Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ மயப்படும் அரசியல்

Featured Replies

இராணுவ மயப்படும் அரசியல்

அண்மையில் சிறிலங்கா சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சிறிலங்கா இராணுவத்திற்கு சிவில் நிர்வாக விஷயங்களைக் கையாள்வதற்கான அதிகாரம் இராணுவத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் வெளிவந்து சிலமணி நேரத்திற்குள்ளேயே சிறிலங்கா இராணுவ வடபகுதிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ்.குடா நாட்டில் சீரான உணவு விநியோகம் நடைபெறுகிறது எனவும், எரிபொருள் போதியளவு கையிருப்பில் உண்டு எனவும் சிவில் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது இனி அரச அதிபரால் மேற்கௌ;ளப்பட்ட விடயங்கள் யாவும் இராணுவத்தளபதிகளால் மேற்கொள்ளப்படும். அல்லது, அவற்றின் மேல் இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாடு இருக்கும் என்பதன் வெளிப்பாடே அவரின் அறிக்கையின் வெளிப்பாடாகும். இது வெளிப்படையாக நோக்கும் போது இது ஒரு போர்க்காலம் என்பதனால் போரிற்கு இசைவாக ஏனைய விஷயங்களைக் கையாளவே இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பது போலவே தோன்றும் ஆனால் தெடர்ச்சியாக .இடம் பெற்று வரும் இராணுவ அரசியல் நகர்வுகளை நோக்கும் போது இம்மாற்றத்திற்கு அதைவிட ஆழமான பரிமாணம் உண்டு என்பது புலப்படுகின்றது.

தமிழர் தாயகப்பகுதிகளில் ஏற்கனவே ஒரு இராணுவ சர்வதிகார ஆட்சியே இடம் பெற்று வருகின்றது அது மட்டுமன்றி அப்படி ஒரு ஆட்சிக்கு அவசரகாலச்சட்டம் என்பன மூலம் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கேள்வி நியாயமற்ற கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் இடம்பெயர வைத்தல் எனப்பலவித கொடுமைகளும் இடம்பெற்று வருகின்றன.

இச்சட்டங்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடனேயே கொண்டுவரப்பட்டன. இவை கொண்டு வரப்படுவதற்கும் கொடூரமான முறையில் அமுல் படுத்தப்படுவதற்கும் எதிர்கட்சிகள் உட்பட சிங்கள அரசியல்கட்சிகள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கின .

ஆனால், இன்று சட்டங்கள் சிங்கள அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது இச்சட்டங்கள் தமிழ் மக்கள் என்ற எல்லையைக் கடந்து சிங்கள மக்கள் மேலும் விரிய ஆரம்பித்து விட்டன. இதன் வெளிப்பாடே மௌபிம, டெய்லிமிறர் பத்திரிகைகள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்களும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி பொன்றோரின் கைதுகளுமாகும். இப்படியான ஒரு நிலையிலேயே அண்மைய வாத்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.

தமிழர் தாயகப்பகுதிகளின் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளைப் பொறுத்தவரையில் இராணுவமே சிவில் நிர்வாகத்தை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அத்தியாவசிய தேவைப் பொருட்களின் விநியோகம் மின்சாரம் எரிபொருள் விநியோகம் போக்குவரத்து முதலிய சகல அம்சங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இடம் பெறுகின்றன அடிக்கடி சந்திப்புக்கள் என்ற பெயரில் இடம் பெறும் கூட்டங்கள் மூலம் அதிகாரிகள் இயல்பாகவே படை அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

இப்படியான ஒரு நிலையில் தமிழர் தாயகப்பகுதியை பொறுத்தவரை இப்படி ஒரு வர்த்தமானி அறிவித்தல் அவசியமில்லை அப்படியானால் இது ஏன் விடுக்கப்பட்டது?

இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் குறிப்பாகக் கொழும்பிலும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் காணாமற்போதல்கள் இயல்பான விடயங்களாகிவிட்டன. இவை ஆயுதப்படைகளின் ஒத்துழைப்போடு துணை இராணுவக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெட்டத்தெளிவான விடயமாகும் இவற்றைத்தடுத்து நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என உள்ளுர் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன. சில வெளிநாட்டுத் தூதரகங்களும் சிறிலங்கா மூலம் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இப்படியான ஒரு நிலையில் சிறிலங்கா அரசு பல சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தோன்ற ஆரம்பித்து விட்டது.

இப்படியான ஒரு சனநாயக விரோதம் சூழலில் சிவில் கட்டுக்கோப்புகளை இராணுவமயப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பும் முயற்சியில் இதுவும் ஒன்று எனவே கருதப்படுகின்றது,

இன்றைய மகிந்த ஒரு போரை நோக்கி வேகமாக முன் சென்று கொண்டிருக்கிறது. சமாதான முயற்சிகளுக்கான ஒரு சிறு நகர்வைக் கூடத் தடுத்து நிறுத்துமளவுக்கு போரின் பால் முனைப்புக் காட்டி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சர்வதேசத்தைத் அணிதிரட்ட எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்ட போதிலும் இது சிங்களத்தால் வெல்லப்படக்கூடிய ஒரு போர் என்ற மாயையை ஊட்டுவதன் மூலம் சிங்கள மக்களைப் போருக்கு ஆதரவாக அணி திரட்டி வருகிறது. அதனால் ஒரளவு வெற்றியும் பெற்றள்ளது. அண்மையில் சிங்கள மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட சில கருத்துக் கணிப்புகள் கூட இவ்விடயத்தை வெளிப்படுத்தி உள்ளன.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போர் வெற்றி பற்றிய மாயையை சிங்கள மக்கள் மத்தியில் எற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்ற போதிலும் கட்டுநாயக்கா பலாலி விமானத்தளங்கள் மற்றும் கொழும்பு எரிபொருள் மையங்கள் மீது நடத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் இந்நம்பிக்கை மீதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன அது மட்டுமன்றி மன்னார் வவுனியா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சிகளில் ஏற்பட்ட படுதோல்விகளும் மஹிந்த அரசின் போர் வலு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

இப்படியான ஒரு சூழ்நிலையில் முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க போன்ற படைத்துறை அனுபவசாலிகள் பாதுகாப்புச் செலவீனங்களை 1.6 பில்லியனிலிருந்து 2. பில்லியனாக அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர். இது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக எழுந்துள்ளது.

எனவே இப்படியான பாதுகாப்பு செலவின அதிகரிப்பு தென்னிலங்கைப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தப் போவது தவிர்க்க முடியாததாகும்.

இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வழிகளும் மிக வேகமாக அடைக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்க முடியும் விடுதலைப் புலிகளின் விமானத்தாக்குதல்கள் துறை முகங்களின் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உட்பட தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை மழுங்கடிப்பதுடன் சுற்றுலாத்துறையில் பெரும் வீழ்ச்சியையும் எற்படுத்தியுள்ளது.

இன்னொரு புறம் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காரணமாகவும் சர்வதேசத்தின் சமாதான முயற்சிகளுக்கு விரோதமான நடவடிக்கைகள் காரணமாகவும் வெளிநாடுகளின் உதவிகளை எதிர்பார்க்க முடியாத ஒரு நெருக்கடி உருவாகும் நிலையில் நிலையும் தோன்றியுள்ளது.

இதன் அறிகுறியாக அண்மையில் சனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவினதும் அவரது அரசாங்கத்தினதும் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. சனாதிபதி ஆலோசகர் சுனில் பெரேராவால் நாடளாவிய அளவில் நடத்தப்பட்ட இக்கணிப்பீட்டில் மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கு ஆறுமாத காலத்தில் 58.05 வீதத்திலிருந்து 50.2வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு தேர்தல் நடைபெறுமானால் ஆறுமாதங்களுக்கு முன்பு 100 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்சமயம் 82 ஆசனங்களை மட்டுமே பெறும் என இக்கணிப்பீடு உணர்த்தியுள்ளது.

இது மட்டுமின்றி இன்றைய அரசின் பாராளுமன்ற பலம் கூட நம்பிக்கையளிப்பதாக இல்லை. மஹிந்த சிந்தனை என்ற சுலோகத்தை வைத்துக் கொண்டு ஜே.வி;பி அரசாங்கத்தை தனது நோக்கங்களுக்கமைய ஆட்டிப்படைத்து தனது சொந்த அரசியல் செல்வாக்கை மக்கள் மத்தியில் பெருக்கி வருகிறது. ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து கட்சிமாறி அரசுடன் இணைந்தவர்கள் மீண்டும் எந்நேரமும் ஐக்கிய தேசியக்கட்சிக்குப் பாயக்கூடும். இதே போன்று முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளும் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என நம்ப முடியாது.

எனவே வெகுவிரைவிலேயே மஹிந்தரின் அரசாங்கம் பெரும் பொரளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்கும் நிலையையும் உருவாகப் போவது நிச்சயம்.

இப்படியான ஒரு நிலையில் அரசாங்கத்தைப் பாதுகாக்ககூடிய ஒரே ஒரு சக்தி இராணுவபலம் மட்டும் தான். இவ்வகையில் முப்படைகளின் தளபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளரான அவரது சகோதரர் கோதாபய ராஜபக்சவும் உள்ளனர். அதாவது இராணுவத்தின் மீதான கட்டுப்பாடு ராஜபக்ச குடும்பத்தினரின் கையிலேயே உள்ளது. இவற்றிற்கு ஏற்ப இராணுவ உட்கட்டமைப்புகளில் மாற்றம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு நிலையிலேயே சிவில் நிர்வாகம் தொடர்பான குறிப்பாக பொலிஸ் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கு அவசர வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சனநாயக சட்டங்கள் மூலம் ஒரு சர்வதிகாரத்திற்கான ஒரு அடித்தளம் இடப்படுகின்றது என்ற உண்மை இங்க புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்கா இராணுவ முகாம்கள் சித்திரவதை கூடங்களாக மாற்றப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்ட கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது இதுவரையில் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலவி வந்த இராணுவ சர்வதிகாரம் இராணுவ மயப்படுத்தப்படும் அரசியல் மூலம் தென்னிலங்கைக்கும், இன்னொரு வார்த்தையில் சொல்லப் பேனால் தென்னிலங்கையில் எழக்கூடிய சகல எதிர்ப்புகளும் இராணுவமயப்படுத்தப்பட்ட குடும்ப சர்வதிகாரம் மூலம் அடக்கி ஒடுக்கப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.