Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 சீர்காழி மீனவர்கள் மாயம்

Featured Replies

6 சீர்காழி மீனவர்கள் மாயம்

மே 11, 2007

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

மேலும் ஆறு தமிழக மீனவர்

மர்மமான முறையில் மறைவு!

கொழும்பு, மே 12

நாகைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அறுவர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் காணாமற் போயிருக்கின்றார்கள்.

இலங்கை இந்திய எல்லைக்கு உட்பட்ட கடலில் தமிழக மீனவர்கள் அடிக்கடி சுட் டுப் படுகொலை செய்யப்படுவதும், பட குடன் ஒரேயடியாகக் காணாமற் போவது மான சம்பவங்களால் தமிழகத்தின் தென் கரையோர மாவட்டங்களில் பெரும் பதற் றம் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் சம் பவங்களினால் இந்திய இலங்கை உறவி லும் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக விட யமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாகைபட்டினம் மாவட்டம், சீர்காழி அருகில் உள்ள திருமுல்லைவாசல் என்ற மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர் களே இப்போது காணாமற் போயிருக்கின் றார்கள் என்று சீர்காழி காவல் நிலையத் தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

பிரகாஷ் (வயது 30) என்பவருடன் அவ ரது "வ்வைபர்' படகில் மீன் பிடிக்கச் சென்ற ஜெயகணேஷ் (வயது 25), இளவேந்தன் (வயது 18), சசிக்குமார் (வயது 25), முத்து (வயது 32) ஆகியோரும் நாகை மாவட் டம், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த இரா ஜேந்திரன் (வயது 55) என்பவரும் கடந்த செவ்வாயன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது.

புதனன்று இரவு பத்துமணிக்கு முன்னர் கரை திரும்பியிருக்க வேண்டிய 6 மீனவர் களும் இதுவரை கரை திரும்பவில்லை. திரு முல்லைவாசல் பிரதேச மீனவர்கள் படகு களில் சென்று இவர்களைத் தேடிப் பார்த்த னர். ஆனால் எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இப்போது இந்தியக் கரையோரப் பாது காப்புப் படையினர் இவர்களைத்தேடும் பணியில் குதித்திருக்கின்றனர்.

கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் கன் னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலில் வைத்துச் சுட்டுக் கொல் லப்பட்டனர்.

பின்னர் கடந்த மாதம் "கிருஷ்ணா' என்ற படகில் கடற்றொழிலுக்குச் சென்ற கன் னியாகுமரியைச் சேர்ந்த பத்துப்பேர், தூத்துக் குடியைச் சேர்ந்த ஒருவர், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் எனப் பன்னிரண்டு மீனவர்கள் காணாமற் போயிருக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் கடலில் காணாமற் போகின்றமைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என தமி ழகக் காவல்துறை அதிகாரிகள் தகவல் வெளி யிட்ட சூழ்நிலையில், அதனைப் புலிகள் இயக்கம் அடியோடு மறுத்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் இந்திய அரசு தமி ழக மீனவர்கள் நிலைமை தொடர்பாகக் கடந்த புதனன்று இந்திய இராஜ்யசபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.ஜே. அந்தனி சமர்ப்பித்த இந்த அறிக்கையில் தமி ழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்வது குறித்து காட்டமாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக் கடற்படை மீது குற்றம் சுமத் தும் விதத்தில் இந்திய இராஜ்ய சபையில் இந்திய அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ள பின்னணியில்

மீண்டும் ஆறு இந்திய மீனவர்கள் ஒரே யடியாகக் காணாமற் போயிருக்கின்றமை மேலும் குழப்பத்தைத் தீவிரப்படுத்தியிருக் கின்றது எனக் கூறப்படுகின்றது. (சி)

உதயன்

முகர்ஜி இனி அடுத்தமுறை மணாளன் குழுதான் சுட்டிருக்குது அல்லது கடத்தி இருக்கு என அறிக்கை விடுவார்.இப்படி அறிக்கைகளால் நிச்சயம் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான் கடற்படை புலிகள் மீது இன்னும் அழுத்தத்தை இப்படியானவர்கள் மூலம் பிரயோகிக்கலாம் என கடத்தி இருபீனம் என்பது என் கணிப்பு

நிச்சயம் விடுதலைபுலிகள் இவர்களை மீட்டு கையளிப்பர் அன்று தமிழக பார்பண ஊடகங்களின் பிதற்றல் எம் தமிழக உறவுகள் முன் தவிடு பொடியாகும் என்பது நிதர்சனம்

எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.... இலங்கையில் மீண்டும் கால் பதிக்கவும் திருகோணமலையை மீண்டும் ஆதிக்கப்படுத்தவும் இந்தியாவே இதுபோன்ற கோமாளித்தனமான செயல்களில் ஏன் ஈடுபடக்கூடாது? இது ஏதோ இந்திய புலனாய்வுத்துறையின் வேலைகளில் ஒன்று தான் என நினைக்கிறேன். இந்திய கடல் எல்லைக்குள் சென்று சுடவோ அல்லது கைது செய்யவோ இலங்கை கடற்படை அவ்வளவுக்கு துணியாது. தமது அரசியல் இலாபங்களுக்காக ஆளும் வர்க்கத்தினர் தமது சொந்த மக்களயே வெடிகுண்டு வைத்து கொல்லும் சம்பவங்களை சாதாரனமாகவே இந்திய சினிமாக்களில் காணக்கூடியதாகவே இருக்கிறது. நிஜங்களில் இருந்து பெறப்பட்டதே பெரும்பாலான சினிமாக்கதைகள்

எது எப்படி இருந்தாலும் பாவம் அப்பாவி ஏழை மீனவர்கள் இவர்களின் வக்கிரத்துக்கு பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனர்.

ஏன் மாலைதீவை ஆக்கிரமிக்க இலங்கை புளொட் கும்பலை பயன் படுத்தியது இந்திய வல்லாதிக்கம் என்பதை நான் இந்த இடத்திலே ஞாபகப்படுத்துகின்றேன். எனவே மரியா என்ற படகில் யார் யார் வந்தாரோ? அது "றோ" விற்கே வெளிச்சம்.

Edited by mathuka

மதுகாவின் கருத்தே எனது கருத்தும். கடத்தப்பட்டதாக சொல்லப்படும் தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் மீட்டு ஒருநாள் கையளிப்பார்கள் என்ற ஈழவன்85 னின் கருத்தில் நியாயமிருந்தாலும் விடுவிக்கப்பட்டவர்களை விலைகொடுத்துவாங்கி தமக்குச் சாதகமாக பயன்படுத்தவும் "றோ" தயங்காது என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். தங்களை விடுதலைப்புலிகள் தான் கடத்தினார்கள் என்ற அப்பட்டமான பொய்யை விடுவிக்ககப்பட்டவர்கள் ஊடாகவே சொல்ல வைப்பதற்கு அதிகநேரம் செல்லாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.