Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன நீரோ மன்னன்

Featured Replies

நவீன நீரோ மன்னன்

நாடு கெட்டுக்கிடக்கிறது. இரவில் நிம்மதியாகக் கூடத்தூங்க முடியாமல் சனங்கள் பரிதவிக்கிறார்கள். பஸ்ஸில் கலக்கமில்லாமல் பயணம் செய்;யமுடியாது. விதைத்த வயலை அறுக்கமுடியாமல், வீட்டிலிருக்கும் நெல்லையோ அரிசியையோ போய் எடுக்க வழியில்லாமல் அகதி முகாம்களில் சனங்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளில்லை. அப்படியல்ல வீடுகளிருக்கு ஆனால் அவற்றில் இருப்பதற்கு அனுமதி இல்லை. நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் நடக்கவேயில்லை.

பாதைகளுமில்லாமல் பயணங்களுமில்லாமல் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் ஒரு தடவையாவது பங்கருக்குள் நுழையாமல் அன்றிரவு படுக்கைக்குச் செல்ல முடியாது. இவ்வளவும் இலங்கைத்தீவில் நடக்கிறது. அதுவும் தமிழ்மக்களுக்குத்தான் இந்தப்பரிசெல்லாம்.

தமிழர்களுக்கு இந்தப்பரிசைக்கொடுத்து விட்டு சிறிலங்கா ஜனாதிபதி மேற்கிந்தியத்தீவுகளுக்கு உலகக் கிண்ணப்போட்டியைப்பார்க்கப் போயிருந்தார். அவர் என்ன செய்வார். இந்தப்பிரச்சினைகளுக்காக விறுவிறுப்பாக நடக்கும் கிரிக்கெற்றைப் பார்க்காமலிருக்க முடியுமா. அதுவும் உலகக்கிண்ணப்போட்டியை. அதிலும் அவருக்கு இப்போது பல தரப்பாலும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து அவர் சற்று விலகி றிலாக்ஸாக இருக்கவேண்டாமா.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் பறக்கின்றன, தாக்குதல் நடத்தப் போகின்றன என்ற அச்சத்தில் கொழும்பு இரவிரவாக அல்லோலப்படுகிறது. கட்டுநாயக்காவுக்கு வருகின்ற பயணிகள் விமானங்களைக்கூட தரையிறக்க முடியாத நிலையில் விமான நிலைய அதிகாரிகள் திண்டாடுகிறார்கள்.

தரை இறங்க வேண்டிய விமானத்தை சென்னைக்கு வழிமாற்றி, சென்னையில் கெஞ்சிக்கூத்தாடி அங்கே தரையிறக்க வேண்டிய இக்கட்டில் தாங்களிருப்பதாக அந்த அதிகாரிகள் மேலும் கவலை தெரிவிக்கிறார்கள். அமைச்சர்களும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் வெளியாரைச் சந்திக்கும்போது இலங்கையில் தொடரப்படும் மனி உரிமை மீறல்கள் தொடர்பாக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப்பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். இப்படியெல்லாம் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதற்காக உலகக்கிண்ணப்போட்டியை அவர் பார்க்காமலிருக்க முடியுமா.

நடப்பது நடக்கட்டும். எது நடக்குமோ அது நடக்கிறது. எது நடக்கவுள்ளதோ அது நடக்கும். இந்தமாதிரியான ஒரு எண்ணப்போக்கில் திரு. மகிந்த ராஜபக்ஸ கிரிக்கெற் ஆட்டக்களத்தின் ஓரத்தில் கைகளைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி இருந்தார். அவர் தன்னுடைய வீரர்களை உற்சாகப்படுத்தினார். வெற்றிகளைக்குவிக்கவேண்டும் என்று அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

இப்படித்தான் அவர் வாகரையிலும் தமிழ்ச்சனங்களின் வீடுகளையும் வாழிடங்களையும் அழித்த படை வீரர்களைத்தட்டிக் கொடுத்தார். தினமும் தமிழ்ச் சனங்களின் தலைகளிலே குண்டுகளைப்போடும் விமானமோட்டிகளையும் அவர் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அவருக்கு எல்லாமே விளையாட்டுத்தான். எல்லாமே வேடிக்கைதான். அவருக்கு மகிழ்ச்;சி வேணும். சந்தோசத்தை விரும்பாமல் இந்த உலகத்தில் யாராவது இருப்பார்களா. அதுவும் இந்தப்பெரிய அதிகாரத்தை வைத்துக்கொண்டு. கடவுளே …

அவருடைய மகிழ்ச்சிக்கு இப்படியெல்லாம் அவர் கஸரப்படவேண்டியிருக்கிறது என்பது கொஞ்சம் கவலையளிக்கிற விசயம்தான். என்றாலும் இதைத்தவிர, இப்படி மகிழ்ச்சி அடைவதைத்தவிர அவரால் வேறு என்னதான் செய்யமுடியும்.

மனித உரிமை மீறல்கள் நடக்கிறது, அதைக்கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது, போர் நிறுத்தத்தை மீறியதன் விளைவுகளே இவையெல்லாம் என்று தொடர்ந்து அவரை எல்லோரும் நச்சரித்தால் அவர்தான் என்ன செய்வார். உலகத்தில் மற்றவர்கள் செய்யாத குற்றங்களையா தான் செய்கிறேன் என்று குற்றம் சாட்டுகிற ஆட்களைப்பார்த்து நாலு கேள்வி கேட்கவேண்டும் போலத்தானிருக்கிறது அவருக்கு. ஆனால் அப்படிக்கேட்டு ஏன் இப்ப இருக்கிற நிலைமையைவிட மோசமான நிலைமையை உருவாக்க வேணும் என்றும் உள்ளுர ஒரு அச்சம். அதைவிட அப்படிக்கேட்டாலும் பிறகு அவர்களிடம்தானே காசுக்கும் பிற தேவைகளுக்கும் போக வேணும் என்றும் அவர் யோசிக்கிறார்.

கையேந்தி நிலையில் இருந்து கொண்டு கண்டபடிலெ;லாம் கதைக்கக்கூடாது என்பார்கள். அப்படி ஏதாவது ஏடாகூடமாக கதைத்து பிறகு தீராத சிக்கலில் மாட்டிவிட்டால் அது தேவையில்லாத வம்பாகி விடும். அவரைப்பொறுத்தவரை இப்பவே ஒரு நாளைக்கடத்துவதற்கு படுகிற பாடுகள் கொஞ்சமல்ல. இதைவிட இன்னும் கூடுதல் துன்பம் என்றால் பேசாமல் யாரையாவது அந்த இடத்திற்கு மாட்டிவிட்டு தப்புவதைத்தவிர வேறுவழியில்லை என்றும் ஒரு எண்ணம் தோன்றுகிறது.

தனக்கு முதல் ஆட்சியில் இருந்தவர்கள் எதைத்தான் உருப்படியாகச் செய்திருக்கிறார்கள். போரை ஒழுங்காகச் செய்தார்களா. அல்லது நாட்டை அபிவிருத்தி செய்து உருப்படுத்த்;p வைத்திருக்கிறார்களா. புலிகளை ஒடுக்கினார்களா. எதைத்தான் சரியாகச் செய்திருக்கிறார்கள். கடைசியில் பொறிந்து விழக்கூடிய நிலையில் கதிரையை வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப்பொறிந்து விழும் கதிரையில்தான் இப்போது தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் ராஜபக்ஸவுக்கு வந்தது.

ஜே.ஆர் பதினேழு வருசம் ஆட்சி நடத்தியிருக்கிறார். கடைசியில என்னத்தைப்புடுங்கிக்கிழித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.