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை இந்திய தலைநகர் டெல்லி வந்தடைந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 30ம் நாள் வரை 3 நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ANI
ani_mic_logo_normal.jpg
 
 

Delhi: Newly elected President of Sri Lanka Gotabaya Rajapaksa meets External Affairs Minister Dr S Jaishankar. The Sri Lankan President is on a visit to India till November 30.

View image on TwitterView image on Twitter
 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ANI

நேற்று மாலை இந்தியா வந்தடைய கோட்டாபயவை மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் வரவேற்றார்.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கோட்டாபய மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது.

அண்மையில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வென்ற கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்ற நிலையிலும், இந்தியா - இலங்கை - சீனா ஆகிய 3 நாடுகளுக்குள்ள உள்ள உறவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையிலும் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய.

அப்போது, பல்லாயிரம் தமிழர்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு.

இந்தப் பின்னணியில் கோட்டாபயவின் இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தி கைதானார்.

வரவேற்புபடத்தின் காப்புரிமைANI

கோட்டாபய இலங்கையின் புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இலங்கைக்கு நேரடியாக சென்று வாழ்த்துத் தெரிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அளித்த வாழ்த்துக் கடிதத்தையம் அவர் அப்போது கோட்டாபயவிடம் அளித்தார். அத்துடன் மோதியின் அழைப்பை ஏற்று உடனடியாக இந்தியா வருகை தரவும் அவர் ஒப்புக்கொண்டார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில், அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் நேரில் சென்று சந்தித்ததும், உடனடியாக அவர் இந்தியா வர ஒப்புக்கொண்டதும் அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை கோட்டாபய வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவார். அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திப்பார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு வெள்ளிக்கிழமை முறைப்படியான வரவேற்பு அளிக்கப்படும். காந்தியடிகள் நினைவிடமான ராஜ்காட்டுக்கும் செல்வார் கோட்டாபய.

https://www.bbc.com/tamil/india-50597088

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.